Saturday, January 14, 2012

ஓட்டல் !

122 வது மாடியில் ஓட்டல் !
துபாய் புர்ஜ் கலிபா கட்டடத்தின் 122 வது மாடியில் ஓட்டல் ஒன்று நேற்று திறக்கப்பட்டது உலகிலேயே உயரமான இடத்தில் உள்ள ஓட்டல் என்ற பெருமையை இது பெறுகிறது .
வளைகுடா நகரமான துபாயில் புர்ஜ் கலிபா என்ற மிக உயரமான கட்டடம் உள்ளது . 828 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டடம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மையமாக திகழ்கிறது .
இந்நிலையில் இந்த கட்டடத்தின் 122 வது மாடியில் ' அட்மாஸ்பியர் ' என்ற பெயரில் ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 442 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள ஓட்டல் என்ற பெருமையை பெறுகிறது . இங்கு உட்கார்ந்து சாப்பிட்டால் துபாய் நகரின் அழகுத்தோற்றம் பளிச்சென தெரியுமாம் .
ஒரே நேரத்தில் 210 பேர் சாப்பிடலாம் . இந்த ஓட்டல் மட்டுமல்ல... இங்கு விலைகளும் ' உயரமாகத்தான் ' உள்ளது . உள்ளே நுழைவதற்கே தனிக்கட்டணம் . இதற்கு ரூ. ஆயிரத்து 200 தர வேண்டும் . சாப்பாடு ரூ. 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது . மற்ற உணவு ஐட்டங்களூம் இதே ரேஞ்சில்தான் உள்ளது .
--- தினமலர் . ஜனவரி 25 , 2011 .

No comments: