Saturday, January 7, 2012

ஏ.சி. உஷார் !

ஏ.சி. மெஷினை எப்பொதுமே 23 டிகிரிக்கு அதிகபட்ச வெப்பத்தில் இயக்ககூடாது . அந்த வெப்பநிலைக்கு மெஷின் சூடாகும்போது, அதன் பாகங்கள் அனைத்தும் அதிகப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் . கம்ப்ரஸர், காயில், மெஷினுக்கு உள்ளே செல்லும் ஒயர்கள் என அனைத்துப் பகுதிகளும் அந்த வெப்பநிலையில் மிக அதிகமாக சூடாகும் . அதைத் தாக்குபிடிப்பதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படாததால் மிக விரைவிலேயே அவை பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம் . மிக நீண்ட நேரம் அந்த வெப்பநிலையில் இயங்கினால் சமயங்களில் தீப்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது . அதே சமயம் எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்குக் குறைந்த குளிர்நிலையில் ஏ.சி. இயங்கக் கூடாது . அதுவும். அலர்ட் வேண்டிய ஆபத்துதான் !
ஃப்ரிஜ் பத்திரம் !
ஃப்ரிஜை ஆஃப் செய்துவிட்டு உடனடியாக மீண்டும் ஆன் செய்யக்கூடாது . ஃப்ரிஜ் குளிர் இயக்கத்துக்கு அதன் உள்ளே நிரப்பப்பட்டு இருக்கும் கேஸ் மிக முக்கியக் காரணி . ஃப்ரிஜை ஆஃப் செய்த உடன் குழாயில் கேஸ் அடைத்துக்கொள்ளும் . அப்போது குழாயில் காற்றும் செல்லாது . எனவே, குறைந்தது மூன்று நிமிடங்க்களுக்குப் பிறகுதான் ஃப்ரிஜை ஆன் செய்ய வேண்டும் . அப்போதுதான் இயல்பான நிலையில் ஃப்ரிஜ் இயங்கத் தொடங்கும் !
---- விகடன் தீபாவளி மலர் 2010 .

No comments: