Friday, January 10, 2014

எது தரமான ஜரிகை?

   பட்டுநூல் மற்றும் செம்பு கம்பி ஆகிய இழைகள் மீது வெள்ளிக் கம்பி சுற்றப்பட்டு அதன் மீது தங்க முலாம் பூசப்படுகிறது.  இதை ஜரிகை என்கிறோம்.  இதில் கடந்த நவம்பர் 2011-க்கு பிறகு, 100 கிராம் ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.5 கிராம் தங்கம், 24 கிராம் பட்டு நூல், 35.5 கிராம் செம்பு இருக்க வேம்டும் என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வரையறுத்திருக்கிறது. 2011 -ம் ஆண்டுக்கு முன்பு வெள்ளி 57 கிராமும், தங்கம் 0.5 கிராமும் இருந்தது.  40 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியின் அளவை 70 கிராமாக அரசு நிர்ணயித்திருக்கிறது.
-- ச.கார்த்திகேயன்.  பூச்செண்டு.
--   ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013. 

No comments: