Saturday, July 19, 2014

தெரியுமா உங்களுக்கு!

*  முத்து பிறக்கும் இடங்கள் பலவற்றை இலக்கியங்கள் குறிக்கும்.  முத்துப் பிறக்கும் இடங்களில் ஒன்று மூங்கில்.
*  பெரும்செல்வத்தைப் பாதுகாத்தல் ' கார்ப்பண்யம் ' எனப்படும்.
*  அனுபவிக்காமல் இருத்தல்,  செல்வத்தின் மீது பற்று ஆகியவை செல்வந்தனைக் கஞ்சனாக்கி விடும்.
*  சிக்கனம் வேறு;  கஞ்சத்தனம் வேறு.  அளவுக்குள் செலவை அமைத்தல் சிக்கனம்.  அத்தியாவசிய நேரத்தில் கூட,  தனக்காகக்கூடச் செலவு செய்யாமல்
   இருப்பவன் கஞ்சன்.
*  சீர்காழிக்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு.  அவற்றுள் வேணுபுரம் என்பதும் ஒன்றாகும்.
* ' போலச் செய்தல் ' என்ற தன்மை, கற்றலின் அம்சங்களில் ஒன்று. மனிதனைக் கூர்ந்து பார்த்து, அவர் செய்தது போலவே செய்யும் போலச் செய்தலில்
   குரங்குகள் வல்லவை.
--  தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 29, 2013.  

No comments: