Saturday, April 14, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆளூமைப் பண்பை
வளர்த்துக்
கொள்
நீ
அடிநிலை
மனிதரை
அணைத்துக்
கொள் !

எத்தனை மொழியும்
கற்றுக்
கொள்
நம்
இனத்
தமிழ்
முதலாய்ப்
பெற்றுக்
கொள் !

அன்னை மானம்
இழக்காதே
உன்
அண்ணை வீரம்
மறக்காதே !

முற்றும் முடிந்ததாய்
நினையாதே
முத்து
மூட்டிய
நெருப்பு
அணையாதே !

தமிழைத் தாழ்வாய்ப்
பழிக்காதே
உலகத்
தாய்க்
கரு
தன்னை
அழிக்காதே !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012

No comments: