Friday, June 1, 2012

காந்திஜி -- கோட்சே !


காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . கோட்சே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் வருந்தியவனாக ' எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார் ' என்று கெஞ்சினான .
அதனை ஒரு கருணை மனுவாகவும் எழுதிக் கொடுத்தான் . அந்தக் கருணை மனு அப்போது இந்தியாவின் கவர்னல் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ராஜாஜி அளித்த பதில் : ' உண்மைதான் காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா ? '
--- இலக்கியப்பீடம், பிப்ரவரி , 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

No comments: