Saturday, March 1, 2014

நாய்க்கறி சாப்பிடுங்கள்!

  இறைவன் பேரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த விலங்கினத்தையும் உண்ணக்கூடாது.  தாமாக இறந்த விலங்கினங்களைப் புசிக்கக்கூடாது.  ( கடல்வாழ் உயிரினங்கள் விலக்கு )  எந்த விலங்கினத்தின் ரத்தமும் உண்னக்கூடியதில்லை.  பன்றிக்கறியைத் தொடக்கூடது.  இது குரான் சொல்வது ( சூராபகரா 2.173 ).  எனவே நாய், பூனை, குரங்கு மட்டுமல்ல,  வழக்கமாக மாமிச உணவாகும் மிருகங்கள் தவிர மற்ற அனைத்துமே இஸ்லாத்தின் ஹராம்தான்.
     இப்போ என்ன அதுக்கு என்று கேட்டுவிடாதீர்கள்.  பக்ரீத்துக்கு உலகெங்கும் எத்தனை லட்சம் ஆடுகள் வெட்டப்பட்டிருக்கும்.  எத்தனை ஒட்டகங்கள் பிரியாணி யாகியிருக்கும்.  எத்தனை சந்தோஷமாக , திருப்தியாகம் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். மகா ஜனங்கள்!  ஆனால், இந்த வருஷ பக்ரீத்துக்கு சிரியா மக்களுக்கு பிரியாணியல்ல, வெறும் சோறே பிரச்சினைக்குக்குறியதாகிவிட்டது.  யுத்த களேபரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வீட்டைத் துறந்து, ஊரைத் துறந்து எங்கெங்கோ ஓடிப் போய் பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  தொழுகைக்குக் கூட  மசூதிப் பக்கம் போக முடியாத சூழ்நிலை.  பெருநகரங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கடைகண்ணியெல்லாம் சுத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்ட நிலையில் சப்பாட்டுக்கு வழியே இல்லாமல், குடிக்க நீர் கூட இல்லாமல் ஒரு மாபெரும் மனிதக்கூட்டம் சின்னாபின்னமாகிக்கொண்டிருகிறது.
--பா.ராகவன்.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . வெள்ளி, அக்டோபர் 18,2013.  

No comments: