Friday, April 6, 2012

உழைப்பில் உள்ளது சந்தோஷம் .


ஒரு ஜப்பானிய ஜென்குரு முதுமையடைந்த பின்னரும் தோட்டத்தில் வேலை செய்ய வந்து விடுவார் . எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லையே என்று வருந்திய சீடர்கள் மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை ஒளித்து வைத்து விட்டார்கள் . காலை தோட்ட வேலைக்கு வந்த குரு ஏமாற்றம் அடைந்தார் . மடாலயம் வந்த அவர் அன்று முழுவதும் உண்ணவே இல்லை . சீடர்கள் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார் . உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் . வேறு வழியின்றி மறுநாள் மண்வெட்டியும் கடப்பாரையும் அவர் வசம் தரப்பட்டது !.
---' எப்போதும் சந்தோஷம் ' என்ற நூலில் , சுகி . சிவம் .
--- நூல் உதவி : R. கந்தசாமிசத்யா , அம்பகரத்தூர் .

No comments: