Saturday, February 8, 2014

அஷ்டாவக்கிரர்.

  முறையாகப் படிக்காத தன் தகப்பன் தப்புத் தப்பாக வேதமந்திரங்களைச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கருவில் இருந்த குழந்தை உடலை முறுக்கிக் கொண்டது.  இதனால் குழந்தையின் உடல் எட்டு விதமான கோணல்கள் கொண்டதாக ஆனது.  எனவே அஷ்டா ( எட்டு ) வக்கிரன்
( கோணல் கொண்டவன் ) என்று பெயர்.
கனவு .
     கனவில் நான்கு நிலைகள் உள்ளது.  கனவு, ஆழ் உறக்கம், விழிப்பு, துரீயம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.  இவற்றில் ஒவ்வொரு நிலையில் நாம் பெறும் அனுபவங்களும் அடுத்த நிலையில் மறைந்துவிடுகின்றன.  விழிப்பைத் தாண்டிய துரீய நிலையை அடைந்துவிட்டால் விழிப்பில் பெறும் அனுபவங்களும் பொய்யாகிக் கரைந்துவிடும்.  அப்போது ஏற்படும் அனுபவங்களைச் சொற்களால் விவரிக்க இயலாது.  அந்த நிலையை எய்துபவனே ஜீவன் முக்தன்.
-- அரவிந்தன். ஆனந்த ஜோதி. உள்ளத்தில் உண்மை ஒளி.  சிறப்புப் பகுதி.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன்,அக்டோபர் 31, 2013.  

No comments: