Thursday, May 1, 2014

ஸ்ரீ மடத்தில்...

 ஸ்ரீ மடத்தில்  பெரியவர்  முன்னிலையில்  தினமும்  காலையில்  பஞ்சாங்க  படனம்  நடைபெறும்.  நாள்தோறும் திதி- வார- நஷத்ர-யோக  கரணங்களை  அறிந்து  கொண்டாலே  மகத்தான  புண்ணியம்  என்பது  சாஸ்திர  வாக்கியம்.  ஒரு  அமாவாஸ்யை  திதியன்று  செவ்வாய்கிழமையும்  கேட்டை  நட்சத்திரமும்  கூடியிருந்தன.  " இன்னைக்கு  கேட்டை  மூட்டை  செவ்வாய்க்கிழமை  எல்லாம்  சேர்ந்திருக்கு,  அதை  ஒரு  தோஷம்  என்பார்கள்.  பரிகாரம்  செய்யணும்"  என்றார்கள்  பெரியவர்.  " அப்பாகுட்டி  சாஸ்திரிகளுக்குச்  சொல்லியனுப்பு,  லோகஷேமத்துக்காக  ஹோமங்கள்  செய்யச்  சொல்லு..."
      பரிகார  ஹோமம்  நடந்துகொண்டிருக்கும்போது  பெரியவர்  அங்கே  வந்து  பார்த்தார்கள்.  " கேட்டை,  மூட்டை,  செவ்வாய்க்கிழமை  என்றால்  என்ன  அர்த்தம்?  கேட்டை  என்பது  நட்சத்திரம்,  செவ்வாய்  என்பது  கிழமை,  மூட்டை  என்றால்  என்ன?  என்று  கேட்டார்கள்.  எவருக்கும்  பதில்  சொல்லத்  தெரியவில்லை.
      பெரியவர்களே  சொன்னார்கள்:
     " அது  மூட்டை  இல்லை.  மூட்டம்.  மூட்டம்  என்றால்  அமாவாஸ்யை.  பேச்சு  வழக்கில்  மூட்டை,  மூட்டை  என்று  மோனை  முறியாமல்  வந்துடுத்து"
       தொண்டர்களுக்கெல்லாமே  ஆச்சரியமாக  இருந்தது. " பெரியவா  இம்மாதிரி  நுட்பமான  விஷயங்களை  எங்கிருந்து  தெரிந்துகொண்டார்கள்?"
-- ( 'மகா  பெரியவாள்  தரிசன  அனுபவங்கள் ( 3-ம்  தொகுதி)  தொகுப்பாசிரியர்:  பி.எஸ்.கோதண்டராமசர்மா.)
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.     

No comments: