Thursday, June 12, 2014

' Cross Ventilation Theory '

   காற்று வீட்டிற்குள் வரும் போதே கேள்வி கேட்டுக் கொண்டே தான் வருகிறது. ' உள்ளே வரலாமா? ' என்று கேட்பதில்லை.  உள்ளே வந்தால் வெளியே போக வழி இருக்கிறதா?  என்பதே காற்றின் கேள்வி.  வாசலுக்கு நேர் வாசல், ஜன்னலுக்கு  எதிர் ஜன்னல் என்று கட்டுவதுதானே முறை.  காற்றோட்டம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.  வெளியேற வழி இருந்தால் தான் காற்று உள்ளேயே வரும்.  ஓட்டத்தில்தான் காற்றின் உயிரே இருக்கிறது.  வெளியேற வழி இல்லாதபடி ஒரு வாசலை மூடினால் காற்று உள்புகுவதில்லை! வர மறுத்து விடும்.
     செல்வமும் அப்படித்தான்.  செலவழிக்கத் தயாராகைல்லாதவனுக்கு வரவு வழியடைத்து விடும். இறைக்கிற கிணறு சுரக்கும்.  இல்லையேல் இருப்பதே இருக்கும்.  நாளடைவில் நாற்ரம் பிறக்கும்.  செல்வமும் அப்படித்தான்.  கொடுக்கக் கொடுக்க வளரும்.
-- .வாழ்ந்து பார்க்கலாம் வா ! நூலில்.
-- சுகி.சிவம்.   

No comments: