Thursday, February 13, 2014

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு தொல்லைக்கு முடிவு கட்ட முயற்சி.
     எல்லாவற்றுக்கும் கடவுச் சொல்லை ( பாஸ்வேர்டு )  நினைவு வைத்திருக்க வேண்டியுள்ளது.  இதற்கு முடிவு கட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
     விரல் ரேகைகள், கண்விழி, முகம், குரல் உள்ளிட்டவற்றை அடையாளமாகக் கொண்டு பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் வாழ்க்கையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளன.
     பல்வேறு வகையான கடவுச் சொற்களை நினைவு வைத்திருப்பதற்குப் பதில் இது போன்ற பயோமெட்ரிக் பாதுகாப்பு முறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வருகிறார்கள்.
     இதைப் பெரிய அளவில் புழக்கத்தில் விடுவதற்கு முன், சோதனை அடிப்படையில் பரிசோதித்து வருகிறார்கள். கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்கும் தொல்லையிலிருந்து எதிர்கால சமூகத்தினரை மீட்பதே விஞ்ஞானிகளின் நோக்கம், குறிக்கோள்.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
--. ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013. 

No comments: