Sunday, July 13, 2014

உப்பா...கொக்கா...?

*  நீண்ட நாள் பூட்டிக் கிடந்த அறைகளை,  நீரில் சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்தால்,  நாற்றம் குறைவதோடு தரையும் பளிச்சிடும்.
*  சில கறைகள் எவ்வளவுதான் அழுந்த தேய்த்து துடைத்தாலும் நீங்காது.  வெள்ளை வினிக்கர், பேக்கிங் சோடா, எலுமிச்சை, உப்பு ஆகியவற்றை
   சிறிதளவு படன்படுத்தி இக்கறைகளை நீக்கலாம்.
*  உப்புடன் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை சேர்த்து சமையலறையின் சிம்னியை சுத்தம் செய்தால்,  அதில் படிந்திருக்கும் எண்ணை அழுக்குகள்
   அகலும்.
*  பிரிட்ஜில் இருந்து கிளம்பும் ஒருவித மணத்தையும் வினிகருடன் உப்பு கலந்த நீரினால் துடைத்துப் போக்கலாம்.
*  தரை விரிப்புகளில் உள்ள அழுக்குகளை நீக்க,  அவற்றின் மேல் உப்பை தூவி ஸ்பாஞ் வைத்து தேய்த்து,  நீரில் அலசினால் ,  அழுக்குகள் நீங்கிவிடும்.
*  மழைக்காலத்தில் துவைத்த உடைகள் காயாமல் துர்நாற்றம் வரும்.  இந்தத் துணிகளை உப்பு நீரில் 5 -10 நிமிடம் ஊறவைத்து,  பிறகு நல்ல நீரில்
   அலசினால் நல்ல பொலிவுடனும், நறுமணத்துடனும் இருக்கும்.
*  உப்புடன் வினிகரை சேர்த்து பாத்ரூம் கண்ணாடிகளை சுத்தம் செய்தால்,  பளிச்சென்று மாறுவதோடு, பாக்டீரியா வராமலும் இருக்கும்.
--- மணிமேகலை.
---   தினமலர். பெண்கள்மலர் . .21- 9- 2013.

No comments: