Sunday, April 15, 2012

கரும்புக் கவிதைகள் !


உந்தன் மண்ணைத்
தொட
மாட்டேன்
எந்தன் மண்ணை
விட
மாட்டேன் !

தும்பிக்கும் வேண்டும்
விடுதலை
தமிழ்த்
தம்பிக்குத்
தெரியும்
அதன்
விலை !

ழகரம்
தமிழின்
சிறப்பாகும்
அதை
உரசிடப்
பிறக்கும்
நெருப்பாகும் !

தமிழை ஏன்
படிக்க
வேண்டும்
அதைத்
தாய்ப்பால்
போலே
குடிக்க
வேண்டும் !

தமிழைக் கல்வியில்
நிலைநாட்டு
பிற
மொழிகளும்
கற்றுத்
திறங்காட்டு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

No comments: