Tuesday, February 11, 2014

சுட்டது நெட்டளவு.

    காவல்துறை அதிகாரி ஒருவர் ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  தனக்கு உதவியாக இருக்கும் என்று கருதி மூன்று சர்தார்ஜி காவலர்களை அழைத்தார்.  அவர்களிடம் ஒரு படத்தைக் காட்டினார். " இவன் ஒரு கிரிமினல், இந்தப் படத்தை வைத்து இவனைப் பற்றி உங்களால் ஏதாவது சொல்ல முடிகிறதா?" என்று கேட்டார்.
     முதல் சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல், " அவனுக்கு ஒரு கண்தான் இருக்கிறது.  இதை வைத்து எளிதாகப் பிடித்துவிடலாம்."  என்றார்.
     அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. " இது என்ன முட்டாள்தனம்?   பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்?  அவனுக்கு இன்னொரு கண் இருக்காது எப்படி முடிவுபண்ணலாம்?" என்று எகிறிவிட்டு அடுத்த சர்தார்ஜி பக்கம் திரும்பினார்.
     அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி! " இந்தக் கிரிமினலுக்கு ஒரு காதுதான் இருக்கிறது".  என்றார் அந்தச் சர்தார்ஜி.
     அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
     முன்றாவது சர்தார்ஜி வந்தார்.  கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், " அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்! " என்றார்.
     அதிகாரிக்கு அது புதிராக இருந்தது.  இது உண்மையாக இருக்குமோ என்று அந்தக் கிருமினலின் பழைய ஆவணங்களை எடுத்துப் பார்த்தார்.  என்ன ஆச்சரியம் !
     அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவந்தான் !
    " என்னால் நம்பவே முடியவில்லை.  அற்புதம்.  அது எப்படி அவ்வளவு கரெக்ட்டாகச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்.
     அதற்கு அந்த சர்தார்ஜி சொன்னார், " இதில் என்ன ஆச்சரியம் இருக்கு?  அவனால்      சாதாரணக் கண்ணாடி அணிய முடியாது.  அவனுக்கு ஒரு காது... ஒரு கண்தானே இருக்கு !"
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ் .
--  ' தி இந்து' நாளிதழ்.  ஞாயிறு, அக்டோபர் 27, 2013. 

No comments: