Saturday, March 3, 2012

அட...அப்படியா சங்கதி ? !

' ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்...
பாடுற பாட்டை பாடி கறக்கணும் '.
மாடு பாடுறதா இருந்தா...... மனுஷ பயக அதுங்கள படுத்துற கொடுமையைத்தான் மொதல்ல சொல்லியிருக்கும் ! ஆனா, விஷயமே வேற... ஆடுற பாட்டா இருந்தா நிச்சயம் அதை ஆடித்தான் கத்துக்கணும் . அதேபோல பாடுறதுக்கு ஏத்த பாட்டா இருந்தா... நிச்சயம் பாடித்தான் கத்துக்கணும் . அதை, ' ஆடுற பாட்டை ஆடி கத்துக்கணும்... பாடுற பாட்டை பாடி கற்கணும் ' சொல்லிட்டு போயிருக்காங்க . நாம வேற மாதிரி சொல்லிகிட்டு திரியறோம் .
' அடுத்தவங்களோட தன்மைய தெரிஞ்சுகிட்டு, விஷயத்தை சாதிச்சுக்கணும் ' ங்கற அர்த்தத்துலயும் இதை எடுத்துக்கலாம் .
---மெய்யழகன் , அவள் விகடன் . ஜனவரி 15 , 2010 .

No comments: