Wednesday, May 7, 2014

வினா - விடை !

  ( சிறப்பு ).
*  "பிரதமர் இல்லத்தில் இருந்து காலி செய்ய இருக்கும் மன்மோகன் சிங், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் எங்கு குடியேற
     இருக்கிறார்?"
    -- டெல்லி மோதிலால் தெருவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரசு பங்களாவில் குடியேற இருக்கிறார்.  ஏப்ரல்
    மாத இறுதிக்குள் அங்கு மராமத்துப் பணிகள் நடக்கின்றன.  இதில் இதுவரை ஷீலா தீட்ஷித் குடியிருந்தார்.
* "தேர்தல் பிரச்சாரத்தில் 'நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக்கொண்டு ஓடிவிடவில்லை' என்று கூறியவர் யார்?"
    -- அரவிந்த் கெஜ்ரிவால்.
* "தமிழக வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து கொண்ட கோடீஸ்வர வேட்பாளர் யார்?  அவரின் சொத்து மதிப்பு என்ன"
    -- கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.  அவரது சொத்து மதிப்பு 283 கோடி.
* " 'அம்மா குடிநீரைவிட ரெயில்வே குடிநீர் விலை அதிகம்' என்று சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்கின்றனர் அ.தி.மு.க-வினர்.
    இரண்டுக்குமான விலை வித்தியாசம் என்ன?"
    -- அம்மா  குடிநீர் 10 ரூபாய்.  ரெயில்வே  குடிநீர் 15 ரூபாய்.
* "சமீபத்தில் ஒரு தமிழ் நடிகையும், இந்தி நடிகையும் நரேந்திர மோடிக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.  அவர்கள் யார்"
    -- தமிழ் நடிகை சமந்தா ; இந்தி நடிகை சோனாக்க்ஷி சின்ஹா.
-- ஆனந்த விகடன்.  23 - 04 - 2014. 

No comments: