Saturday, July 26, 2014

ச்சும்மா அதிருதுல்ல...

  எழுத்துப் பிழை ஏற்பட்டாலோ,  கையெழுத்து சரியில்லாமல் போனாலோ,  அதிந்து எச்சரிக்கும் பேனாவை ஜெர்மனி,  முனிச் நகரைச் சேர்ந்த டேனியல் மற்றும் பால்க் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  ' லெர்ன்ஸ்டிப்ட் ' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பேனாவின் உள்ளே சிறிய சென்சார் மற்றும் பேட்டரியில் இயங்கும் கம்ப்யூட்டர், வை - பை சிப் ஆகியவை இடம்பெற்றுள்ளன்.
    பேனாவின் அசைவைக் கொண்டு,  எழுத்துகளின் வடிவத்தை இந்த கருவிகள் அடையாளம் காண்கின்றன.  நுண்ணிய கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அகராதியின்படி,  தவறான எழுத்தை எழுதும்போது,  பேனாவின் சென்சார் அதை கிரகித்து ' தப்பா எழுதாதடா மக்கு ' என்று அதிர்ந்து குட்டுமாம்.
-- தாண். ஆதித்யா.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013   

No comments: