Monday, May 12, 2014

சொலவடை ஒன்று !

" All roads lead to Rome "  தற்காலத்தில் இதற்குப் பொருத்தமான சொலவடை ஒன்று சொல்லுங்கள்...? "
" அனைத்துச் சாலைகளும் 2014 ஐ நோக்கி...!"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.
" தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டி தீக்குளிக்கச் செய்துவிட்டு, பின் அனுதாப அறிக்கைவிடும்தலைவர்களைப் பற்றி...? "
" இதற்கு முல்லாவின் நீதிக் கதைதான் பதில்...
      ஒரு நாள் முல்லா வீட்டுக் கோழிக் குஞ்சுகள் கழுத்தில் கறுப்பு ரிப்பனோடு மேய்ந்துகொண்டு இருந்தன.  முல்லாவிடம் எதிர்வீட்டுக்காரர் கேட்டார், ' ஏன் முல்லா... கறுப்பு ரிப்பன்? '
     ' அவற்றின் தாய் இறந்ததால் துக்கம் அனுஷ்டிக்கின்றன.'
     " அச்சச்சோ... அது எப்படி இறந்தது ?"
     " நான் பிரியாணி செய்தேன் !"

" தத்துவத்துக்கும் இலக்கியத்துக்கும் என்ன வித்தியாசம்?"
" புதுமைப்பித்தனின் வார்த்தைகளில் சொல்வது என்றால், வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம்.  வாழ்க்கையையே சொல்வது இலக்கியம்! "
-- தாமு, தஞ்சாவூர்.  
-- நானே கேள்வி... நானே பதில்!
-- ஆனந்த விகடன். 17- 4-2013.  

No comments: