Sunday, February 2, 2014

தெய்வீக மூலிகைகள் !

   தெய்வீக மூலிகைகள் என்று கருதப்படும் ஐந்து வித இலைகள் முக்கியமானவை.  அவை துளசி, வில்வம், வேம்பு, அருகு, வன்னி ஆகியவையாகும்.  இவை உடல் நலத்தை சீராக்கும் மூலிகைகளாகும்.  இவைகளை பாத்திரங்களில் போட்டு நீர் விட்டு கோவில்களில் உபயோகப்படுத்துவார்கள்.  இந்த தீர்த்தப் பாத்திரத்திற்குப் பெயர் பஞ்சபாத்திரம்.  நம் உடம்பை பத்திரமாக வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் என்று கூட பொருள்கொள்ளலாம்.  ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதத்தில் உடம்பைச் சீராக்குகிறது.
கைரேகை அற்புதங்கள்.
     ' திரு ' என்றால் அழகிய என்றும்,  ' மணம் ' என்றால் சேர்க்கை என்றும் பொருள்.  ஆணும் பெண்ணும் அழகாக சேர்ந்து இல்வாழ்க்கை நடத்த பத்து பொருத்தங்கள் பார்த்து, பெற்றோர் திருமணம் நடத்துகிறார்கள்.  ஒரு திருமணம் நல்ல முறையில் நடக்க 10 பொருத்தங்கள் முக்கியமானவை.  அதில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ரஜ்ஜு ( சரடு ) பொருத்தம் ஆகியவை முக்கியமானவை.  இவற்றிலும் சரடு பொருத்தம் அதி முக்கியமானது.
-- தினத் தந்தி. தமிழ்மாத ஜோதிடம் இணைப்பு. 11-11-2013.                      
-- இதழ் உதவி : N. கிரி, நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ). 

No comments: