Tuesday, May 1, 2012

குழந்தைகள் தண்ணீ ர்.


குழந்தைகள் தண்ணீர் என்றால், குதூகலத்தோடு விளையாட ஆரம்பிக்கிறார்கள் . கருக்பைக்குள் தண்ணீருக்குள் வளர்ந்து வெளிவரும் உணர்வினால்தான் அப்படித் தண்ணீரிலும் விளையாடுகிறார்களா ?
உண்மைதான் என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள் . ஆகவேதான் ரஷ்யாவில் சில மருத்துவமனைகளில் பிரசவ வலி ஏற்பட்ட உடனே அம்மாவை நீர்த் தொட்டிக்குள் அமர்த்தி... குழந்தை வெளியே வந்தவுடன் தண்ணீருக்குள்ளேயே வளையவிட்டு
( குழந்தையைப் பொருத்தமட்டில், சின்னதில் இருந்து பெரிய ஸ்விம்மிங் பூல் !) பிறகு வெளியே எடுப்பார்கள் . குழந்தைக்கு மூச்சுத் திணறாது . கருப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் அதற்குத் துளியும் அதிர்ச்சி இருக்காது . ' இதுதான் பெஸ்ட் ' என்கிறார்கள் சில ரஷ்ய மருத்துவர்கள் . இப்போது இந்த முறை பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது ( தாய் விரும்பினால் ) !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 1 . 2 . 2012 .

No comments: