Wednesday, February 29, 2012

மாய எண்கள் !

கணிதத்தில் அதிசயங்களுக்குப் பஞ்சமே இல்லை . அதில் ஒன்றுதான் இந்த மாயக்கணக்கு ! இதை நன்கு கவனியுங்க... ரசிங்க... நண்பர்களிடம் சொல்லி அசத்துங்க !
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
---- தினமலர் இணைப்பு . ஏப்ரல் 1 . 2011 .

Tuesday, February 28, 2012

ஆரோக்கிய முத்திரைகள் !

வாதநீக்கி முத்திரை : இரு கைகளின் சுட்டுவிரல் மற்றும் நடுவிரலை மடக்கி அந்தந்த கையின் பெருவிரலின் அடிப்பகுதியில் இணைத்து கொஞ்சம் அழுத்தமாக வைப்பது ' வாத நீக்கி முத்திரை '. இந்த முத்திரையை வேளைக்கு 15 நிமிடங்கள் என தினமும் 3 வேளை செய்யலாம் . இது வாதப்பிரச்னைகள், தலைவலி, காதுவலி, பல்வலி, தொண்டை வலி ஆகிய பிரச்னைகளை நீக்குவதோடு, ஞாபகசக்தியையும் அதிகரிக்கும் .
மூட்டு முத்திரை : வலதுகை பெருவிரல் முனையோடு மோதிர விரல் முனையைச் சேர்த்து மற்ற விரல்களைத் தளர்வாக நீட்டவும் ; இடதுகை பெருவிரல் முனையோடு நடுவிரல் முனையைச் சேர்த்து மற்ற விரல்களைத் தளர்வாக நீட்டவும் . இந்த ' மூட்டு முத்திரை'யை வேளைக்கு 15 நிமிடங்கள் என தினமும் 4 வேளை செய்யலாம் . இது மூட்டுவலி, கை -- கால் வலியை நீக்குவதோடு எலும்பு தேய்மானத்தையும் தவிர்க்கும் .
--- தினமலர் இணைப்பு . ஏப்ரல் 10 . 2011 .

Monday, February 27, 2012

தெரியுமா? தெரியுமே !

* பெரும்பாலான பறவைகள், அதிகபட்சமாக 914 மீட்டர் உயரம் வரைதான் பறக்கும் . விதிவிலக்காக இமயமலைப் பகுதியில் உள்ள சில பறவை இனங்கள் 8000 மீட்டர் உயரம் வரை பறப்பதுண்டு .
* ஒரு ஆண்டின் 12 மாதங்களை ஒரு பருவத்துக்கு 2 மாதங்கள் என்று பிரித்துள்ளனர் . அவை : கார்காலம், முன்பனிக்காலம், கூதிர்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் ஆகியவை .
* முன்பனிக் காலம் என்ற பருவம் மார்கழி மற்றும் தை மாதங்கள் அதாவது டிசம்பர், ஜனவரி மாதங்களைக் குறிக்கும் . கூதிர் காலம் என்ற பருவம் ஐப்பசி, கார்த்திகை ( அக்டோபர், நவம்பர் ) மாதங்கள் . பின்பனிக் காலம் என்றால் மாசி, பங்குனி ( பிப்ரவரி, மார்ச் ) மாதங்கள் . இளவேனில் காலம் என்பது சித்திரை, வைகாசி ( ஏப்ரல், மே ) மாதங்கள் . முதுவேனில் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்கள் . ஆதாவது ஜூன், ஜூலை மாதங்கள் . கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி ( ஆகஸ்ட், செப்டம்பர் ) மாதங்கள் .
* பழங்காலத் தமிழர்கள் ஒரு நாள் பொழுதை வைகறை ( இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை ), காலை ( காலை 6 மணி முதல் 10 மணி வரை ) , நண்பகல் ( பகல் 10 மணி முதல் 2 மணி வரை ), ஏற்பாடு ( மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ), மாலை ( 6 மணி முதல் 10 மணி வரை ) , யாமம் ( இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ) என்று ஆறு பொழுதுகளாகப் பிரித்து வைத்து கூறிவந்தனர் .
--- தினமலர் இணைப்பு 8 ஏப்ரல் 2011 .

Sunday, February 26, 2012

பூக்களிலும் உண்டு !

பூக்களிலும் உண்டு, ' போலிச் சாமியார்கள் ! '
மனிதர்களில் சம்சாரிகள், சன்னியாசிகள், போலிச்சாமியார்கள் இருப்பது போல பூக்களிலும் இருக்கின்றன .
மல்லிகை, முல்லை, ரோஜா ஆகியவை அழகாக பூக்கும் . ஆனால் காய்க்காது, பழுக்காது . எனவே, இவற்றை முன்னோர்கள் சன்னியாசி பூக்கள் என்றனர் .
பூசணி, புடல், பாகல், அவரை ஆகியவை பூப்பூக்கும், காய்க்கும், பழுக்கும் . எனவே, இவை சம்சாரிப்பூக்கள் எனப்படும் .
டிசம்பர், கனகாம்பரம் போன்றவை பூக்கும், காய்க்கும் . ஆனால், மணம் தராது . எனவே, இவை போலிச்சாமியார் பூக்கள் .
--- உமா, திருவெண்காடு . தினமலர் இனைப்பு. ஏப்ரல் 9 . 2011 .

Saturday, February 25, 2012

தெரியுமா? தெரியுமே !

* பஞ்சாங்கம் படிப்பதற்கு பஞ்சாங்க படலம் என்று பெயர் . கேட்பதற்குப் பஞ்சாங்க சிரவணம் என்று பெயர் .
* திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணங்கள் என்பவை பஞ்சாங்கம் எனப்படுகிறது . .
* பஞ்சாங்கத்தில் அவ்மாகம் என்றும், திரிதினஸ்பிர்க் என்றும் இருப்பதைப் பார்த்திருக்கலாம் . ஒரு நாளில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்திருந்தால், அந்த நாளை அவமாகம் என்பர் ஒரு திதி அல்லது நட்சத்திரம் அல்லது யோகம் மூன்று நாட்களில் கலந்திருந்தால் அந்த நாளை திரிதினஸ்பிர்க் என்பர் . இத்தகைய நாட்களில் சுபகாரியங்களைச் செய்யக் கூடாது .
* பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புக்களில் கரணம் ஒன்று . ஒரு நாளில் இரண்டு கரணங்கள் இடம்பெறும் . கரணங்கள் 11 . அவற்றுள் சர கரணங்கள் 7 . அவை : பவம், பாலவம், கெவுலவம், தைதுலம், சுரஜை, வனிஜை, பத்ரம் என்பார்கள் . சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் என்ற நான்கும் ஸ்திர கரணங்கள் ஆகும் .
* பூமியைச் சுற்றியுள்ள அண்டப் பெருவெளி ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது . அந்த வட்டத்துக்கு 360 டிகிரிகள் . அவை 12 ராசிகளாக பிரிக்கப்படுகின்றன .ஒரு ராசிக்கு 30 டிகிரிகள் சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஒரு மாதம் என்று சொல்லப்படுகிறது .
* சூரியன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு ஒரு மாதம் . அந்த நேரத்தில் சந்திரனோ 12 ராசிகளையும் ஒருமுரை கடந்து வந்து விடுகிறது .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் சந்திரனுக்கு முன்னால் உள்ள தூரம் ( அதாவது 6.6 டிகிரிகள் ) நட்சத்திரத்த்தின் முதல் இரண்டு பாதங்கள் . பின்னால் இருப்பது அந்த நட்சத்திரததிற்குரிய பின் இரு பாதங்கள் .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . ( ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி . ஒரு நட்சத்திரம் 13.2 டிகிரி ) .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .

Friday, February 24, 2012

' 3 ' மேஜிக் !

எல்லா எண்களைப்போல ' 3 ' - க்கும் சில அதிசயத் தன்மைகள் உண்டு.... உங்கள் நண்பர்களிடம் சொல்லி அசத்த ஒரு ' 3 ' மேஜிக் இதோ :
3 X 1 X 37 = 111
3 X 2 X 37 = 222
3 X 3 X 37 = 333
3 X 4 X 37 = 444
3 X 5 X 37 = 555
3 X 6 X 37 = 666
3 X 7 X 37 = 777
3 X 8 X 37 = 888
3 X 9 X 37 = 999
--- தினமலர் இணைப்பு 8 ஏப்ரல் 2011 .

Thursday, February 23, 2012

எந்த யோகத்தில் என்ன செய்யலாம் ?

அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள் . பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும் . யோகங்கள் 27 . இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு .
விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் . யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :
விஷ்கம்பம் -- மனநடுக்கம்; ப்ரீதி -- பிரியம் ; ஆயுஷ்மான் -- வாழ்நாள்; சவுபாக்கியம் -- புண்ணியம்; சோபனம் -- நலம்; அதிகண்டம் -- பெரிய கண்டங்கள்; சுகர்மம் -- அறம்; திருதி -- துணை; சூலம் -- சில திசைப் பயண இடையூறுகள்; கண்டம் -- ஆபத்துக்கள்; விருத்தி -- ஆக்கம்; துருவம் -- ஸ்திரத்தன்மை பெறுதல்; வியாகாதம் -- பாம்பு முதலானவற்றால் ஆபத்து; அரிசனம் -- மகிழ்ச்சி; வச்சிரம் -- ஆயுதங்களால் தொல்லை; சித்தி -- வல்லமை; வியதீபாதம் -- கொலை; வரியான் -- காயம்; பரிகம் -- தாழ்வு; சிவம் -- காட்சி; சித்தம் -- திறம்; சாத்தியம் -- புகழ்; சுபம் -- காவல்; சுப்பிரம் -- தெளிவு; பிராம்மம் -- பிரமை; மாஹேத்திரம் -- இந்திரனைப் பற்றிய அறிவு; வைத்திருதி -- பேய்களால் தொல்லை .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .

Wednesday, February 22, 2012

இவை எல்லாமே ஆஹா !

* தக்காளியை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி, ரசத்தில் சேர்த்தால், வீணாக்கிவிடுவர் . தக்காளியை மிக்ஸியில் அரைத்து, புளி ஜலத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து ரசம் வைக்கவும் . சுவையும், மணமும் சூப்பராக இருக்கும் . புளியின் தேவையும் குறையும் .
* இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து, வெங்காயத்துடன் வதக்கி ரவா உப்புமா செய்தால் வாசனையாக இருப்பதுடன் மிளகாயும் வாயில் கடிபடாது .
* வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள், தண்ணீரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட்டு, சிறிது படிகாரத்தைப் போட்டு காய்ச்சி இறக்கவும் . ஆறியதும் அந்நீரில் வாய் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கும் . தினமும் மூன்று முறை இப்படிச் செய்யலாம் .
* மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குறைய, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை, 100 மில்லி மோருடன் கலந்து குடிக்கவும் . வயிற்று வலி குறையும் .
* கறுப்பானவர்கள் கண்ட கண்ட கிரீம்களைத் தடவி அலர்ஜி வரவழைத்துக் கொள்வதைவிட, இயற்கை வழியை மேற்கொண்டு பொலிவு பெறலாம் . ஆவாரம் பூவை உலர்த்திச் சருக்காக்கி அதைத் தூள் செய்து, அத்துடன் அரைப் பங்கு கடலை மாவை கலந்து, காற்றுப்புகா டப்பாவில் அடைத்துவைத்துக் கொள்ளவேண்டும் . தினமும் காலையில் இந்தப் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் சில நாட்களில் அனைவரும் " எப்படி இவ்வளவு சிவப்பானாய் ? " என்று கேட்பது உறுதி .
* நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, வெயில் காலத்தில், குளிக்கும் போது, பக்கெட் தண்ணீரில் 4 சொட்டு யுடிகொலன் விட்டு குளிக்கவும் . வியர்வை துர்நாற்றம் வீசாது .
* கை விரல்களை சங்கு மாதிரி வைத்துக்கொண்டு ( சிரிது உயர்த்தி ) 10 நிமிடம் மூச்சை இழுத்து விடுவோமேயானால் உடம்பின் எல்லா பாகங்களும் சுவாசம் பெறும் .
* ஒரு கரண்டி இட்லி மாவில், கைப்பிடி ஜவ்வரிசியை கலந்து வைத்து விட்டால், சிறிது நேரத்தில் மாவு கெட்டியாகிவிடும் . பிறகு, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கலந்து போண்டாவாக உருட்டிப் போடலாம் . புதுவித ருசியுடன் இருக்கும் .
* காலை வேளையில் குழம்பு, ரசம் வைக்க புளி ஊற வைத்துக் கரைக்கச் சிரமப்படுகிறீர்களா ? தேவையான அளவு புளியை ஒரு தம்ளர் தண்ணீர்விட்டு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஃப்ரிஜ்ஜில் முன் இரவே வைத்து விடுங்கள் . காலையில் அந்தப் பாத்திரத்தில் புளிக்குப் பதில் புளி பஞ்சுதான் இருக்கும் .
* பல் தேக்கும் பேஸ்ட் காலியாகும் நிலை வந்துவிட்டால் டியூப்பை அழுத்திக் கஷ்டப்பட வேண்டாம் . டியூப்பின் நடுவில் கத்தரியால் இரண்டாக கட் பண்ணினால் போதும் . மிச்சம் இருக்கும் பேஸ்ட் எளிதாக வெளியே வந்து விடும் .
--- மங்கையர் மலர் . ஏப்ரல் 2011 .
--- இதழ் உதவி : N .கிரி நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Tuesday, February 21, 2012

பலன்கள் !

தானதர்மத்தில் கிடைக்கும் பலன்கள் !
தீர்த்தங்களில் ( அதாவது, புண்ணிய நதிகளில் ) ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்ககள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும் . கங்கையில் ஸ்நானம் செய்வதும், காசி விஸ்வநாதர் தரிசனமும் முக்திக்கு வழி .
பிரசித்தி பெற்ற இடம் பிரயாகை . இது, அலகாபாத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது . இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகின்றது . இதற்கு தனிப்பெருமை உண்டு . அனேக கோடி புண்ணிய தீர்த்தங்களில் சிறந்தது பிரயாகை என்றும் சொல்லப்படுகிறது . இந்த இடத்தை, திருவேணி சங்கமம் என்றும் கூறுவர் . கங்கையை விண்ணவரும், யமுனையை சூரியனும், பிரயாகையை இந்திரனும் காப்பதாக ஐதீகம் .
மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரயாகை கங்கை ஸ்நானம் அவசியம் . இந்த பிரயாகையில் செய்யும் தானங்களுக்கு, பிரமாதமான பலன்கள் உண்டு .
பிரயாகையில் ஒரு மாதமோ, குறைந்தது மூன்று தினங்களோ தங்கி ஸ்நானம் செய்து, தான தர்மங்கள் செய்யவேண்டும் . இந்த இடத்தில் கோதானம் செய்தால், அந்தப் பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளதோ, அத்தனை வருட காலம் சிவலோக வாசம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
எந்த தானம் கொடுத்தாலும், அது பித்ருக்களின் பிரீதிக்காக கொடுப்பதாக நினைக்கவேண்டும் . தானம் வாங்குபவர்களும், பித்ருக்கள் திருப்தியடைவதாக எண்ணி வாங்க வேண்டும் .
கோதானம் கொடுப்பது என்றால், நன்றாகக் கறக்கும் பசுவை, கன்றுடன் சேர்த்து ( இளங்கன்று சிறந்தது ) பசுவுக்கு அலங்காரம் செய்து, கொம்பில் கொப்பிகள், குளம்புகளில் வெள்ளி காப்பு, கழுத்தில் பட்டாடை இவைகளுடன் தானம் செய்ய வேண்டும் . கிழ மாட்டையும், நோய் பிடித்த மாட்டையும், தானம் செய்வதால் பலனில்லை .
--- வைரம் ராஜகோபால் , ஞானானந்தம் தொடரில் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).

Monday, February 20, 2012

எலிசபெத் டெய்லர் .

லண்டனில் அமெரிக்க பெற்றோருக்கு பிறந்தவர் எலியபெத் டெய்லர் . இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா சென்று, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவருடைய குடும்பம் குடியேறியது . 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் எலிசபெத் நடிக்கத் தொடங்கினார் . பின்னர், படத்துக்கு 10 லட்சம் டாலர் சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்தார் .
1963 ம் ஆண்டு வெளிவந்த ' கிளியோபாட்ரா ' படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனுடன் நடிக்க எலிசபெத் டெய்லர் வாங்கிய சம்பளம் 40 லட்சம் டாலர் ஆகும் . அதன் இப்போதைய மதிப்பு 4.7 கோடி டாலர் ஆகும் .
லாஸ் எஞ்சல்ஸ் நகரில் எலிசபெத்துக்கு பண்ணை வீடு உட்பட 15 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது . சினிமாவில் நடித்து கிடைத்த புகழைவிட, பலமுறை திருமணம், விவாகரத்து செய்து கொண்டதால் எலிசபெத் பிரபலமானார் .
மொத்தம் 8 முரை விவாகரத்து செய்தவர் அவர் . ஆனால், அவருடைய முன்னாள் கணவர்கள் 7 பேர் மட்டுமே . ஏனெனில், ரிச்சர்ட் பர்ட்டனை 2 முரை திருமணம் செய்து, விவாகரத்து செய்துவிட்டார் .
இதய கோளாறு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிடார்ஸ் -- சினாய் மருத்துவ மையத்தில் 79 வயது எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . எனினும் அதே மருத்துவமனையில் எலிசபெத் டெய்லர் கடந்த மாதம் 23 ம் தேதி அதிகாலை மரணமடைந்தார் .
மறைந்த எலிசபெத் டெய்லரின் நகைகள் மற்றும் சொத்துகள் மதிப்பு 100 கோடி டாலர் ( ரூ. 4,500 கோடி என இப்போது மதிப்பிடப்பட்டுள்ளது . சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான 14 பெண்களின் பட்டியலில் எலிசபெத் டெய்லர் இடம் பெறுகிறார் என்று ' தி இண்டிபென்டென்ட் ' பத்திரிகை கூறுகிறது .
--- தினமலர் ,ஏப்ரல் 1 , 2011

Sunday, February 19, 2012

டிப்ஸ்....டிப்ஸ்....

* கத்தரிக்காயைச் சுட்டு... பச்சடி, கொத்சு, துவையல், கூட்டு போன்றவற்றைச் செய்வதற்கு எளிமையான வழி... கத்தரிக்காயின் மீது நல்லெண்ணெயை தடவி, காம்புடன் ஒரு தட்டில் வைத்து, குக்கரில் சாதம் வைக்கும்போது வைத்து விடுங்கள் . இதனால், கத்தரிக்காயின் தோலைச் சுலபமாக நீக்கலாம் . காய் பாகத்தைக் கையால் பிசைந்தால் கூழாகிவிடும் .விரும்பிய பதார்தத்தை விரைவில் தயாரிக்கலாம் .
* ரெடிமேட் ' த்ரீ இன் ஒன் ' மாவு தயாரிக்க ஒரு ஐடியா . கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, தேவையான காரப்பொடி, உப்பு, பெருங்காயம், டால்டா சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள் . இந்த மாவை ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள் . தேவையானபோது எடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, பஜ்ஜி, பக்கோடா, முறுக்கு என வெரைட்டியான டிபன் நொடியில் தயாரித்துவிடலாம் .
* சுருட்டி வைத்திருக்கும் சார்ட் பேப்பர், காலண்டர், டாக்குமென்ட் இவற்றை நேராக்குவதற்காக, எதிர்பக்கமாக சுருட்டுவது வழக்கம் . இதனால், பேப்பரின் ஆரம்பம் கசங்கி விடுவது வாடிக்கையாக நடக்கும் . சப்பாத்திக் குழவி, பி.வி.சி. பைப், பாட்டில் பொன்ற உருளையான பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதை ஒட்டினார்போல் பிடித்துக் கொண்டு சுருட்டிவிட்டு, பிறகு விரித்தால் பேப்பர் கசங்காமல் நேராகி விடும் .
--- அவள் விகடன் . 8 . 4 . 2011 . இதழ் உதவி : N. கிரி , நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).

Saturday, February 18, 2012

பத்தும் பறந்து போகும் !

' பத்தும் பறந்து பொகும்....எப்போது ? ' எனக் கேட்டால், ' பசி வந்தால் ' என பதில் வரும் . ' நமச்சிவாய ' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும் .
திருப்புகழில் அருணகிரியார்
" ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம் " என்கிறார் .
" உலகமக்களே ! ஐந்தெழுத்து மந்திரமான ' சிவாயநம ' என்பதை மனதில் ஓதினால் ' ஆவி பத்தும் ' பறந்து விடும் .
அதென்ன ' ஆவி பத்து ! '
' ஆ ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் ' ஆபத்து ' . ' வி ' யுடன் சேர்த்தால் ' விபத்து '. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உயிருக்கு வரும் துயரையும் குறிக்கும் . உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது . இதனால்தான் ' சிவாயநம ' என்று சிந்தித் திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை ' என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள் .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).

Friday, February 17, 2012

11 வகுத்தல் டெக்னிக் !

ஒரு எண் 11 ஆல் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு ஈஸி டெக்னிக் இருக்கிறது .
2 இலக்க எண்கள் : இவை 11 - ஆல் வகுபடுமா என்பதைப் பார்த்ததுமே சொல்லிவிடலாம் . இரண்டு இலக்கங்களும் ஒன்றாகவே ( 11, 22, 99 ) இருக்கும் !
3 இலக்க எண்கள் : இந்த எண்களில் முதல் எண்ணையும் 3 வது எண்ணையும் கூட்டி, அதிலிருந்து மத்தியில் உள்ள எண்ணைக் கழிக்க வேண்டும் . விடை 0 அல்லது 11 வந்தால், அந்த எண் 11 ஆல் வகுபடும் !
உதாரணம் : அ ) 198 ... ( 1 + 8 ) கழித்தல் 9 . = 0;
ஆ 759 ... ( 7 + 9 ) கழித்தல் 5 ; = 11. எனவே இந்த இரு எண்களும் 11 ஆல் வகுபடும் .
அதிக இலக்க எண்கள் : இந்த எண்களிலும் மேற்குறித்த வகையிலேயே ஒரு எண்ணை விட்டு ஒரு எண் என்ற வரிசையில் கூட்டி, கூட்டுத்தொகை வித்தியாசம் 0 அல்லது 11 வருகிறதா என்று பார்த்தால் போதும் !
உதாரணம் : .அ ) 2574... ( 2 + 7 ) ; கழித்தல் ( 5 + 4 ) = 0 ;
ஆ ) 58432... ( 5 + 4 + 2 ) ; கழித்தல் ( 8 + 3 ) = 0 .எனவே, இவை 11 ஆல் வகுபடும் !
--- தினமலர் ,டிசம்பர் 24 ,. 2011 .

Thursday, February 16, 2012

தெரிந்ததும் தெரியாததும் !

* அத்திரிமுனிவரின் மனைவி -- அனுசூயா .
* ராவணன் -- கரனின் தம்பி .
* அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர் -- காமவல்லி .
* சூரியனின் அம்சமாகப் பிறந்த குரங்கு மன்னன் -- சுக்ரீவன் .
* தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத்தச்சர் -- மயன் .
* வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை -- கருடன் .
* பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர் -- ஜாம்பவான் .
* ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன் -- வால்மீகி .
* தசரத்ருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை -- சத்ருக்கனன் .
* அனுமனுக்கு ' சிரஞ்சீவி ' பட்டம் அளித்தவள் -- சீதாதேவி .
--- தினமலர் , பக்தி மலர் , 6 . 3 . 2011 . ( திருச்செந்தூர் ).

Wednesday, February 15, 2012

2 மேஜிக் !

நண்பரிடம் இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள் .
2 . அதை இரு மடங்காக்கு .
3 . வரும் விடையுடன் 4 - ஐ கூட்டு .
4 . வரும் விடையை 2 - ஆல் வகு .
5 . வரும் விடையைச் சொல் ... நீ நினைத்த எண்ணைச் சொல்கிறேன் .
அவர் சொல்லும் எண்ணிலிருந்து 2 - ஐ கழித்துச் சொல்லுங்கள் ... ' அடடே ! ' என்று அசந்துவிடுவார் .
ஒரு உதாரணம் : நண்பர் நினைத்த எண் = 15 ; இரு மடங்காக்கினால் 30 ; 4 - ஐக் கூட்டினால் 34 ; 2 ஆல் வகுத்தால் 17 ; இதில் நீங்கள் 2 -ஐ கழித்தால் , நண்பர் நினைத்த எண் 15 .
--- தினமலர் . 4 .3 .2011 .

Tuesday, February 14, 2012

கண்டுபிடிப்பு !

இந்து சமய குறியீடுகள் கண்டுபிடிப்பு !
வட அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் பலாட்க்கி என்ற சிகப்பு நிறமுடைய மலைப்பகுதியில் ஜாக் அண்ட்ரூஸ் என்பவராலும், மற்றொரு குறியீடு தென்னாப்பிரிக்கா பூம்பலாசில் உள்ள சுபாஸ் சந்திரபோஸ் சதுக்கத்தில் ரோப் மில்லன் என்பவராலும் இந்த ஓம் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு மாறுபட்ட வடிவில், அதாவது 90 டிகிரி திரும்பியது போல் கருஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது . தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு பாறை மீது பொறிக்கப்பட்டுள்ளது . அதில் தசமகா வித்யாக்களின் பத்து பெண் தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீதாராவின் இருபத்தோரு அம்சங்களை குறிப்பிடும் இருபத்தோரு கோடுகள், ஒளி ரேகைகள் போலும், ஸ்தூல, சூட்சும, காரண நிலைகளை குறிப்பிடும் மூன்று வட்டங்களும், அடுத்து பிரபஞ்ச குறியீடும், அதற்கு நடுவே இமயமலையில் உள்ள ஓம் பர்வதம் எனும் மலையில் காணப்படும் ஓம் - வடிவம் போன்றும், அதனைச் சுற்றிலும் ஒளி ரேகைகளுடன் தீர்க்க பிரணவ மந்திரமாகிய ஓம் குறியீடும் காணப்படுகின்றது . இந்த குறியீட்டில் காணப்படும் பிரபஞ்ச குறியீட்டின் வடிவத்தை தமிழகத்தின் பெரும்பான்மையான கோயில்களில் காணலாம் . இதேபோல் குறியீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடபுற வாயில் படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் ஆன்மிகத் தத்துவங்களும், தீர்க்க பிரணவ மந்திரமான ஓம் குறியீடும் பல்வேறு நாடுகளை சென்றடைந்துள்ளது என்பதற்கு இந்த 2 குறியீடுகள் மிகச்சிறந்த சான்றுகளாகும் .
--- தினமலர் ,18 . 3. 2011 .

Monday, February 13, 2012

' புது ' கொசு விரட்டி !

போலந்தின் சில பகுதிகளில் பயங்க்ர வெள்ளப் பெருக்கு . லட்சக்கணக்கில் கொசுக்கள் பெருகியதில் பல பகுதிகளிலும் தொற்றுநோய் பாதிப்பு . அரசு ' ரூம் போட்டு யோசித்து ' அமல்படுத்திய ஒரு புதிய யுக்தியில் கொசுத் தொல்லைக்கு ' குட்பை ' !
அந்த யுக்தி ?
கொசு பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் வீட்டுக்கு ஒரு வவ்வால் வழங்கியது அரசு . அவை கொசுக்களை விழுங்கியதில், தீர்ந்தது தலைவலி !
வவ்வால்களின் உதவியில் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டாயிரம் கொசுக்கள் பரலோகம் போவதாக குஷி அறிக்கை வெளியிட்டிருக்கிறது அரசு !
--- தினமலர் இணைப்பு , 6 . 3 . 2011

Saturday, February 11, 2012

6 -- 7 மேஜிக் !

6 x 7 = 42
66 x 67 = 4422
666 x 667 = 444222
6666 x 6667 = 44442222
66666 x 66667 = 4444422222
666666 x 666667 = 444444222222
6666666 x 6666667 = 44444442222222
66666666 x 66666667 = 4444444422222222
666666666 x 666666667 = 444444444222222222

Friday, February 10, 2012

கதை -- நீதி !

அலெக்சாண்டரை அடிமை ஆக்க ஆசையா ? !
கதை : இந்தியா மீது படையெடுக்க அலெக்சாண்டர் ஆயத்தமானபோது, அவரது மனைவி தனது ஆசை என்று இப்படிக் கூறினார் , ' இந்தியாவில் ' ரிஷி'கள் எனப்படும் முனிவர்கள் தவ வலிமையால் அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள் . அப்படி ஒரு ' ரிஷி'யை இந்தியாவில் இருந்து வரும்போது எனக்காகக் கொண்டுவாருங்கள் ! ' படையெடுப்பு முடிந்ததும், பிரபலமான ஒரு ரிஷியைக் கண்டுபிடித்துத் தன்னொடு வருமாறு பணித்தார் அலெக்சாண்டர் . ரிஷி நிர்தாட்சன்யமாக மறுத்துவிட்டார் . அதுவரை அலெக்சாண்டரின் வார்த்தைக்கு யாரும் மறு வார்த்தை பேசியது இல்லை . உச்சகட்ட கோபத்தில் இருந்து தன் வாளை உருவினார் அலெக்சாண்டர் . அதைப் பார்த்ததும் ரிஷி முகத்தில் பிரகாசமான புன்னகை . அதுவரை அலெக்சாண்டரின் வாளைப் பார்த்ததும் யாரும் சிரித்ததும் இல்லை . கோபத்தையும் தாண்டி ஆச்சர்யத்தில் வளைந்தன அலெக்சாண்டரின் புருவங்கள் . ' நீ ஏன் சிரிகிறாய் ? நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன் தெரியுமா....' என்றார் அலெக்சாண்டர் .
" நீ உன் வாளைப் பயன்படுத்தும் முன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள் . அந்த வாளால் நீ என்னைக் கொல்ல முடியாது என்பது முதல் சங்கதி . இரண்டாவது, நீ எனது அடிமைக்கு அடிமையாக இருக்கிறாய் ! "
புரியாமல் விளக்கம் கேட்டார் அலெக்சாண்டர் . " அந்த வாளால் என் உடலைத்தான் உன்னால் வெட்டி வீச முடியும் . ஆனால், ' நான் ' என்பது இந்த உடல் கிடையாது ! "
ஏதோ புரிந்தும் புரியாமல் தலை அசைத்த அலெக்சாண்டர், " ஆனால், நான் இந்த உலகத்தின் பேரரசன் . என்னை எப்படி உனது அடிமையின் அடிமை என்றாய் ? " என்று கேட்டார் . " ஆசை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் நான் கட்டுப்படுத்தி எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் . நான் எப்போதும் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல மாட்டேன் .
மாறாக, அவைதான் எப்போதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும் . ஆனால், உன்னைப் பொறுத்தவரை, என்னிடம் அடிமையாக இருக்கும் ஆசை, கோபம் என்ற அடிமைகளிடம் நீ அடிமையாக இருக்கிறாய் . அப்படியானால் நான் சொன்னது உண்மைதானே ! '' என்பது ரிஷியின் பதில் .
நீதி : எப்போதும் அடிமைக்கு அடிமை ஆகாதீர்கள் !
--- கி.கார்த்திகேயன் . ஆனந்த விகடன் , 9 . 3 .2011

Thursday, February 9, 2012

சிங்கப்பூரின் அதிசயம் !

உலகின் சுற்றுலா செல்லமாக இருக்கும் சிங்கப்பூரின் லேட்டஸ்டு கலர்ஃபுல் கவர்ச்சி ' மெரினா பே சண்ட்ஸ் ! '
மெரினா பே சாண்ட்ஸ் என்ற கட்டடம்... கட்டுமானக் கலையின் புதிய உச்சம் . 55 மாடிகள், 2,561 ஹோட்டல் அறைகள், உலகத்தின் அத்தனை வகை உணவுகளையும் பரிமாறும் 50 வித உணவகங்கள், எஸ்கலேட்டர்களில் பயணித்து மாடி மாடியாகச் சென்றாலும் விரிந்துகொண்டே இருக்கும் ஷாப்பிங் சென்டர்கள், எண்ணிக்கையில் அடங்காத சினிமா தியேட்டர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் மாநாடு நடந்துகொண்டே இருக்கும் விழா மண்டபங்கள்.... இவை எல்லாம் போதாது என்று மூன்று கோபுரங்களின் உச்சிகளையும் இணைத்து அந்தரத்தில் அமைந்து இருக்கும் நீச்சல் குளம் ! உச்சியில் சுகந்த மணம் பரப்ப ஒரு தொங்கும் தோட்டம் . இத்தனை அழகையும் கண்டு ரசிக்க அவ்வப்போது மேகப் பஞ்சுப் பொதிக்ளே மெரினா பெ சண்ட்ஸின் மொட்டை மாடியில் தடம் பதித்துத் தவழ்கின்றன . இவ்வளவு செயற்கை அலங்காரங்களுக்கு மத்தியில் 250 மரங்கள் பச்சைப் பசேலெனத் தலையாட்டி இயற்கைக்கு மரியாதை செய்கின்றன .
' சுற்றுலாதான் தனது நாட்டின் சுவாசம் ! ' என்பதை உணர்ந்திருக்கும் சிங்கப்பூர் அரசு... நகரின் மையப் பகுதியில் இருக்கும் தனது பூமி, ஆறு, வானம் ஆகியவற்றை மெரினா பே நிர்வாகத்திடம் ஒப்படைத்து, ' உங்களால் எத்தனை லட்சம் சுற்றுலா பயணிகளைக் கொண்டுவர முடியும் ? ' என்று கேட்டது . பதிலாக, வார்த்தையில் எதுவும் ' கமிட் ' செய்துகொள்ளாமல் கிரகப்பிரவேசம் முடிந்த ஒன்பது மாத காலத்துக்குள் ஒரு கோடியே பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அசத்தியது மெரினா பே .
மெரினா பே எதிரே இருக்கும் தடாகத்தின் மத்தியில் தாமரையின் வடிவில் விரிந்திருக்கும் அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் ஐந்து கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏழு சமையல்காரர்கள் நடத்திய ' சமையல் சுற்றுலா ' அதுவரை நம் நாக்கின் சுவை மொட்டுகள் உணராத சுவையை எல்லாம் உணரவைத்தது .
இரவு லெசர் ஷோ !
' நீர், ஒளி, ஒலி இவற்றைக்கொண்டு என்னவெல்லாம் வர்ண ஜாலம் காட்டலாம் என்று கற்பனைக்குச் சவால்விடும் நிகழ்ச்சி அது . கட்டடங்களின் உச்சி, ஆற்றின் ஆழத்தில் இருந்து... என்று நினைத்தே பார்க்க முடியாத இடங்களில் இருந்தெல்லாம் புறப்பட்ட ஒளிக்கற்றைகள் கண்ணுக்குத் தெரியாத நீர்த்திரைகளில் படர்ந்து பரவி சாகசம் செய்தன . வெற்றுவெளியில் சிறுமி சிரிக்கிறாள், நாய்க்குட்டி குரைக்கிறது, குபீரென நீச்சலுடையில் தாவி வரும் பெண் தடாகத்துக்குள் பாய்கிறாள்... பொழுதுபோக்கின் அதீத நீள அகலங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன . தீப்பொறி இல்லாத வாணவேடிக்கை, வானத்தையே வெள்ளித்திரை ஆக்கிய கொண்டாட்டம் என சிங்கப்பூர்.... சிங்கப்பூர்தான் !
--- பி. ஆரோக்கியவேல் . ஆனந்த விகடன் , 9 . 3 .2011 .

Wednesday, February 8, 2012

' சன் ஸ்க்ரீன் லோஷன் '

சன் ஸ்கிரீன் லோஷன்களில் ஆயிலி ( எண்ணெய்ப் பசை ) மற்றும் மேட் ஃபினிஷ் என இரண்டு வகை உண்டு . வரண்ட சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தலாம் . எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஆயிலி லோஷனைப் பயன்படுத்தினால், லோஷன் தடவிய உடனேயே வியர்க்க துவங்கிவிடும் . அவ்வகை சருமம் உள்ளவர்கள், மேட் ஃபினிஷ் சன் ஸ்கிரீன் லோஷனை உபயோகிக்கலாம் .
அனைத்து வகை சன் ஸ்கிரீன் லோஷன்களிலும் SPF ( sun protection factor ) என்ற ஓர் அளவு குறிக்கப்பட்டு இருக்கும் . ஒவ்வோர் அளவீட்டுடனும் ஐந்தைப் பெருக்கினால் வரும் நேரம் வரைதான் அந்த சன் ஸ்கிரீன் லோஷன் வேலை செய்யும் . SPF அளவுகள பத்தில் இருந்து கடைகளில் கிடைக்கிறது . குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் சன் ஸ்கிரீன் லோஷன்கள் அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் . அதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு லோஷன் தடவிய இடங்ககளைத் தண்ணீரால் கழுவிவிடுங்கள் !
--- வசுந்தரா , அழகுக் கலை நிபுணர் . ஆனந்த விகடன் , 9 . 3 .2011 .

Tuesday, February 7, 2012

சதாபிஷெகம் !

இன்னல்கள் தீர இறைவனை நாம் வணங்குகிறோம் . அந்த இறைவன் சிலரை வணங்குகிறானாம் . சகஸ்ர சந்ர தர்சீ, நித்யாக்னி ஹோத்ரி, அஸ்வத்த சேவி முதலியவர்கள் அவர்கள் .
இவர்களுள் சகஸ்ர சந்ர தர்சீ என்றால் ஆயிரம் பிறை கண்டவர் என்று அர்த்தம் . அதாவது 80 வயது மூத்தவர் என்று பொருள் .
--- தினமலர் , இனைப்பு . மார்ச் 10, 2011 .

Monday, February 6, 2012

டிப்ஸ்...டிப்ஸ்...

* சப்பாத்தி, போளி...இதற்கெல்லாம் மாவு பிசையும்போது, தண்ணீர் மற்றும் பால் சேர்க்காமல கண்டென்ஸ்டு மில்க் ( மில்க் மெய்டு போன்ற ) விட்டுப் பிசைந்து தயாரித்தால்... சுவை அருமையாக இருக்கும் . இதேமுறையில் கோதுமை மாவைப் பயன்படுத்தி சிப்ஸ்கூட தயாரிக்கலாம் .
* உளுந்து இல்லாமல்கூட தோசை வார்க்கலாம் . அரிசியை நன்றாகக் கழுவி, அதில் ஒன்றரை மடங்கு புளிப்பான மோர் ஊற்றி, 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும் . மறுநாள், அந்த மோருடன் சேர்த்தே நைஸாக அரைத்து, தோசையாக வார்த்து, சூடாகப் பரிமாறுங்கள் . கல்லில் ஒட்டாமல் அருமையாகவும் தோசை வரும்
* வாயில் போட்டதும் கரையக்கூடிய முறுக்கு வேண்டுமா ... ஒரு ஐடியா ! மாவில் தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு முன், இரண்டு டீஸ்பூன் உலர்ந்த மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து அரை நிமிடம் கிளறி இறக்கவும் . ஆறியதும் மீதி மாவில் அதைக் கொட்டி பிசையவும் . பிறகு, அச்சில் பிழிந்தால்... நொடியில் கரையக்கூடிய கரகர முறுக்கு தயார் !
* பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒன்றிரண்டு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள் . அசத்தலான அப்பளத் துவையல் ரெடி !
* இஞ்சி முற்றிப் போனால், துருவது கஷ்டமாக இருக்கும் . இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள் . இந்த துண்டுகளை சின்ன மிக்ஸியில் போட்டுச் சுற்றுங்கள் . இஞ்சித் துருவல் எளிதில் தயார் .
* எண்ணெய் பாத்திரத்தைத் தேய்க்க பொடுகிறீர்களா ? ஒரு துணியால் எண்ணெயை ஒட்ட துடைத்து எடுத்துவிட்டால், கழுவுவதற்கு எளிதாக இருக்கும் . அந்தத் துணியை அப்படியே தூக்கி வீசாமல்... தாழ்ப்பாள், கிரில், கிணற்று ராட்டினம் என எண்ணெய் தேவைப்படும் கருவிகளில் தேய்க்கலாம் . எண்ணெய் கீழே சிந்தாமல் சுத்தமாகத் துடைத்தது போலவும் இருக்கும்...'க்ரீச் க்ரீச்' சத்தத்தையும் இல்லாமல் செய்யலாம் !
--- அவள் விகடன் . 11 . 3 . 2011 .
--- இதழ் உதவி : N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Sunday, February 5, 2012

100 மேஜிக் !

எத்தனை நண்பர்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் . அவர்கள் பார்க்காத வகையில் சில துண்டு காகிதங்களில் 100 என்று எழுதி நன்றாக மடித்து ஒவ்வொருவரிடமும் ஒரு காகிதத்தைக் கொடுங்கள் . " இதை இப்போது திறந்து பார்க்கக் கூடாது; நான் செய்யச் சொல்லும் கணக்கின்பொது எந்த எண்ணையும் என்னிடம் கூற வேண்டாம் " என்று கூறிவிட்டு இப்படி கணக்கு செய்யச் சொல்லுங்கள் :
1 ஒன்று முதல் 9 வரையிலான எந்த எண்ணியும் நினைத்துக்கொள்ளுங்கள் .
2 .அதோடு 7 - ஐ கூட்டுங்கள் .
3 . வரும் விடையில் இருந்து 2 - ஐ கழியுங்கள் .
4 . வரும் விடையில் இருந்து, முதலில் நீங்கள் நினைத்த எண்ணைக் கழியுங்கள் .
5 . வரும் விடையை 20 -ஆல் பெருக்குங்கள் .
இப்படி முடித்துவிட்டு, ' இனி நான் தந்த பேப்பரை எடுத்துப் பாருங்கள் . உங்களுக்கு வந்த விடை இருக்கும் ! ' என்று அசத்துங்கள் . ' அடடே ! ' என்று அசந்துபோவார்கள் !
ஒரு உதாரணம் :
நண்பர் நினைத்த எண் 1; 7 -ஐ கூட்டினால் 8; 2 -ஐ கழித்தால் 6; நினத்த எண் 1 ஐ கழித்தால் 5; 20 -ஆல் பெருக்கினால் 100 ! ( எந்த எண் என்றாலும் 100 தான் விடையாக வரும் !
--- தினமலர் இணைப்பு , 17 .12 . 2011 .
எத்தனை நண்பர்களை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் . அவர்கள் பார்க்காத வகையில் சில துண்டு காகிதங்களில் 100 என்று எழுதி நன்றாக மடித்து ஒவ்வொருவரிடமும் ஒரு காகிதத்தைக் கொடுங்கள் . " இதை இப்போது திறந்து பார்க்கக் கூடாது; நான் செய்யச் சொல்லும் கணக்கின்பொது எந்த எண்ணையும் என்னிடம் கூற வேண்டாம் " என்று கூறிவிட்டு இப்படி கணக்கு செய்யச் சொல்லுங்கள் :
1 ஒன்று முதல் 9 வரையிலான எந்த எண்ணியும் நினைத்துக்கொள்ளுங்கள் .
2 .அதோடு 7 - ஐ கூட்டுங்கள் .
3 . வரும் விடையில் இருந்து 2 - ஐ கழியுங்கள் .
4 . வரும் விடையில் இருந்து, முதலில் நீங்கள் நினைத்த எண்ணைக் கழியுங்கள் .
5 . வரும் விடையை 20 -ஆல் பெருக்குங்கள் .
இப்படி முடித்துவிட்டு, ' இனி நான் தந்த பேப்பரை எடுத்துப் பாருங்கள் . உங்களுக்கு வந்த விடை இருக்கும் ! ' என்று அசத்துங்கள் . ' அடடே ! ' என்று அசந்துபோவார்கள் !
ஒரு உதாரணம் :
நண்பர் நினைத்த எண் 1; 7 -ஐ கூட்டினால் 8; 2 -ஐ கழித்தால் 6; நினத்த எண் 1 ஐ கழித்தால் 5; 20 -ஆல் பெருக்கினால் 100 ! ( எந்த எண் என்றாலும் 100 தான் விடையாக வரும் !
--- தினமலர் இணைப்பு , 17 .12 . 2011 .

Saturday, February 4, 2012

தெரியுமா ? தெரியுமே !

* பிரான்ஸ் நாட்டினர்தான் டென்னிஸில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் . அவர்கள், இந்த விளையாட்டின் ஆரம்ப கட்டத்தை ( இரு அணிகளுக்கும் ஸ்கோர் இல்லாத நிலவரத்தை ) ஸ்கோர் போர்டில் முட்டைகள் வடிவில் குறித்தனர் . முட்டைக்கு, பிரெஞ்சு மொழியில் ' லோவ் '. இதனால், விளையாட்டு துவங்கிய வேளையில், ' லோவ் ஆல் ' என்று குரல் எழுப்பினர் ! இந்த வார்த்தையை வேகமாகச் சொல்லும்போது, ' லவ் ஆல் ' என்பது போல் ஒலிக்கும் . நாளடைவில், எல்லோருமே ' லவ் ஆல் ' என்று குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர் !

Friday, February 3, 2012

பெருக்கல் !

ஈஸி 11 பெருக்கல் !
எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் அதை 11 - ஆல் பெருக்குவதற்கு ஈஸி வழி : முதலில் அந்த எண்ணின் கடைசியில் ' 0 ' சேருங்கள் . பிறகு இதோடு அந்த எண்ணைக் கூட்டுங்கள் !
ஒரு உதாரணம் :
12345 என்ற எண்ணை 11 - ஆல் பெருக்க வேண்டும் ...
முதலில் இதோடு ' 0 ' சேர்ப்போம் : 123450 .
பிறகு இதோடு அந்த எண்ணைக் கூட்டுவோம் : 123450 + 12345 = 135795 !
--- தினமலர் இணைப்பு , 25 . 2 . 2011 .

Thursday, February 2, 2012

மூளைக்கு கரன்ட் போனால்....

மூளைக்கு கரன்ட் போனால் கற்பனைத்திறன் பெருகும் !
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆலன்சிண்டர் தலைமையிலான குழு உருவாக்கியிருக்கும் thinking cap என்ற சிறு கருவியைக் கண்டு விஞ்ஞான உலகமே வியக்கிறது .
மூளைக்குள் ' கொஞ்சூண்டு ' மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் உருவாக்க முடியும் என உறுதி செய்வதற்கான தொடக்கமே இக்கருவி . இதைப் பொருத்திக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு தேர்வில் பங்கேற்ற 60 பேர் பிரமாதமான ரிசல்ட் பெற்றிருக்கிறார்கள்.
சரி....இதனால் என்ன பயன் ? விபத்து போன்ற காரணங்களால் இடதுபக்க மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆராய்ச்சி ஓர் வரப்பிரசாதம் . கலை, பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விஷயங்களிலும் இது பயனுள்ளதாக அமையும் .
இன்றைய வெற்றி, மூளை உலகின் முதல் படிதான் . ஆராய்ச்சி அடுத்த கட்டங்களில் பயணம் செய்யும்போது நிகழவிருக்கும் அற்புதங்களுக்கு அளவே இல்லை . எதிர்காலதில் நம் மூளையை எப்படி வேண்டுமோ அப்படி தூண்டிக்கொள்ளலாம் . அதற்கு பத்து ரூபாய் பேட்டரி போதும் என்றால், நம்புவீர்களா ?
--- தினகரன் , 27 . 2 . 2011 இதழில் வள்ளி .
--- இதழ் உதவி : செல்லூர் கண்னன் .

Wednesday, February 1, 2012

*' VOWELS '

a, e, i , o, u ஆகிய அனைது vowels -ம் வரும் வார்த்தைகள் Education மற்றும் Evaluation . ஐந்து vowels -ம் உள்ள ( ஒரே ) வார்த்தைகளும் உண்டு . abstemious , facetious என்று ! (முதலாவதன் அர்த்தம் -- மிகவும் எச்சரிக்கையாக, குறைவாக உணவு -- மது -- கேளிக்கைகளில் ஈடுபடுவது . இரண்டாவது, -- ஜாலியாக, ' ஜோக் ' கடித்துப் பேசுவது ! ) இந்த வாக்கியத்தின் தனித்தன்மை -- The quick brown fox jumps over a lazy dog !
விடை : இந்த வாக்கியத்தில் A to Z அத்தனை ஆங்கில எழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன ! இப்படி எல்லா எழுத்துக்களும் வரும் வாக்கியத்துக்கு பான்க்ராம் ( Pangram ) என்று பெயர்