Thursday, January 23, 2014

அழுகை

  உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான்.  அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது.
     குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்;  அறியாமலே அழுதோம்.
     முதல் அழுகை மூச்சு விடுவதற்கு, நுரையீரல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள,  அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க,  குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றன.  குழந்தை பிறந்து ஓராண்டு வரையில் அழுதுகொண்டேதான் இருக்கும்.  அதன் அழுகையை நிறுத்த வேண்டாம்.
     ஏனென்றால்,  குழந்தை பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை அழுகின்ற அழுகையானது ' கலிமா ' ( இஸ்லாத்தின் மூலமந்திரம் ) ஆக இருக்கும்.  அடுத்த நான்கு மாத அழுகை நபிகள் நாயகம் ( ஷல் ) அவர்கள் கூறும் ' ஸ்லவாத் ' ( நபி புகழ் ) ஆக இருக்கும்.  அடுத்த நான்கு மாத அழுகை தனது பெற்றோருக்காக கேட்கும் ' துஆ' ( இறைஞ்சுதல் ) ஆக இருக்கும்.
-- நாகை ஜி.அஹ்மது.  ஆனந்த ஜோதி.  உள்ளத்தில் உண்மை ஒளி.
--  ' தி இந்து ' நாளிதழ்,  வியாழன் , நவம்பர் 7, 2013. 

No comments: