Monday, July 14, 2014

நச் !

 *  வீட்டுக்கு காவல் பூட்டு அல்ல...
    அதனை உடைக்கும் போது வரும் சத்தம்தான் !
    rajarajan @ twitter.com.
*   குண்டு பல்ப் பியூஸ் போயிடுச்சு என்பதை விட,
    குண்டு பல்ப் யூஸ் போயிடுச்சு என்பதே உலகுக்கு நல்ல செய்தியாய் இருக்கும் !
    alexious @ twitter.com.
*   மழை வரும்போது கப்பலாய்,
    காதல் வரும்போது கவிதையாய்,
    கோபம் வரும்போது குப்பையாய்... காகிதம் !
    sakthivel @ twitter.com.
*   போய் புள்ளகுட்டிய படிக்க வைங்கய்யா...
    மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் உடலில் ஈக்கள் முட்டை இடுகின்றன...
    60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
    3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
    4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
    5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
    6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
    2 மாதங்களில் உடல் உருகி திரவமாகிறது...
    இப்படி சிதைந்து போகும் மனிதனுக்கு ஆணவம், தலைகனம், கோபம், ஆடம்பரம், கவுரவம், கொலைவெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...?
-- இனைய வெளியிடையே... சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 22-9-2013.

No comments: