Wednesday, January 4, 2012

புதுமையான போக்குவரத்து !

பிரிட்டன் தலைநகர் லண்டன் ஹூத்ரு விமான நிலையத்தில் ஒரு அதிசயமான வாகனத்தைப் பார்க்க முடியும் . தரையிலிருந்து 3, 4 மீட்டர் உயரத்தில் மேம்பாலம்போல இருக்கும் பாதையில் குட்டி வாகனங்கள் மின்னல் வேகத்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் . சிறிய கண்ணாடி அறைபோல காட்சியளிக்கும் அந்த வாகனத்தில்4 முதல் 8 பேர் வரை அமர முடியும் . ரப்பர் டிராக்கில் அந்த வாகனங்கள் ஓடுவதால், சத்தம் அறவே இருக்காது . கம்ப்யூட்டர் மூலம் அவை இயக்கப்படுவதால், குறிப்பிட்ட இடங்க்ளில் மட்டுமே நிற்கும் . அந்த இடங்களில் மட்டுமே அந்த வாகனத்தின் கதவுகள் திறக்கும் .
நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் விமானங்கள் இயக்கப்படும் ஹூத்ரு விமான நிலையத்தில் இந்த வாகனங்களின் சேவை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது . மேம்பாலத்தில் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் கிடையாது . குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடந்துவிடும் . எளிதாக ஏராளமானோர் பயணம் செய்ய முடியும் .
இந்த பயண முறைக்கு, பி.ஆர்.டி. என்று பெயர் . அதாவது, ' பெர்சனல் ராபிட் டிரான்சிட்' என்று அர்த்தம் . ஏராளமானோர் இல்லாமல், நான்கைந்து பேர்களாக இந்த வாகனங்களில் பயணிக்க முடியும் . இந்த வாகனங்களுக்கு அல்ட்ரா என்று பெயர் . இருபுறமும் ஒரே நேரத்தில் 20, 30 குட்டி அல்ட்ராக்களை இயக்க முடியும் என்பதும், நிறைய பேர் பயணிக்க முடியும் .
இந்தியாவில், அமிர்தசரஸ் நகரில் முதலில் இந்த அல்ட்ரா வாகனங்கள் பயன்படுத்த உள்ளது . நம்ம ஊர்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் ஆகும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்று நம்புவோம் !
--- தினமலர் . 17 . 7. 2011 .

No comments: