Thursday, May 29, 2014

மென்பானம்.

 மென்பானத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்த மற்றொரு காரணம் கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் மென்பானங்களைக் குடிக்கும் அமெரிக்கக் குழந்தைகள்,  மற்றவர்களைவிட  அதிக வன்முறை குணத்துடனோ எரிச்சலுடனோ,  கவனம் செலுத்துதலில் குறைபாட்டுடனோ இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.  பொம்மைகளையோ அல்லது பொருள்களையோ உடைப்பது,  மற்ற குழந்தைகளைத் தாக்குவது போன்றவற்றை இந்தக் குழந்தைகள் செய்யக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பருவ வயதைத் தொட்ட சிறுவர்,  சிறுமிகளில் வாரத்துக்கு 5 கேன் மென்பானம் குடிப்பவர்கள் ஆயுதம் வைத்திருக்கவோ,  வன்முறையில் ஈடுபடவோ வாய்ப்பு இருப்பதாக தி ஜர்னல் ஆப்பீடியாட்ரிக்ஸ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
-- சிறப்புப் பகுதி. சுற்றுச்சூழல்.
--   தி இந்து.  செப்டம்பர் 24, 2013. 

No comments: