Thursday, April 17, 2014

சுட்டது நெட்டளவு

  ( சிறப்பு )
     வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.
     தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்து தான் மகனுக்காக ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்த துறைக்கு ஏற்றவன் என்பதைத் தான் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.
     மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய தந்தை, "என் மகன் பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத்துறைக்கு ஏற்றவன்.  பைபிளை எடுத்துக் கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.  மது புட்டிய எடுத்துக் கொண்டால் உதவாக்கரை ஆவான்.  துப்பாக்கியை எடுத்துக் கொண்டால் அவன் கொள்ளைக்காரனாவான்" என்றார்.
     அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதை இருவரும் மறைவிலிருந்து ஆவலுடன் கவனித்தார்கள்.  அவர் மகன் அறைக்குள் நுழைந்து அங்கு இருக்கும் பொருட்களை நோட்டம் விட்டான்.  மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக்கொண்டான்.  பின் பணத்தை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டான்.  ஒரு கையில் பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டான்.  தந்தை உற்சாகத்தில் கத்தினார், "என் மகன் மந்திரியாகப் போகிறான்".
-- குஷ்வந்த் சிங்.
-- டி.எஸ். உஷாராணி,  ரிலாக்ஸ்.
-- - 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஏப்ரல் 11, 2014.  

No comments: