Tuesday, January 24, 2012

எரிகல் .

பூமியை தாக்க வரும் எரிகல் .
பூமியின் மீது மோதுவதற்காக அசுர வேகத்தில் அபோபிஸ் என்ற எரிகல் வந்துகொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய நாட்டு விண்வெளி அறிஞர்கள் கண்டுபிடித்து உள்ளனர் .
இந்த எரிகல் சுமார் 300 மீட்டர் அகலம் கொண்டது என மதிப்பிடபட்டுள்ளது . பூமியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் இருக்கும், அபோபிஸ் எரிகல் இப்போது இயங்கும் வேகத்தில் பூமியை நோக்கி வந்தால், வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதியன்று பூமிக்கு 37 ஆயிரம் முதல் 38 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வந்துவிடும் . அதன்பிறகு அந்த எரிகல் மெதுவாக நகர்ந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து 2036 ம் ஆண்டு ஏப்ரல் 13 ம்தேதி, பூமியின் மீது விழுந்து நொருங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
அந்த எரிகல் மோதும்போது, பல்லாயிரம் இடிகள் ஒரே நேரத்தில் விழும்போது எவ்வளவு வெப்பம் வருமோ அந்த அளவு வெப்பம் உருவாக வாய்ப்பு உள்ளது . அதனால் மனிதர்கள் உட்பட ஒரு கோடி உயிரினங்கள் அழியும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளும் எச்சரிக்கை செய்துள்ளனர் .
--- தினமலர் பிப்ரவரி 11 , 2011 .

No comments: