Wednesday, January 15, 2014

படிப்படியாக...

 அகிலத்தில் உள்ள அனைத்து உயிகளிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
*  முதல் படியில்,  ஓரறிவு உயிகளான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
*  இரண்டாவது படியில்,  ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
*  மூன்றாவது படியில், மூவறிவு உயிர்களின் வடிவங்களை ( கரையான், எறும்பு ) வைக்க வேண்டும்.
*  நான்காம் படியில்,  நான்கறிவு உயிர்கள் ( சிறு வண்டு, பறவைகள் )  வைக்கலாம்.
*  ஐந்தாம் படியில் :  ஐந்தறிவு உயிர்கள் ( பசு, நாய், சிங்கம் போன்றவைகளை ) வைக்கல்லாம்.
*  ஆறாம் படியில் :  ஆறறிவு உயிர்கள் ( மனித வடிவிலான பொம்மைகள், வாத்தியக்குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவைகள் ).
*  ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள்.( மகாங்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம் ).
*  எட்டாம் படியில் :  தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
*  ஒன்பதாம் படிதான் முக்கியம்.  அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
-- பிருந்தா சீனிவாசன்.( ஆனந்த ஜோதி. உள்ளத்தின் உண்மை ஒளி. சிறப்புப் பகுதி. ஆன்மிகம் )
--   ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. 

No comments: