Friday, February 21, 2014

நம்பிக்கை.

  ஒரு துறவி காட்டில் கடும் தவம் இருந்துவந்தார்.  ' அவனின்றி ஓர் அணுவும் அசையாது ' என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.  ஒரு நாள் திடீரென பல்வலி ஏற்பட்டு கடும் அவதிப்பட்டார்.  பல் வலி தீர கடவுளை வேண்டினார்.
     கடவுளூம் நேரில் தோன்றி ஒரு பச்சிலையை அடையாளம் காட்டி அதை பல்லில் வைக்கச் சொன்னார்.  கடவுள் சொல் பொய்க்குமா என்ன?  பல் வலி போயே போச்சு.
     ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் அதே பாழாய்போன பல் வலி . துறவி அதே பச்சிலை வைத்தியத்தை கையாண்டார்.  எந்தப் பயனும் இல்லை.  கடவுளிடம் மீண்டும் முறையிட்டார்.  கடவுளும் தோன்றினார்.
    " கடவுளே மீண்டும் எனக்கு பல் வலி வந்தது.  நான் கடந்த முறை நீங்கள் சொன்ன பச்சிலையை வைத்துப் பார்த்தேன் பலன் இல்லை."  என்று கூறினார்.  அதற்கு கடவுள், " முதலில் என்னை நம்பினாய்.  இப்போது பச்சிலையை நம்பிவிட்டாய்.  அதுதான் பிரச்சனை" என்றார்.
-- அ.முகமது ஹுமாயூன்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து 'நாளிதழ்.   திங்கள். அக்டோபர் 7, 2013.  

No comments: