Friday, July 11, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்கோ !

*  பத்துவகையான ஆயுதங்களில் முதலாவது வச்சிராயுதம்.  இது மிகப்பலம் பொருந்திய ஆயுதம்.
*  இந்திரன் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளான்.  கள்ளிச் செடிக்கு வச்சிரம் என்ற பெயருண்டு.
*  அப்பு என்றால் நீர்.  பஞ்சபூதங்களில் ஒன்று.
*  கணக்கு நமக்குத்தெரியும்.  அதென்ன கீழ்க்கணக்கு.  1க்கு மேல் உள்ல பத்து, நூறு, ஆயிரம் முதலானவை மேல்கணக்கு.  ஒன்றுக்கு கீழ் உள்ள முக்கால்,
   அரை, கால் முதலியன கீழ்க்கணக்கு.
*  மனிதர்களுக்கு மட்டும் நான்கு கண்கள் உண்டு.  வெளியில் இருப்பன புறக்கண்கள் ( ஊனக்கண்கள் ).  இன்னும் இரண்டு கண்கள் அகக்கண்கள் .
   ( ஞானக்கண்கள் ).
--  தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.

No comments: