Saturday, January 28, 2012

சொல்வனம் !

கொட்டும் மழையும்
குட்டிப் பெண்ணும் ...
குட்டிப் பெண்
பாட்டியிடம் கேட்டாள்
' மழை எப்படி வருது பாட்டி ? '
' அதுவா ... வானத்தில் நின்னு
கடவுள் குளிக்கிறாரு அதான் '
என்றாள் பதிலுக்குப் பாட்டி .
குட்டிப் பெண் சிரித்தாள்
'ஒரு ஆளு இவ்வளவு தண்ணியில குளிச்சா
ஊர்ல தண்ணிப் பஞ்சம் வராம
வேறென்ன செய்யும் > '
--- பாஸ்கோ பெர்னாண்டஸ் , ஆனந்தவிகடன் . 9 . 2. 2011 .

No comments: