Sunday, January 19, 2014

கருவிலேயே...

கருவிலேயே கற்றுக்கொள்ளும் குழந்தைகள்.
     லண்டன் :  கருவிலிருக்கும்போதே குழந்தைகள் தாயின் சுற்றுப்புறத்தில் எழும் ஒலிகளைக் கவனித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்கின்றன என்பது அஷ்டவக்கிரர், அபிமன்யூ, பிகலாதன் பிராணக் கதைகள் தொட்டுச் சொல்லப்பட்டு வருகிறது.
     தற்போது, ஹெலிசின்கி பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில்,  கருவில் இருக்கும்போது தாலாட்டு அல்லது மெல்லிசைப் பாடல்களைக் கேட்கும் குழந்தைகள்,  பிறந்தவுடன் மற்ற குழந்தைகளோடு ஒபிடுகையில் விரைவில் பேசக் கற்றுக்கொள்க்ன்றன எனத் தெரியவந்துள்ளது.
     கர்ப்பத்தின் இறுதி நாள்களில் வாரத்துக்கு 5 முறை  ' டுவிங்கிள்  டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை கர்ப்பிணிகள் தொடர்ந்து கேட்டனர்.  இதனை அடிக்கடி கேட்டதால்,  இப்பாடல் ஒலிக்கப்படும் போதெல்லாம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகள் அதற்கு வேகமான எதிர்வினையைக் காட்டின.  பிறந்த நான்கு மாதங்களூக்குப் பிறகு அந்தப் பாடலைக் கேட்டபோதும் மற்ற குழந்தைகளை விட அந்தப் பாடலுக்கு எதிர்வினை புரிந்தன.
-- பி.டி.ஐ.   சர்வதேசம்.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 1,2013.

No comments: