Saturday, February 18, 2012

பத்தும் பறந்து போகும் !

' பத்தும் பறந்து பொகும்....எப்போது ? ' எனக் கேட்டால், ' பசி வந்தால் ' என பதில் வரும் . ' நமச்சிவாய ' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும் .
திருப்புகழில் அருணகிரியார்
" ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம் " என்கிறார் .
" உலகமக்களே ! ஐந்தெழுத்து மந்திரமான ' சிவாயநம ' என்பதை மனதில் ஓதினால் ' ஆவி பத்தும் ' பறந்து விடும் .
அதென்ன ' ஆவி பத்து ! '
' ஆ ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் ' ஆபத்து ' . ' வி ' யுடன் சேர்த்தால் ' விபத்து '. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உயிருக்கு வரும் துயரையும் குறிக்கும் . உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது . இதனால்தான் ' சிவாயநம ' என்று சிந்தித் திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை ' என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).

No comments: