Wednesday, April 4, 2012

அட...இப்படியா சங்கதி ?!


' மெத்த படிச்ச மூஞ்சூறு , கழனி பானையிலே விழும் '
' மூஞ்சூறு எல்லாம் எப்ப படிக்க போச்சு ? ' னு உங்களுக்குச் சந்தேகம் வரும் . இதுகூட நம்ம ஆட்களோட கைங்கர்யம்தான் . சாதம் வடிக்கிறப்ப நல்லா வெந்த பதம் வந்திருச்சுன்னா, அந்தச் சோறெல்லாம் ... பானயோட மேல் பகுதிக்கு வந்துரும். அதை வடிக்கிறப்ப தட்டு மேல வந்து நிக்கும் . வடிசட்டியில பானையைக் கவுத்தினா... வடிதட்டை மீறின சோறுங்க... வடிசட்டியில விழும் . அதைத்தான், ' மெத்த வடிச்ச முன்சோறு, கழுநீர் பானையில விழும்' னு சொல்லியிருகாங்க .
--- மெய்யழகன் , அவள் விகடன் , 15 . 1 . 2010 .

No comments: