Tuesday, July 15, 2014

ஏணிப் படிக்கட்டுகள் ஏழு !

  ஏழு படிகள் கொண்ட அந்த ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறி,  சுகம் என்னும் கனியை அடைய முயற்சிக்கலாம்,  வாருங்கள்.
1.  மாதம் இரு முறைதான் மனைவியோடு சேர வேண்டும்.
2.  ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு மருந்து உண்ண வேண்டும்.
3.  வாரத்திற்கு இருமுறை எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
4.  தன்னை விட வயதில் மூத்த பெண்ணை அடையக் கூடாது.
5.  நல்ல தயிர்,  காய்ச்சிய பால்,  நீர் விட்டு பெருக்கிய மோர்,  அப்போது உருக்கிய நெய்,  வழுக்கை இளநீர் ஆகியவற்றை உண்ணுதல்.
6.  உண்டபின் தண்ணீர் குடித்தல்.
7.  உணவு உண்டபின் உலாவுதல்.
     இந்த ஏழும் சுகத்தை உண்டாக்கும்.  இந்த ஏழும் நம்மால் செய்ய முடிந்தவைதான்.
-- ஸாந்த்ரானந்தா.
--  தினமலர்.வாரமலர்  .செப்டம்பர் 22  2013.  

No comments: