Tuesday, June 3, 2014

மூட்டைக் காக்க ஓடுங்கள்.

 ஓடினால் மூட்டுவலி வரும் என்று அஞ்சியே நம்மில் பலர் ஓடுவதில்லை.  75 ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்களை,  அவர்களுடைய முதுமைக் காலத்தில் சோதித்து ஆராய்ந்ததில், ஓடியவர்களின் மூட்டுகள் நல்ல நிலையில் இருப்பதும் மூடுவலி அல்லது வாதம் என்பது அவர்களைத் தொடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.  கனடா நாட்டின் குவீன்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
புற்றும் குடும்பப் பற்றும்.
    புற்றுநோயாளிகளில் மணமாகாதவர்களைவிட,  மணமானவர்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றனர்.  ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் 75 ஆயிரம் பேரைச் சொதனை செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  புற்றுநோயாளிகள் ஏராளமானோர் திருமணத்திற்குப் பின் நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- தி இந்து. செப்டம்பர் 27, 2013.  

No comments: