Saturday, June 7, 2014

வில்வத்தின் மகிமை.

  வில்வத்தை 3 தளங்களாகச் சாத்துவது நல்லது.  மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில்  வில்வத்தைப் பறிக்கக்கூடாது.  பிற நாட்களில் தூய்மையாகப் பறித்து ஓலைக் குடலை ( கூடை ) யில்  வைத்துச் சாத்தலாம்.
சிவனுக்கு 5 முகங்கள்.
     சிவபெருமானுக்கு 6 முகங்கள் உண்டு.  அவற்றுள் 5 முகங்கள் விசேஷமானவை.  இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஒரு தொழில் செய்யும். ஒரு வடிவத்தில் சிறப்பாகக் காணப்படும்.
சத்தியோஜாதம் :  மேல் நோக்கிய முகம். அருளல் தொழில்.  சதாசிவத்தின் முகம்.
வாமதேவம் :  வடக்கில் உள்ள முகம்.  மறைத்தல் தொழில். மகேசனுக்கு உரியது.
அகோரம் :  தெற்கே உள்ள முகம்.  அழித்தல் தொழில்.  ருத்ரனுக்கு உரியது.
தத்புருஷம் :  கிழக்கில் உள்ள முகம்.  காத்தல் தொழில்.  மகாவிஷ்ணுவுக்கு உரியது.
ஈசானம் :  மேற்கில் உள்ள முகம்.  படைத்தல் தொழில். பிரம்மனுக்கு உரியது.
--  தினமலர்.  பிப்ரவரி 7, 2013. 

No comments: