Sunday, February 16, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே மாதம் 24-ம் தேதி வரை ,  6,130 நாட்கள் சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்திருகிறார் நேரு.
*  என்னுடைய தந்தை ஒரு அரசியல் தலைவர்.  நானோ ஒரு அரசியல்வாதி . --  இந்திரா காந்தி.
*  உலகிலேயே எந்த அரச வாரிசும் அரியணை ஏற இத்தனை நாட்கள் காத்திருந்ததில்லை என்ற புதிய சாதனையைப் படைத்தூள்ளார் இங்கிலாந்தின்
   இளவரசர் சார்லஸ்.  இன்று( நவம்பர் 14 )  பிறந்தநாள் கொண்டாடும் சார்லஸ், 1948ம் ஆண்டில் பிறந்தவர்.  1952லேயே இங்கிலாந்தின் அடுத்த
   இளவரசராக  இவர் அங்கீகரிக்கப்பட்டர்.  ஆனால் இளவரசர் பதவியில் இருந்து அரசராக பதவியேற்கும் காலம் மட்டும் இன்னும் அவருக்கு கனியவில்லை.
*  நியூயார்க்கில் கட்டப்பட்டுவரும் உலக வர்த்தக மையம், கட்டி முடிக்கப்பட்டால்  அது அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும்,  இதன்மூலம்,
   கட்டிடத்தின் உயரம் 417 மீட்டர் ( 1,368 அடி ) ,  கோபுரத்தின் உயரம் இரண்டும் சேர்ந்து கட்டிடத்தின் மொத்த உயரம் 1,776 அடியாக இருக்கும்.  இதன்
   மூலம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக இது இருக்கும்.
*  தற்போது சிகாகோவில் உள்ள சீயர்ஸ் கோபுரம் ( 442 மீட்டர். 1,450 அடி).
*  உலகின் உயர்ந்த கட்டிடம் துபையில் உள்ள புர்ஜ் கலிபா ( 830 மீட்டர், 2,723 அடி ) ஆகும்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013. 

No comments: