Saturday, June 14, 2014

சுட்டது நெட்டளவு.

   ரேஷன் கடை ஒன்றில் அன்று வரலாறு காணாத கூட்டம்.  ஏகப்பட்டவர்கள் பொருட்களை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
     கடைசியாக வந்த ஒருவர் கியூவில் முன்னால் போக முயற்சி செய்தார்.  ஏற்கனவே நின்றுகொண்டிருந்தவர்கள் அவரைப் போக விடாமல் தடுத்தனர்.
' கடைசியா போயி நில்லுய்யா! ' என்று கத்தினார்கள்.
     அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  முண்டியடித்துக் கொண்டு முன்னால் போக முயற்சி செய்தார்.  எல்லோரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.
    " இதோ பாருய்யா!  நாங்க இருக்கிற வரைக்கும் நீ முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது... தெரிஞ்சிக்கோ!" என்றார்கள்.
    " நான் இங்கே பின்னாடி நிக்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்கமுடியாது!" என்றார் அவர்.
    " ஏன்?"
    " நாந்தான் ரேஷங்கடை  ஊழியர்.  கடையைத் திறக்க வேண்டிய ஆள்!"
-- கே.செல்வேதிரன். ரிலாக்ஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

No comments: