Saturday, May 17, 2014

சுட்டது நெட்டளவு

 கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
    " உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்".
      இதற்கு, " மன்னிக்கவும்... நாங்கள் மாற்றமுடியாது.  நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் " என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
    " நான் கப்பல் மாலுமி,  நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள் " என்றான் மாலுமி.
    " நான் கடல் பிரதேச மனிதன்.  நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள் " என்று பதில் வந்தது.
    " இது யுத்த கப்பல், நான் அதன் கேப்டன்.  நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன் " என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
      அதற்கு அங்கிருந்து வந்த பதில் :
    " முட்டாளே ... இது கப்பல் அல்ல கலங்கரை விளக்கம் ( லைட் அவுஸ் ).  உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக்கொள்ள முடியாது.  எங்கள் எச்சரிக்கையை மீறியதால் உன் கப்பல் தரை தட்டப்போகிறது."
--- ஷேர் செய்தவர் : சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
--   ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013. 

No comments: