Monday, March 3, 2014

ஜீரா மீந்துவிட்டதா?

*  தீபாவளியன்று உப்பு வாங்கினால், லஷ்மியே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.  இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
*  பீட்ரூட் அல்வா,  பீட் ரூட் பூரி, பீட்ரூட் திரட்டுப் பால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்க வினிகரில் முக்கி எடுத்து, நீரை வடிகட்டி நறுக்கினால், கலர் அப்படியே இருக்கும்.
*  கேரட் அல்வா செய்வதாக இருந்தால், கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து பிறகு தோலைச் சீவினால் மிகச் சுலபமாக
    தோலை நீக்கிவிட முடியும்.
*   குலோப்ஜாமூன் செய்த ஜீரா மீந்துவிட்டதா?  கவலை வேண்டாம்.  ஸ்பெஷல் ' ஷாயி துக்கடா ' செய்து ஜமாய்த்து விடலாம்.  ஆறு அல்லது ஏழு பிரெட் ஸ்லைஸ்களை
     முக்கோண வடிவில் கட் செய்து,  டால்டா அல்லது ரிபைண்ட் ஆயிலில் பொரித்து,  ஜீராவுக்குள் பொடவும்.  இரண்டு நிமிடம் கழித்து எதுத்து, வடிதட்டில் போட்டு
     ஆறவைக்கவும்.  டப்பாவில் போட்டு சில நாட்கள் வைத்துச் சாப்பிடலாம்.  ருசியாக இருக்கும்.  ஜீராவும் மீதமாகாது.
-- அவள் விகடன்.  அக்டோபர் 24 , 2003.       

No comments: