Saturday, April 7, 2012

வலை பாயுதே !


* குழந்தைகளின் குறும்புகள் எப்போதும் போலத்தான . அதை ரசிக்கவும் எரிச்சல் அடையவும் வைப்பது நம் மனநிலை மட்டுமே !
* ' கோ கிரீன் ' அப்பிடினு பெருசா பிளாஸ்டிக்ல பேனர் வெச்சிருக்கிறவங்களை என்ன செய்யலாம் ?
* நம் முட்டாள்தனத்தை, அதிகம் வெளிப்படுத்தாமல் இருப்பதில்தான் ... நம் ' புத்திசாலித்தனம் ' இருக்கிறது !
* ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் ... இந்த கிழிக்கிற காலண்டருக்கு அடிச்சிக்கிற பழக்கம் வீட்ல போக மாட்டுது !
* பிறக்கையில் பெருமையுடன் பிறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை ஆனால், இறக்கையில் பெருமையுடன் இறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு !
* ' ஆனந்தத் தொல்லை'யுடன் மோதும் ' நண்பன் ' குழுவினருக்குத் தைரியம் அதிகம் . ' கான முயலெய்த அம்பினில்... ' குறள்தான் நினைவுக்கு வருது :) .
* இரவு நேரப் பேருந்துகளில், பின்னிருக்கும் நபரின் மீது ஒரு சந்தேகத்தோடே தூங்குகிறாள் முன் இருக்கையில் இருக்கும் பெண் !
* பிரதமரை வழையனுப்ப வந்த ஓ.பி.எஸ் --ஸிடம் , பிரதமர் ரகசியமாகச் கூறிய விஷயம்... ' சேம் பின்ச் ' !
* ஒருவன் தான் எவ்வளவு கெட்டவன் என்பதை மனைவியிடம் மட்டும் மறைக்காமல் காட்டிவிடுகிறான !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்தவிகடன் . 11 . 1 . 2012 .

No comments: