Thursday, July 10, 2014

முன்னோர் வழிபாடு முக்கியம் !

  இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று வரையறுக்கிறது.  இம்மூன்று வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும்,  எள்ளளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டுமொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.
மூன்று முக்கியம்:
    வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழிசெய்பவை மூன்று வழிபாடுகளாகும்.  அவை: குலகுரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முலமுன்னோர் வழிபாடு.
தென்புலத்தார்.
     இறந்து போன முன்னோரைப் ' பிதிரர் ' என்பர்.  இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகம் எனப்படும்.  இதனை வள்ளுவர் ' தென்புலம் ' என்பார்.
தர்ப்பண நாட்கள்:
     எள்ளும், நீரும் முன்னோருக்கு அளித்தல் நீர்க்கடன் தருதல் எனப்படும்.  இதனை தர்ப்பணம் தருதல் என்பர்.
' மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,  தான் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்கலாகும்.
-- தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.  

No comments: