Thursday, July 5, 2012

பொது அறிவு.


* வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நகர்புற ஏழைகளுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கும் திட்டத்தின் பெயர்
--- விஏஎம்பிஏஒய்.
* 'மை கன்ட்ரி மை லைப்' நூலை எழுதியவர் -- அத்வானி.
* யுனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் திட்டங்களான யுலிப்பை கட்டுபடுத்தும் அமைப்பு -- ஐஆர்டிஏ.
* ஆந்திரா வங்கியின் சின்னத்தில் டால்பின் இடம்பெற்றிருக்கும்.
* பிரிட்ஸ்கெர் ( Pritzker Prize ) கட்டடக்கலைத் துறைக்கு வழங்கப்படுகிறது.
* தேசிய வளர்ச்சிக் கவுன்சில் தலைவர் -- பிரதமர்.
* நாட்டின் வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் -- சூரியன் வர்கீஸ்.
* சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1988 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
* பிரதமரானபோது மொரார்ஜி தேசாய் வயது 81.
* நெப்போலியன் பிறந்த தேதி -- 15 . 8 . 1769.
--- தினமலர் , 9 . 4 . 2012.

Wednesday, July 4, 2012

பொது அறிவு .


* இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.
* அமர்த்தியா சென் பொருளாதாரத் துறையை சேர்ந்தவர்.
* சத்யஜித்ரே சினிமா துறையைச் சேர்ந்தவர்.
* ரேட்கிளிப் கோடு இந்தியா பாக் நாடுகளுக்கு இடையே உள்ளது.
* பென்சிலில் பயன்படுத்தப்படுவது கிராபைட்.
* குதிரைகள் எப்பொழுதும் நின்றவாறேதான் தூங்கும்.
--- தினமலர் இணைப்பு , 6 . 4 . 2012.

Tuesday, July 3, 2012

மேஜிக் கணக்கு !


மேஜிக் கணக்குல எத்தனை பெரிய எண்ணையும் 5ஆல் ஒரே வரியில் வகுக்க முடியும்.
உதாரணம்: 123456789 எண்ணை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போ இந்த எண்ணை 5ஆல் வகுக்க வேண்டும். அதுக்கு தேர்வு செய்த எண்னை 2 ஆல் பெருக்க வேண்டும்.
123456789 X 2 = 246913578 என்று வரும். கடைசி இலக்க எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு போட வேண்டும். இதுதான் விடை. 24691357.8.
இதே போல் எந்த எண்ணாக இருந்தாலும் இரண்டால் பெருக்கி வரும் விடையின் கடைசி எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு ( புள்ளி ) போட வேண்டும்.
--- தினமலர் இணைப்பு , 6 . 4 . 2012.

Monday, July 2, 2012

பெயர்கள்


சோடா, கார்பன், கால்சியம், கோபால்ட், கோல்ட், லித்தியம், வனடியம், ஓசோன், பொட்டாஷ் இவையெல்லாம் ரசாயன பெயர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் இவைகள் ஊரின் பெயர்கள்.
ஆ...அப்படியா ?
* நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது.
* யானைக்கு குதிக்கத் தெரியாது.
* கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது.
* பாம்புக்கு கேட்கும் சக்தி கிடையாது.
* ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி கிடையாது.
* குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது.
* காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும்.
* கோலா கரடிகள் தினமும் 24 மணி நேரம் தூங்கியே பொழுதைக் கழிக்கின்றன.
--- தினமலர் இணைப்பு , 30 . 3 . 2012.

Sunday, July 1, 2012

ஈசி கணக்கு.


15 வது வாய்பாடு உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லைன்னா கவலை விடுங்கள்... எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் அதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்... ரொம்ப ரொம்ப சிம்பிள்.
உதாரணத்துக்கு ஒரு இரண்டு இலக்க எண்ணை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
உதாரணம் 23. இதை 15ஆல் பெருக்க வேண்டும். 23 X 15
தேர்வு செய்த எண்ணுடன் ' 0 ' சேர்த்துக்கொள்ளுங்கள். 230.
230 எண்ணை '2' ஆல் வகுக்க வேண்டும். 230 / 2 = 115.
இப்போ 230 ஐயும் 115 யும் கூட்ட வேண்டும். 230 + 115 = 345.
இதுதான் விடை, 23 X 15 = 345.
இதே போல் மூன்று, நான்கு, ஐந்து இலக்க எண்ணையும் பெருக்கலாம்.
--- தினமலர் இணைப்பு , 30 . 3 . 2012.

Saturday, June 30, 2012

பொது அறிவு .


* முன்னர் சயாம் என்று அழைக்கப்பட்ட நாடு -- லாவோஸ்.
* தேசியகீதம் முழுமையாகப் பாடப்பட்டால் -- 52 வினாடி பிடிக்கும்.
* பாரக் ஒபாமா, அமெரிக்காவின் -- 44 வது அதிபர்.
* திரிபுரா மாநிலத்தில் பேசப்படும் மொழி -- பெங்காலி.
* ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் -- விகாஸ் ஸ்வரூப்.
* இலங்கை யாழ்ப்பாணம் ஆங்கிலத்தில் -- ஜப்னா என்று அழைக்கப்படுகிறது.
* உலக சுற்றுச்சூழல் நாள் -- ஜூன் 5.
* முப்படைகளின் தலைவர் -- பிரதீபா பாட்டீல்.
* அயோத்தி நகரம் -- உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
* நாட்டின் முதல் பெண் முதல்வர் சிசேதா கிருபளானி -- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
-- தினமலர் , 26 . 3 . 2012.

Friday, June 29, 2012

அறுபதில் வருவது .


அறுபதில் வருவது பொக்கை !
* இருபதில் திருமணம் -- வருவது பொக்கே
அறுபதில் திருமணம் -- வருவது பொக்கை !
* சாப்பிட வேணும் தட்டு
கல்யாணத்துக்கு வேணும் துட்டு !
* பூக்கள் இணைந்தால் மாலை
மனங்கள் இணைந்தால் சோலை !
* ஆறில் திருமணம் பால்ய விவாகம்
அறுபதில் திருமணம் சால்வை விவாகம் !
* பரிசம் போட்டா வருவது நிச்சயத்தட்டு
பந்தல் போட்டா வருவது கூறைப்பட்டு !
* அலங்காரம் செஞ்சுக்காத பொண்ணும்
அலட்டல் செய்யாத மாப்பிள்ளையும்
திருமணம் செஞ்சுக்கிட்டதா சரித்திரம் இல்லை !
--- பி.விக்டோரியா, சேலம்.
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Thursday, June 28, 2012

அறிந்து கொள்வோம்....அமெரிக்கா


** அமெரிக்க தேசிய கொடிக்கு ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டைரப்ஸ், ஓல்ட், குளோரி, தி ஸ்டார் ஸ்பாங்க்ல்ட் பேனர்
என்ற பெயர்களும் உண்டு.
** அமெரிக்க தேசிய கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன. அவை, வெள்ளை, சிகப்பு, ஊதா.
** வெள்ளை, சிவப்பு நிறத்தில் 13 நீள கோடுகள் இடம் பெற்றுள்ளது. பிரிட்டனிடம் இருந்து போராடிய 13 காலனிகள்
இணைந்து அமெரிக்கா என உருவானதை அந்தக் கோடுகள் சுட்டிக் காட்டுகின்றன.
** 50 வெள்ளை நிற நட்சத்திரங்கள், 50 மாகாணங்களை நினைவுபடுத்துகின்றன.
** தலைநகரம். வாஷிங்டன் டி.சி. ( டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா ).
** பெரிய நகரம் நியூயார்க்.
** பார்லிமென்ட் ( காங்கிரஸ் ): செனட் சபை ( 100 உறுப்பினர்கள் ). பிரதிநிதிகள் சபை ( 435 உறுப்பினர்கள் ).
** அதிபர் வசிக்கும் இடம்: வெள்ளை மாளிகை.
** மோட்டோ : இன் காட் வி டிரஸ்ட்.
** பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது: 1776, ஜூலை 4. அங்கீகாரம், 1783 செப்டம்பர் 3.
--- தினமலர் .2 . 4 . 2012.

Wednesday, June 27, 2012

சிரிச்சு வையுங்க !


** " என் மனைவி கூகுள் மாதிரி...."
" புரியலையே.....?"
" ஒண்ணு விடாம தேடிக் கண்டுபிடிச்சுடுவா....!"
** " வெளியே செல்லுமுன் அபிஷேக் பச்சன் தன் மனைவியை எப்படி அழைப்பார் ?"
" ஐஸ் வர்யா ?"
** " என்னங்க, அத்தை சொன்னா கேளுங்க..."
" அப்புறம் உனக்குக் கோபம் வருமே?"
" அத்தை சொன்னா கேளுங்க... நான் சொன்னா மட்டும் செய்யுங்க... சரியா?"
** " உன் திருமணத்துக்கு வந்தவங்க எல்லாரும் ஹனிமூனுக்கு வந்தாங்களா.. எப்படி?"
" திருமணம் நடந்ததே கொடைக்கானலில்தானே !"
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Tuesday, June 26, 2012

- தெரிந்துகொள்வோம்.

பிறந்த ஊர் -- தெரிந்துகொள்வோம்.
* ஜெயலலிதா -- மேலுகோடே ( கர்நாடகா ).
* சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா -- வத்தலகுண்டு.
* தில்லையாடி வள்ளியம்மை -- ஜோக்கன்னஸ்பர்க் ( தென். ஆப் ).
* வ.உ.சி. -- ஒட்டப்பிடாரம்.
* திரு.வி.க. -- துள்ளம் 9 திருவள்ளூர் ).
* பாரதிதாசன் -- புதுச்சேரி .
* வ.வே.சு. ஐய்யர் -- வரகனேரி ( திருச்சி ).
* புலித்தேவன் -- நெல்கட்டும் செவல் ( நெல்லை ).
* மருது சகோதரர்கள் -- முக்குளம் ( அருப்புக்கோட்டை ).
* சத்தியமூர்த்தி -- திருமயம் ( புதுக்கோட்டை ).
-- தினமலர் , 26 . 3 . 2012.

Monday, June 25, 2012

சிரிப்பு வருது...!

சிரிக்க... சிரிக்க... சிரிப்பு வருது...!
வெஜ்னா - தக்கா ' lee'
ஃப்ரூட்னா - பப்பா 'lee'
பேர்னா - சோனா 'lee'
ஃபர்னிச்சர்னா - நாற்கா 'lee'
ஃபியர்னா - பெருச்சா 'lee'
டிஸீஸ்னா - தலைவ 'lee'
ஸ்வீட்னா - போ 'lee'
ப்ரேக்ஃபாஸ்ட்னா - இட் 'lee'
ஃபெஸ்டிவல்னா - தீபாவ 'lee'
கவிதைன்னா - வா 'lee'
( தெரிது தெரிது நீங்க ரொம்ப ஜா 'lee' )
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Sunday, June 24, 2012

தெரிந்து கொள்வோம்...


* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே.
* உலகின் கூரை திபெத்.
* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.
* வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான்.
* வாஷிங் மிஷினை கண்டுபித்தவர் ஜேம்ஸ் கிங்.
* நாட்டின் முதல் பெண் கவர்னர் டாக்டர் சரோஜினி நாயுடு.
* மகிழ்ச்சியின் சர்வதேச அடையாள பறவை புளூபேர்ட்.
* டகா என்பது வங்கதேசத்தின் கரன்சி.
* தேசிய இளைஞர் நாள் ஜனவரி 12.
* நாட்டின் நீண்டதூர பயணம் மேற்கொண்ட ரயில் விவேக் எக்ஸ்பிரஸ்.
* அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி பெயர் மிச்செல்.
--- தினமலர் , 19 . 3 . 2012.

Saturday, June 23, 2012

Sorry மன்னிப்பாயா?


ஹாவாய்க்காரர்கள் நான்கு வாக்கியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எப்படி மன்னிப்பது? எப்படி மன்னிப்பு கேட்பது?
-- இதோ இந்த வாக்கியங்களில் மன்னிப்பை வேண்டுங்கள்:
" நான் வருந்துகிறேன் "
" நான் உங்களை நேசிக்கிறேன் "
" தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் "
" உங்களுக்கு நன்றி "
இது நல்ல பயன்தரும் சிகிச்சை முறை. ஆனால், இந்த வாக்கியங்களை மனசுக்குள் இதே வரிசையில் மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டும் என்பது முக்கியம்.
நன்றி: ' சன்டே எக்ஸ்பிரஸ் '
தகவல்: ஸ்ரீதரப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர்.
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Friday, June 22, 2012

பறக்க பரிசோதனை.


* வானில் பலூன் மூலம் பறப்பதற்கு உரிய முறைப்படி பரிசோதனையில் வென்று லைசென்ஸ் பெறவேண்டும். இது உலகம் முழுவதும் உள்ள விதியாகும்.
* தும்மலின் வேகம் மணிக்கு 166.7 கிலோமீட்டர் தூரம் ஆகும். தும்மலின் துளிகள் 3.5 மீட்டர் வரை பரவும்.
* 6 செ.மீ அகலம், 3 செ.மீ தடிமனில் உள்ள சிறுநீரகங்களில் சுமார் ஒரு மில்லியன் சிறுநீர் முடிச்சுகள் ( நெப்ரான்கள் )
இருக்கின்றன. இந்த முடிச்சுகளை இழுத்து இணைத்து நீண்ட குழாய் மாதிரி செய்தால் அதன் நீளம் சுமார்
அறுபது கிலோ மீட்டர் வரை இருக்கும்.
* விநாயகப் பெருமானை துளசிமலராலும், சிவபெருமானை தாழம்பூவினாலும், விஷ்ணுவை ஊமத்தம் பூவினாலும்,
அம்பிகையை அருகம் புல்லாலும், லட்சுமியை தும்பைப்பூவினாலும், சரஸ்வதியை பவளமல்லியாலும் பூஜிக்க
கூடாது.
--- தினமலர் இணைப்பு , 24 . 3 . 2012.

Thursday, June 21, 2012

12 வகை உணவுப் பழக்கம்.


தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம்.
உணவு விஷயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
* 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
* 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
* 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
* 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
* 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
* 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
* 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
* 9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
* 10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
* 11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
* 12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.
-- குமுதம் , ஃபுட்ஸ் ஸ்பெஷல் . 28 . 3 . 2012 .

Wednesday, June 20, 2012

'ஓம்'


போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Tuesday, June 19, 2012

பொது அறிவு .


** அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? -- ஜார்ஜ் வாஷிங்டன்.
** சாலிஸ்பரி என்று முன்னர் அழைக்கப்பட்ட நகரம் எது ? -- ஹராரே.
** ஒரு மைல் எத்தனை மீட்டர்? -- 1609.344.
** எந்த நாட்டின் தபால்தலையில் ஹெல்வெடியா என இருக்கும்? -- சுவிட்சர்லாந்து.
** யென் எந்த நாட்டின் கரன்சி? -- ஜ்ப்பான்.
** ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் எது? -- கோல்டன் வாட்டில்.
** பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் குளிர்கால தலைநகரம் எது? -- சிம்லா.
** செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் இருக்கும்? -- 64.
** ஐந்து வரி வடிவங்களில் எழுதப்ப்படும் மொழி எது? -- கொங்கனி.
** பின்கண்டவற்றில் எது உலோகம் இல்லை? -- வைரம்.
--- தினமலர் , 12 . 3 . 2012.

Monday, June 18, 2012

தெரிந்து கொள்வோம்...


தேசிய நெடுஞ்சாலைகள்.
என் எச் 4 -- சென்னை -- மும்பை
என் எச் 5 -- சென்னை -- கோல்கத்தா
என் எச் 7 -- சென்னை -- வாரணாசி
என் எச் 45 -- சென்னை -- திண்டுக்கல்
என் எச் 47 -- சேலம் -- கன்னியாகுமரி
என் எச் 49 -- மதுரை -- ராமேஸ்வரம்
என் எச் 220 -- கொல்லம் -- தேனி
--- தினமலர் , 12 . 3 . 2012.

Sunday, June 17, 2012

வேத மரம் !


காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலின் மிகப் பழமையான மாமரம் காய்த்திருப்பதில் பக்தர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!
'ஏகம்' என்றால் ஒன்று, ' ஆம்பரம்' என்றால் மரம். 'மரமாய் உருவாகி நின்றவர் ஏகாம்பரநாதர்' என்பது இம்மரத்தைப் பின்னணியாய்க்கொண்ட புராணச் செய்தி. இதன் ஒவ்வொரு மரக் கிளையில் இருந்து உருவாகும் ஒவ்வொரு காயும் தனித் தனி சுவைகொண்டது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு கிளை. ரிக் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் புளிப்பும், யஜுர் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் இனிப்பும், சாம வேதக் கிளையில் கசப்பும், அதர்வண வேதக் கிளையில் உவர்ப்புச் சுவையும் என நான்கு வித சுவைகொண்ட காய்களை ஒரே மரத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இம்மரம் வேரோடு சாய, பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். பிறகு மரத்தின் பழங்களை, கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்குக் கொண்டுசென்று, ஆய்வு செய்து, அப்பழ விதையை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்து, மீண்டும் மரத்தைத் துளிர்க்கச் செய்து உள்ளனர். இப்படி அறிவியலும் ஆன்மிகமும் சேர்ந்த ஒரு அற்புத மரம், இந்த வேத மரம்!
--- எஸ். கிருபாகரன். ஆனந்தவிகடன் இணைப்பு , 11 . 5 . 2011.

Saturday, June 16, 2012

ஓம் !


இவ்வளவு நேரம்தான் ஒலிக்க வேண்டும்.
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை மாத்திரை என்று சொல்லுவார்கள். ஒரு நொடிப்பொழுது அல்லது இயல்பாக கண் இமைக்கும் நேரத்தை ஒரு மாத்திரை என்று இலக்கண நூல்கள் சொல்கின்றன.
ஓம் என்கின்ற மூல மந்திரத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பெரியாழ்வார்.
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்எழ வாங்கு என்பது ஆழ்வார் வாக்கு. மந்திர சாஸ்திர நூல்கள் இம்மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் அல்லது இரண்டரை மாத்திரை நேரம் ஒலிக்கலாம் என்று சொல்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. இரண்டரை மாத்திரை நேரம் ஒலித்தால் இவ்வுலக இன்பங்களை எளிமையாக, முழுமையாக பெறலாம். மூன்று மாத்திரை நேரம் ஒலித்தால் இறை ஞானம் விரைவில் கிட்டும்.
--- தினமலர் இணைப்பு . 15 . 3 . 2012 .

Friday, June 15, 2012

தகுதி !


எதற்குமே தகுதி என்ற ஒன்று வேண்டும். வாழும்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தகுதி வேண்டும்.
பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest. ' எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும். தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும். அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம்! ஆனால், எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அவற்றைத் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்.
' எலிஜிபிள் பேச்சிலர் ' என்னும் சொல்லாடலைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். திருமண மாப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய அதிமுக்கிய தகுதியை, நாவிதர் மூலம் திருமணத்திற்கு முந்தைய நாள் பரிசோதிக்கும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது.
வாழ்வில் வெற்றிபெறச் சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என 60 வகையான தகுதிகளைச் சில சுய முன்னேற்றப் பயிற்சிகளில் வலியுறுத்துவார்கள். இதை Soft skills என்பார்கள். நம்பகத்தன்மை, வளைந்துகொடுத்துப் பேசுவது, கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது, கூட்டுமுயற்சியில் ஒத்துழைப்பது, அனுபவம், கண்ணியம் என நீளும் அந்த லிஸ்ட்...
' இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். '
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ஆராயச் சொன்னது தகுதியைத்தான் !
--- லதானந்த், குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Thursday, June 14, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்? -- லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி,
சத்ருக்கனன் - சுருதகீர்த்தி.
** சூரியனின் நட்பு கிரகங்கள் எவை ? -- செவ்வாய், குரு, சந்திரன்.
** குற்றாலநாதரின் அம்பாள் பெயர் -- குழல்வாய்மொழி நாயகி.
** நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது? -- திங்களூர் ( தஞ்சாவூர் மாவட்டம் ).
** காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? -- ஜுரகேஸ்வரர்.
** தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி -- அட்டை.
** ' பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை? -- நரசிம்மர்.
** ' பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? -- பக்தர்களிடம் கருணை உள்ளவன் ( வத்சலம் - கருணை ).
** இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது? -- ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்/
** ' நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக கருதி பாடிய சிவபக்தர் யார்? -- மாணிக்கவாசகர்.
--- -தினமலர் இணைப்பு. 7 . 5 . 2011. ( சென்னை பதிப்பு )

Wednesday, June 13, 2012

தமாஷ் !


** டேக் கேர் டங்க் !
பேசும் வரை அந்த வார்த்தைகள் உனக்கு அடிமை... பேசிய பின்பு அந்த வார்த்தைகளுக்கு நீ அடிமை !
** சங்கப் பலகை !
கேலண்டரில் தேதி கிழிக்கிறது முக்கியம் இல்ல... அந்தத் தேதியில நாம என்ன கிழிச்சோம்கிறதுதான்
முக்கியம்.
** பவர்கட் புலம்பல்!
சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்... கரன்ட் கட் பார்த்து டைம் சொல்றது இந்தக் காலம்.
தேங்க்ஸ் டு தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு !
--- அவள் விகடன் , 27 . 3. 2012 .
--- இதழ் உதவி: N.கிரி , நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).

Tuesday, June 12, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் -- புனர்பூசம்.
** 'திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள் -- திருவாதிரை, திருவோணம்.
** ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் -- கிருஷ்ணர்.
** ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் -- இரண்டேகால்.
** சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் -- மூலம்.
** ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள் -- ஆடிப்பூரம்.
** நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்தநாள் -- சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்.
** முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள் -- கார்த்திகை, விசாகம்.
** சுப நிகழ்ச்சிகள் செய்ய ---- நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர். -- ரோகிணி.
** நட்சத்திர மண்டலத்தில் முதல் நட்சத்திரமாக திகழ்வது -- அசுபதி.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Monday, June 11, 2012

காசி.


காசிக்கு தம்பதியராகப் போவதுதான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாத்திரங்கள் கூறுகின்றன.
-- ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார் , மயிலாடுதுறை.
'ஓம்'
போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Sunday, June 10, 2012

ரீடர்ஸ் பேட்டை,


** மயிலுக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம் ...?
யோசிங்க... யோசிங்க... மயில் தேசியப் பறவை. கிளி ஜோசியப் பறவை ! எப்பூடி...?
** சிவன் கோயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்...
அங்கே நந்தி இருக்கும்;
இங்கே தொந்தி இருக்கும் !
** மேனேஜர் : இப்ப சுத்தறதைவிட உலகம் 30 மடங்கு வேகமா சுத்தினா என்னாகும்...?
கிளார்க் : எனக்கு தினமும் சம்பளம் கிடைக்கும் சார் ...!
--- குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Saturday, June 9, 2012

தெரிந்து கொள்வோம் !


** பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் கால்வாய் பனாமா. இது வட, தென்
அமெரிக்காக்களை இணைக்கிறது. கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் தென்மெரிக்கக் கண்டத்தைச்
சுற்றியே செல்ல வேண்டி இருந்தது. 1914ம் ஆண்டு கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அதன் நீளம் 82 கி.மீ, அகலம் 1000
அடி, ஆழம் 45 அடி.
** பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு, 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின்
பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கி கொண்டு தங்கள் கருத்துகளை
பரிமாறிக் கொள்ளலாம். பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்கள் புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்புகொள்ளும்
விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
** கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக்கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும்.

Friday, June 8, 2012

ஜோக்ஸ்.


** " நம்ம தலைவருக்கு பிடிச்ச போலீஸ்காரங்க நிறைய இருக்காங்க..."
" சரியா சொல்லு... தலைவருக்குப் பிடிச்சவங்களா... இல்ல, தலைவரைப் பிடிச்சவங்களா...?"
** " டூவீலர்ல போகும்போது ' 60 ' க்கு மேல போகாதேன்னு அப்பவே அவன்கிட்ட நான் சொன்னேன்! கேட்டானா ? "
" ஏன் ? என்ன ஆச்சு ? "
" இப்ப ' 108 ' ல் போயிட்டிருக்கான் ."
** " டாக்டர் என் வலது காது சரியா கேட்க மாட்டேங்குது..."
" பயப்பாடாதீங்க ! வயசாகுதில்லையா ?"
" என்னை ஏமாத்துறீங்களா ? ரெண்டு காதுக்கும் ஒரே வயசுதானய்யா ஆகுது ?"
** " திருமணமான புதிதில் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தா நாய் குரைக்கும். அப்போ மனைவி அன்பா வந்து முத்தம்
தருவா."
" இப்ப எப்படி நடக்குது ?"
" இப்போ வீட்டுக்கு வந்தா, நாய் அன்பா ஓடி வந்து முத்தம் கொடுக்குது. மனைவி குரைக்கிறா."

Thursday, June 7, 2012

தண்டனை .


தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
--- லதானந்த், குங்குமம் 18 . 10 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Wednesday, June 6, 2012

அர்த்தப் புதையல் .


சூர்பகர்ணாயே
நமஹ:
சூர்பம் -- முறம்;
கர்ணம் -- காது.
முறம் போன்று இருக்கும் யானையின் காது, அரிசியை புடைக்கும்போது, முறம் தூசிகளை கீழேதள்ளி விடுகிறது. தூசியில்லா அரிசிதான் முறத்தில் எஞ்சியிருக்கும். அதுபோல், காதில் விழும் வார்த்தைகளில் நல்லதை தேர்ந்தெடுத்து, தீயதை தள்ள வேண்டும் என்று விநாயக அஷ்டோத்தரத்தில் வருகிறது.
-- அனகா, சென்னை. தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Tuesday, June 5, 2012

' மாயா '


உடல் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அது இல்லை என்பதும் உண்மை. சற்று ஆழமாகப் பார்த்தால் உடல், மனம் இரண்டும் வேறு வேறு பொருளல்ல. கண்ணுக்குத் தெரியும் மனமே உடல், கண்ணுக்குத் தெரியாத உடலே மனம் என்கிறார் ஓஷோ. விஞ்ஞானமும் அப்படித்தான் சொல்கிறது. இதைத்தான் ஐன்ஸ்டீன் E = MC 2 என்று கூறினார். உயிரணுக்களின் அமைப்பின், இயக்கத்தின் வேக தாளத்தைப் பொறுத்து ஒன்று கண்ணுக்குத் தெரியும், இன்னொன்று தெரியாது. வேகம் கூடக்கூட ஐம்புலன்களுக்குப் புலப்படாது. அப்படியானால் எல்லாமே வெறும் தோற்றம்தான். இந்த உண்மையைத் தான் நமது மரபு ' மாயா ' என்று கூறியது. நமக்கு ' சாயா ' குடிப்பதில் உள்ள ஆர்வம் கூட மாயா பற்றி இல்லை .
--- நாகூர் ரூமி , கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Monday, June 4, 2012

ஒற்றுமை !


ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை :
** இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது .
** இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
** இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
** இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
** இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' --
ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
** இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு
கட்டுப்பட்டார்.
** பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
-- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம். தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Sunday, June 3, 2012

காது குத்த...


குழந்தைகளுக்கு காது குத்த கனிவான நாள் :
குழந்தை பிறந்து 6, 7, 8 வது நாளில் அல்லது முதல் பிறந்த நாளில் காது குத்தும் விழா செய்யலாம். இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரம் வராத நாளாக அது இருக்க வேண்டும் . திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும், வளர்பிறை, த்விதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய 6 திதிகளும், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் சிம்மம், விருச்சிகம், கும்பம் தவிர மற்ற 8 லக்னங்களும், கர்ணவேதை ( காது குத்ததல் ) செய்ய உகந்தவை . லக்னத்துக்கு 8 -ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது .குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது . குழந்தையின் தாய் மாமாவின் மடியில் அமர்த்தி காது குத்தல் செய்ய வேண்டும் .
--- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Saturday, June 2, 2012

தத்துவம் மச்சி தத்துவம் .


**" பர்சனல் லோன் கேக்கறீங்களே...எதுக்குன்னு சொல்லமுடியுமா ? "
" அதான் பர்சனலாச்சே... எப்படி சார் சொல்ல முடியும் ..?"
** " இந்த வீடு எங்கப்பா எம்.எல்.ஏ -வா இருக்கும்போது, ஒவ்வொரு கல்லா..."
" பார்த்துப் பார்த்து கட்டினாரா ...? "
" இல்லை... மேடையில வந்து விழுந்ததை வச்சு கட்டினது .."
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Friday, June 1, 2012

ஜோக்கூ....


** கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள்
சரியான பதிலைச் சொல்வது...
எக்ஸாம் பேப்பரில் மட்டுமே !
** கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் ...
பக்கத்து வீட்டு ஃபிகர்
ஊரில் இல்லை .
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

காந்திஜி -- கோட்சே !


காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . கோட்சே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் வருந்தியவனாக ' எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார் ' என்று கெஞ்சினான .
அதனை ஒரு கருணை மனுவாகவும் எழுதிக் கொடுத்தான் . அந்தக் கருணை மனு அப்போது இந்தியாவின் கவர்னல் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ராஜாஜி அளித்த பதில் : ' உண்மைதான் காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா ? '
--- இலக்கியப்பீடம், பிப்ரவரி , 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Thursday, May 31, 2012

விருந்து .வழக்கம்.

விருந்து .
மழை இரவு...
பசித்த பாம்புகளை
விருந்துக்கு அழைக்கின்றன
தவளைகள் !

வழக்கம்.
இன்று விரதம்தான்
இருந்தாலும் சமைத்துவிடு
வழக்கமாய் வரும்
காக்கைகள் .
--- குங்குமம் , 28 . 11. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Wednesday, May 30, 2012

ஜோக்கூ...


வெளியே
ஒரு ஆணின் படமும்
உள்ளே
பல பெண்களின்
படங்களும்
வரையப்பட்டிருப்பதுதான்
ஆண்களின்
கழிப்பறை.
---அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
--- குங்குமம் , 28 . 11. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Tuesday, May 29, 2012

ஹெல்மெட் இருந்தால்தான்...


' ஹெல்மெட் இருந்தால்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும் '
அசத்தலான புது கண்டுபிடிப்பு .
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவிகளான ஆர்த்தி, லைலாபானு, வினோதா ஆகிய மூவரும், ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாத வகையில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர் . ' ரிமோட் சென்சிங் புரோகிராம் ' என்ற தொழில்நுட்ப முறைப்படி இயங்கும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட்டை வாகன ஓட்டிகள் அணிந்தால் மட்டுமே அதற்குரிய இருசக்கர வாகனத்தை இயக்க முடியும் . மேலும், டூவீலர் உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் அதை அணிந்து ஸ்டார்ட் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம். இதனால் வாகனம் திருட்டுபோவதும் தவிர்க்கப்படும் .
அண்மையில் அகமதாபாத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், நாடெங்கிலும் உள்ள 12 ஆயிரத்து 800 பள்ளிகள் பங்கேற்றன.
இவற்றில் 8 ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன . அதில் 32 புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பானதாக அறிவிக்கப்பட்டன . தேர்வு செய்யப்பட்டவைகளில் நன்னிலம் பள்ளி மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர், மார்ச் 4 , 2012 .

Monday, May 28, 2012

நேரமும் அழகியும் ...


பிரெஞ்சு நாட்டுத் தத்துவஞானி பான்டெனல் என்பவரிடம் ஒரு அழகான பெண் வந்து, ' எனக்கும் கடிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ' என்று கேட்டாள் .
அதற்கு அந்த ஞானி, ' கடிகாரம் நேரத்தை நினைவுப்படுத்துகிறது . ஆனால் நீயோ நேரத்தையே மறக்கும்படி செய்துவிடுகிறாய் ' என்றார் .
-- கஸ்தூரி, வேலூர் .
வாட விடவா ?
நேராக படித்தாலும், திருப்பி படித்தாலும் பொருள் மாறாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் ' பாலிண்ட்ரோம் ' என்பார்கள் . அப்படி தமிழில் இருக்கும் வார்த்தைகள் ...
மாமா, பாப்பா, காக்கா, குடகு, தாத்தா, டாட்டா, வாட விடாவா, விகடகவி, மாலா போலாமா? மாவடு போட்டுவமா ?, தேரு வருதே, யானை பூனையா ?.
--- எஸ். பானுஷங்கர், திருச்சி .
--- தினமலர், இணைப்பு . மார்ச் 3 , 2012 .

Sunday, May 27, 2012

அளவு :

சாக்பீஸ் அளவு :
சுற்றளவு : 9 மில்லி மீட்டர் .
உயரம் : 80 மில்லி மீட்டர் .
பென்சில் அளவு :
உயரம் : 19 செ.மீ,.
அகலம் : 6 மி.மீ,.
சுற்றளவு : 7 மி. மீ ,.
--- தினமலர் .

Saturday, May 26, 2012

சிரிக்க ... சிரிக்க ...


** " அன்பே ! உனக்காக நான் வீட்டை விட்டுட்டு ஓடி வரட்டுமா ? "
" வேண்டாம், வீட்டை வித்துட்டு ஓடி வாங்க !"
** " லைசென்ஸூ, இன்ஷூரன்ஸூ எதுவுமே இல்லை . ஆனா, எந்த தைரியத்துல வண்டியை ஓட்டிட்டு வந்தே ?"
" பையில் 500 ரூபா இருக்கிற தைரியத்துலதான் சார் !"
** " இந்த ஆபரேஷனில் நான் பொழைக்கிறது கஷ்டமா டாக்டர் ? "
" ஆமாம் ."
" பிறகு எதுக்கு இந்த ஆபரேஷன் ?"
" நான் பொழைக்கணுமே ! "
** " ஆபரேஷனுக்கு வந்த பேஷண்ட்டை நீங்க எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்புனீங்க ? "
" நீங்கதானே டாக்டர் அவரை எப்படியாவது காப்பாத்தணும்னு சொன்னிங்க !"
** " ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு என் பையன் அடம்பிடிக்கிறான் ."
" என்ன படிக்கிறான் ? "
" ஆசிரியரா இருக்கான் !"
** " என் மனைவி எல்லாத் துறையிலும் வெளுத்துவாங்குவா ..."
" நீ ... ?"
" ஹி...ஹி... நமக்குப் படித்துறை மட்டும்தான் !"

Thursday, May 24, 2012

மேஜிக் கணக்கு .


பெருக்கலில் 5ல் முடியும் இரண்டு இலக்க எண்கள் ஒரே மாதிரி இருந்தால் அதற்கு ஒரே விநாடியில் விடை கொடுக்க முடியும் .
உதாரணம் :
35 x 35 ஒரே வரியில் விடை பெற
கடைசி எண் 5 ஐ 5 ஆல் பெருக்க வேண்டும் .
விடை : 25 .
முதல் எண் 3 ஐயும் 3 க்கு அடுத்து வரும் எண் 4 ஐயும் பெருக்க வேண்டும் .
விடை : 3 x 4 = 12 .
ஆக 35 x 35 = 1225 .
--- தினமலர் . 2 . 3 . 2012 .

Wednesday, May 23, 2012

தேசிய கீதம் -- தேசிய பாடல் !


நம் நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் . தேசியப் பாடலை எழுதியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி . தேசிய கீதம் 19 ம் நூற்றாண்டிலும், தேசிய பாடல் 18 ம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டது .
இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ' ஜன கண மன ' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது . 1911 டிசம்பர் 27 ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும் .
' வந்தே மாதரம் ' பாடலை 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் .
--- தினமலர் . 24 . 2. 2012 .

Tuesday, May 22, 2012

மேஜிக் கணக்கு !


9ம் எண்ணுடன் ஏதாவது ஒரு இலக்க எண் முதல் மிகப் பெரிய இலக்க எண் வரை பெருக்க சூப்பர் குறுக்குவழி இருக்கிறது.
உதாரணம் : 1 . 76 x 9 .
எண் 76 வுடன் 0 சேர்த்துக்கொள்ளுங்கள். 760 .
எண் 760ஐ 76 வுடன் கழிக்கவும் . 760 -- 76 = 684 . இதுதான் விடை .
உதாரணம் : 2 . 345 x 9 = 3450 -- 345 = 3105 .
-- தினமலர் . 24 . 2. 2012 .

Monday, May 21, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** கரையில் இருந்தால்தான் படகுகளுக்கு பாதுகாப்பு . ஆனால், அவை கடலுக்குள் செல்வதற்குத்தான்
உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, கரையில் நிறுத்தி வைப்பதற்கு அல்ல என்று சொல்வார்கள் .
** யானையில் இருந்து எலி வரை மிருகங்களில் ஆனாதிக்கம் மட்டுமே உண்டு . சில பூச்சிகளில் மட்டும் ( சிலந்தி மாதிரி ! ) பெண்ணாதிக்கம் .
** பிறந்த வருடத்தில் நடந்தது என்ன ? -- http:// Whathappenedinmybirthyear . com .
நீங்கள் பிறந்த வருடத்தின் உலக நடப்புகளைச் சொல்லும் தளம் ! உங்கள் பிறந்த வருடத்தைத் தட்டினால் அந்த வருடத்தில்வெளியான திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், போர்கள், நோபல் பரிசு வெற்றியாளர்கள், கண்டுபிடிப்புகள் எனத் தகவல் மழை பொழிகிறது !
** சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்தில்
இருந்து வடியும் பால் ஆகும் . சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது . அந்த எண்ணையிலிருந்து
வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது .
** நீங்கள் வாங்கும் பெரும்பாலான பொருட்களில் கறுப்பு வெள்ளை நிறக்கோடுகள் பட்டையாக இருப்பதை பார்த்திருப்பீர்கள் .
இதன் பெயர் பார்கோட் . கீழே சில எண்களும் குறிக்கப்பட்டிருக்கும் . இந்த பார்கோடு முறை அமெரிக்காவில் ரயில்
பாதையில் வரும் வண்டியின் எண்ணிக்கையை கணக்கிட பயன்படுத்தினர் . பிறகு, சூப்பர் மார்க்கெட் வணிகம் பெருகியதும்,
ஒரு பொருளின் விலை, தரம், விற்பனை அளவு, வரிசை எண் போன்ற விவரங்களை ரகசிய குறியீடுகளாக பார்கோடுகள்
விளக்குகின்றன . பார்கோடுகளை ஒளியியல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யும் போது வெள்ளைக் கோடுகளின் மூலம்
ரகசிய தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவாகி விடும் . அதில் உள்ள விவரங்களையே நம்மிடம் பில்லாக பிரின்ட் எடுத்துக்
கொடுப்பர் .

Sunday, May 20, 2012

பொது அறிவு !


** நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைரோலஜி புனேயில் உள்ளது .
** கலிலியோ பிறந்தது பிசா என்ற இடத்தில்.
** தைவான் நாட்டின் பழைய பெயர் போர்மோசா .
** யென் என்ற கரன்ஸி ஜப்பான் நாட்டின் பணம் .
** காக்பிட் ஆப் யூரோப் என்றழைக்கப்படும் நாடு பெல்ஜியம் .
** மூளை என்பது சுரப்பியல்ல .
** திட்டக்கமிஷன் 1950 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது .
** மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு .
** சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 28 .
** உலகின் மிகச் சிறிய குடியரசு நாடு -- நவுரா ( 21 சதுர கி.மீ ) -- தென் பசிபி .
** பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா .
** ஜப்பான் பார்லிமென்ட் பெயர் டயட் .
** செய்னே நதிக்கரையில் பாரீஸ் அமைந்துள்ளது .
-- தினமலர் . 20 . 2. 2012 .

Saturday, May 19, 2012

குறும்புக் கேள்விகள் !


** காதலர் தினம் அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்தால், காதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அர்த்தம் ?
--- நீல நிற ஆடைகள் !
** தமிழ் இலக்கியத்தில் ' உடன்போக்கு ' என்று குறிப்பிடப்படுவது எது ?
மனமொத்த காதலனும் காதலியும் இணைந்து வாழ முடிவு எடுத்து, தத்தமது பெற்றோரை விட்டு விலகிச் செல்வது !
--- ஆனந்தவிகடன் , 15 . 2 . 2012 .
** காதலர் தினம் அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்தால், காதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அர்த்தம் ?
--- நீல நிற ஆடைகள் !
** தமிழ் இலக்கியத்தில் ' உடன்போக்கு ' என்று குறிப்பிடப்படுவது எது ?
மனமொத்த காதலனும் காதலியும் இணைந்து வாழ முடிவு எடுத்து, தத்தமது பெற்றோரை விட்டு விலகிச் செல்வது !
--- ஆனந்தவிகடன் , 15 . 2 . 2012 .

Friday, May 18, 2012

அறிந்து கொள்வோம் !


** பைக்கானோர் விண்கலம் ஏவுதளம் கஜகஸ்தானில் உள்ளது .
** மாவீரன் அலெக்சாண்ட்ர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு கி.மு. 326.
** ஒடென்டோலஜி என்ற படிப்பு பற்கள், ஈறுகள் பற்றியது .
** சார்க் நாடுகளின் நிரந்தர தலைமை செயலகம் காத்மாண்டுவில் உள்ளது .
** மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு 1948 .
** நாட்டின் பழமையான, மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்தியன் மியூசியம் கோல்கத்தாவில் உள்ளது .
** வல்லபாய் படேல் ஸ்டேடியம் மும்பையில் உள்ளது .
** ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர் 1564 ல் பிறந்தார் .
-- தினமலர் . 13 . 2 . 2012 .

Thursday, May 17, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** ஜப்பான் தங்கள் நாட்டை இப்படி அழைப்பர் . -- நிப்பான் .
** உலகின் மிகப் பழமையான நகரமாக கருதப்படுவது -- டமாஸ்கஸ் .
** ஆங்கிலக் கால்வாய் நீளம் -- 564 கி.மீ .
** உலகில் ரப்பர் அதிகம் விளையும் நாடு -- மலேஷியா .
** வங்கதேசத்தின் முதல் அதிபர் -- ஷேக் முஜிபூர் ரகுமான் .
** உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை -- டிரான்ஸ் கனடா .
** இத்தாலியின் தேசிய மலர் -- லில்லி .
** ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் -- ஜேம்ஸ் குக் .
** நியூயார்க் நகரின் செல்லப் பெயர் -- பிக் ஆப்பிள் .
-- தினமலர் . 13 . 2 . 2012 .

Wednesday, May 16, 2012

வலை வீச்சு .


** ஒளிமயமான எதிர் காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும் : ராகுல்காந்தி .
-- எல்லாருக்கும் ' பல்பு ' தருவீங்கதானே...?!
** போதிய பக்குவம் இல்லாததால் தான் சட்டசபையில் நாக்கைக் கடிக்கிறார் விஜயகாந்த் : திருமாவளவன் .
-- கரீட்டுங் ... இலங்கைபோய் ராஜபக்சே முன்னாடியே மீசை முறுக்கின உங்க ' பக்குவம் ' அவர்கிட்ட இல்லீங் ...
** ' தி.மு.க. ஓட்டுகளை நம்பி இல்லை ! ' : ஸ்டாலின் .
-- எந்தக் கட்சியுமே நம்பியிருப்பது வாக்காளர்களின் அறியாமை அல்லது பேராசையைத் தான் .
** அதிமுகவால் தான் தேமுதிக வெற்றி பெற்றது: ஜெ . தேமுதிகவால் தான் அதிமுக வெற்றி பெற்றது: விஜயகாந்த.
-- திமுகவால்தான் நீங்க ரெண்டு பேரும் ஜெயிச்சீங்க ...! ( கருணாநிதியின் மைன்ட் வாய்ஸ் ).
** சட்டமன்றத்தில் ஆக் ஷன் செய்வது, வசனம் பேசுவது கூடவே கூடாது : ராமதாஸ் .
-- நீங்க ஏன் இப்போ பூட்டின வீட்டுக்கு முன்னாடி சவுண்டு குடுக்குறீங்க ... ?
--- கர்ணா , தினமலர் . 12 . 2 . 2012 .

கட்டுப்பாடு .

செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு .
செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு வந்தாச்சு ' லிட்டில் ஜாமர் ' கருவி .
இந்த கருவியை வீட்டில் பொருத்தினால் 50 முதல் 100 அடி தொலைவுக்கு செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது .பெற்றோர்கள் இந்த ' ஜாமரை ' தங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைவிடத்தில் பொருத்திவிட்டால், அவர்கள் என்னதான் செல்போனுடன் மல்லுகட்டினாலும் நெட்வொர்க் ( டவர் ) கிடைக்காது .
பெற்றோர்களும் கவலையில்லாமல் நிம்மதியாக தூங்கலாம் . இதன் விலையும் மலிவுதான் . ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலான விலைகளில் இந்த ஜாமர் கருவி கிடைக்கிறது . சீனாவின் தயாரிபான இந்த ' லிட்டில் செல்போன் ஜாமர் கருவி ' விற்பனை தற்போது சென்னையிலும் சக்கை போடு போடுகிறது . ஆனால், செல்போன் ஜாமரை மிகவும் ரகசியமாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது .
--- தினமலர் . 12 . 2 . 2012 .

Tuesday, May 15, 2012

தெரிந்து கொள்ளுங்கள் !


** அண்மையில் திருமணம் ஆன நான் ' ஹேப்பி'யாக வாழ ஓர் அறிவுரை ப்ளீஸ்...? -- ரொம்ப சிம்பிள் ! வாயை
மூடிக்கொள்ளவும். பர்ஸைத் திறந்துவைத்துக்கொள்ளவும் !
** என் மனைவி என் மீது உயிரை வைத்திருக்கிறாள். அந்த அளவுக்கு என்னால் பதிலுக்கு ஆசையைப் பொழிய
முடியவில்லை என்று மனம் சங்கடப்படுகிறது . என் மீது தவறா ? -- ஒன்று மட்டும் நிச்சயம் . பசித்த புலியிடம்
இருந்தும், ரொம்ப ஆசை வைக்கும் பெண்ணிடம் இருந்தும் தப்புவதற்கு சான்ஸே இல்லை என்று பழமொழி உண்டு !
-- ஹாய் மதன் . கேள்வி -- பதில் .
-- ஆனந்தவிகடன் . 15 .2 . 2012 .

Monday, May 14, 2012

வலை பாயுதே ! facebook.


** கேஸ் நிக்காதுங்க ! எங்க கேப்டன் ரகசியம் பேசும்போது கை நீட்டியும் டான்ஸ் ஆடும்போது நாக்கை
மடிச்சும்தான் ஆடுவார்!
** மின்வெட்டு படிபடியாகக் குறைக்கப்படும்: ஜெயலலிதா # உங்க மின்வெட்டுக்கு எத்தனை படிகள் இருக்கு ? அதைச்
சொல்லுங்க மொதல்ல !
** ' என் மனைவிகள்கூட என்னை ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள் !' -- மு.கருணாநிதி # இப்ப என்ன ஓய்வுதானே
எடுக்கிறாரு !
** கேப்டனைப் பற்றி கட்சியினர் புகழாரம் : ' அல்கொய்தாகிட்டேயும் ஜெயலலிதாகிட்டேயும் கை நீட்டிப் பேசுன ஒரே
தலைவர் நம்ம கேப்டந்தான் !'
** காரமா இருந்தா, அது குருமா ; காரமா இருக்கிற மாதிரி நடிச்சா... அது திருமா !
** கல்யாணம் செய்யாதவன் வாழ்வது பேச்சிலர் வாழ்க்கை ; செய்தவன் வாழ்வது பேச்சில்லார் வாழ்க்கை !
** கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி . சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது
அம்மா # அம்மாடா !
** பயணம் செல்ல அம்மா கிளம்பும்வரை பொறுமையாகக் காத்திருக்கும் நாம்தான் மனைவி கிளம்புவதற்குள் 100
முறை ஹார்ன் அடிக்கிறோம் !
-- ஆனந்தவிகடன் . 15 .2 . 2012 .

Sunday, May 13, 2012

துணுக்கு !


** தபால் கார்டை உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரேலியா . 7 . 10 . 1869ம் ஆண்டில்தான் உலகில் முதல் போஸ்ட்கார்டு அறிமுகமானது .
** ஒரு குழந்தையின் மூளை அந்தக் குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது 50 சதவீத வளர்ச்சியையும், ஆறு வயதாகும் போது 90 சதவீத வளர்ச்சியையும் அடைகிறது . முழு வளர்ச்சி அடைந்த குழந்தையின் மூளையின் எடை மூன்று பவுண்ட் ஆகும் .
** உயிரினங்களில் அதிக நேரம் மூச்சை அடக்கும் தன்மை கொண்டது முதலை தான் . தண்ணீருக்குள் 6 மணி நேரம் மூச்சுத் திணறாமல் இருக்கும் .
** வட அயர்லாந்து நாட்டில் ஒரு பிடி வைக்கோலை வீட்டில் சொருகி வைத்திருந்தால் அந்த வீட்டில் ' நாய் இருக்கிறது 'என்று அர்த்தம் .
--- தினமலர் இணைப்பு . 11 .2 . 2012 .

Saturday, May 12, 2012

மேஜிக் கணக்கு !


எண் 75 ஐ ஏதாவது ஒரு இரண்டு இலக்க எண்ணுடன் பெருக்க ஒரு எளிமையான வழி :
100 ல் 3/4 பங்கு 75 . இந்த முறையை வைத்துதான் மேஜிக் கணக்கு செய்ய வேண்டும் .
உதாரணம் : எண் 35. இதை 75 ஆல் பெருக்க வேண்டும் . எண் 35 ஐ 4 ஆல் வகுக்க வேண்டும் . 35 / 4 = 8.75 .
இந்த விடையுடன் எண் 3 ஐ பெருக்க வேண்டும் . 8.75 x 3 = 26.25.
இந்த விடையுடன் எண் 100 ஐ பெருக்க வேண்டும் . 26.25 x 100 = 2625 . இதே போல் வேறு இரண்டு இலக்க எண்ணை 75 உடன் பெருக்கிப் பாருங்கள் .
--- தினமலர் இணைப்பு . 10 .2 . 2012 .

Thursday, May 10, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** பாரத ரத்னா விருதுடன் வழங்கப்படும் பதக்கம், அரச மர இலையைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் .
** உலக சிரிப்பு நாள் ஜனவரி 10 .
** மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு 1956 .
** எச்சிலில் உள்ள என்சைம் அமிலேஸ் .
** இந்து சுவராஜ்யம் என்ற நூலை எழுதியவர் மகாத்மா காந்தியடிகள் .
** மறைந்த பெனசீர் புட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் .
** ' பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ' கோப்பை கோல்ப் விளையாட்டுடன் தொடர்புடையது .
** ' Namesake ' என்ற நூலை எழுதியவர் ஜும்பாலகரி .
** முகலாய மன்னர் ஜகாங்கீர் ஆட்சி காலத்தில், கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் தொழிற்சாலை துவக்கினர் .
** நவீன டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் பைனரி சிஸ்டம் முறையைப் பயன்படுத்துகின்றன.
** கம்ப்யூட்டர் கீபோர்டில் நீளமானது ஷிப்ட் கீ
** மைக்ரோ புராசசரைக் கண்டுபிடித்தவர் ஹப் .
** சிந்து சமவெளி நாகரிக இடங்களில் லோத்தால் என்ற இடத்தில் கப்பல் தளம் இருந்தது .
** ஹார்லி டேவிட்சன் என்பது பைக் .
** ராணுவம் தொடர்பான துருவ் என்பது இலகுரக ஹெலிகாப்டரைக் குறிப்பது .
--- தினமலர் . 6 . 2 . 2012 .

Wednesday, May 9, 2012

R.S .V.P.


கல்யாணம் மற்றும் இதர விழா அழைப்பிதழ்களின் அடியில், R. S. V. P. என்று போட்டு ஒரு தொடர்பு எண் தரப்படுகிறதே... அப்படின்னா என்ன அர்த்தம் ?
' re' pondez sil vous plait ' என்ற பிரெஞ்ச் வார்த்தையின் சுருக்கமே R.S. V . P. அப்படின்னா " விருப்பமிருந்தால் பதில் கொடுங்க !"என்று பொருள் .
--- அனுஷா நடராஜன் ,
--- மங்கையர் மலர் . பிப்ரவரி , 2012 .

Tuesday, May 8, 2012

இன்விடேஷன்


உங்கள் வீட்டுக்கு ஒரு இன்விடெஷன் வந்து, அதன் உரையின் மேல் முகவரிக்குப் பக்கத்தில் உங்கள் புகைப்படமும் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு நிமிடம் சந்தோஷமாகிவிடமாட்டீர்களா ? அப்படி ஒரு சந்தோஷத்தை ஏகப்பட்ட பேருக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் .
சில வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகளின் திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் புகைப்படம் எடுத்து எல்லோரையும் போல் ஆல்பத்தைப் பரணில் போட்டுவிடாமல், அடுத்த வாரம் நடக்கப் போகும் இரண்டாவது மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழின் கவரில் அவரவர்களின் புகைப்படத்தையும் பிரிண்ட் செய்து அனுப்பியிருக்கிறார் . பிகேபி.யின் ஐடியா புதுமையாக இருந்தது . ஒரு கொசுறுத் தகவல், இதை செயல்முறைப் படுத்தியது டிஸைனரான மணப்பெண் ஸ்வர்ணப்பிரியாதான் !
--- அரசு பதில்கள் , குமுதம் , 8 . 2 . 2012 .

Monday, May 7, 2012

சிரிக்கலாம் வாங்க !


** " சார் ! உங்களுக்கும் மன்மோகன் சிங்குக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு ! அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ! "
" எனக்குத் தெரியாதே ! "
" அதேதான் ! "
** " மாப்பிள்ளை, என் பெண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ! "
" எனக்குக் கை கொஞ்சம் நீளம் ; சமாளிச்சிடுவேன் மாமா !"
** " நீங்க பொண்ணு வீட்டுக்காரங்களா, மாப்பிள்ளை வீடுக்காரங்களா ?"
" எல்லா கல்யாண மண்டபங்களிலும்தான் பார்த்துக்கிறோம், அப்புறம் என்ன கேள்வி ?"

Sunday, May 6, 2012

வலை பாயுதே ! - facebook

** பல் செட்டைச் சுத்தம் செய்பவர்கள்தான் எவ்வளவு சிரத்தையாகச் செய்கிறார்கள் . எதுவுமே இருக்கும்போது, அதன்
அருமையை நாம் உணர்வது இல்லை !
** பத்து லட்சம் பணத்தைக் காப்பாற்றிவிடும் அலுவலகத்தில், பைக் துடைக்கும் துணியைக் காப்பாற்ற முடிய
மாட்டேங்குது...
** நிஜமாகவே அடி வாங்குகிறவனுக்குப் பேரு ...' டூப்பு ' # அதுதாண்டா சினிமா !
** ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா ? டெடிகேட் டூ மன்னார்குடி
முன்னாள் சுற்றத்தார் !
** என்ன ஆகும் 2ஜி வழக்கு ? 11 நாட்களில் ஓய்வுபெறுகிறார் நீதிபதி ! # இனி புதுசா ஒருத்தர் வந்து, ' கையைப்
புடிச்சு இழுத்தியா ? 'னு ஆரம்பிப்பார் !
** அதட்டி, மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்வது ... பொய் பேசுவதற்குத்தான் !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்தவிகடன் . 8 . 2 . 2012 .
** எடை குறைவா இருந்தா ரேஷன் !
உடை குறைவா இருந்தா பேஷன் !
** சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டம் எங்களுடையது : கருணாநிதி .
-- டீச்சர் அந்த பென்சில் டப்பா என்னோடது .. !!
-- தினமலர் , 5 . 2 . 2012 .

Saturday, May 5, 2012

பிறந்தநாள் -- தளம் !


பிறந்த நாளை நினைவுப்படுத்தும் தளம் !
பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த, திருமண நாளை நினைவு படுத்தி வாழ்த்துச் சொல்வது சற்று சிரமம்தான் . நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்துவிட்டது என்று அசடு வழிபவர்களுக்கு நினைவுபடுத்த, ஒரு தளம் உள்ளது . அதன் பெயர் http:// live. ss& birthday reminder.com .
இத்தளத்தில் Signup செய்து புதிதாக இலவச அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . அடுத்து நமது நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ தினங்களை இத்தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும் .
ஒவ்வொருவருக்கும் செல்லப் பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்ததினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் இத்தளம் குறிப்பிட்ட தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு மின்னஞ்சல் மூலம் ஞாபகப்படுத்தும் . நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நம் மின்னஞ்சலில் செய்தி வரும் .
அதை அறிந்து கொண்டு, நாம் ஞாபகமாக மொபைல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் . பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து வாழ்த்து சொன்னதால் அவர்களின் மனதிலும் நீங்கள் இடம்பிடிக்கலாம் .
--- தினமலர் 24 . 1 . 2012 .

Friday, May 4, 2012

வித்தியாசம் .


" சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் என்ன வித்தியாசம் ? "
" உங்க மனைவியை லீவுக்கு ஊருக்கு அனுப்பிவெச்சா, உங்களுக்குக் கிடைக்கிறது சுதந்திரம். உங்க மனைவிக்குக்
கிடைக்கிறது விடுதலை ! "
-- கி.ரவிக்குமார் , நெய்வேலி . ஆனந்தவிகடன் . 25 . 1 . 2012 .

Thursday, May 3, 2012

தமாஷ் !


** " ஆபரேஷன் பண்ணப்போற பெஷன்ட்டுக்கு எல்லாம் அதிகாலையில ஒரு காபி கொடுப்பாங்க ! "
" 'டெட் காபி'னு சொல்லுங்க ! "
** " ஹலோ... நான் ஊர்ல இல்ல, பெங்களூர்ல இருக்கேன் ! "
" தலைவா ! நீங்க பேசறது லேண்ட் லைன் போன் ! "
** " ஊட்டியில எஸ்டேட் இருக்குன்னு சொன்னீங்களே ... "
" ஆமா, அது எம் பேர்ல இருக்குன்னு சொல்லலையே டார்லிங் "

Wednesday, May 2, 2012

மரணம்


சனிக்கிழமை வாய்த்தது
சண்முகத்துக்கு
நிச்சயிக்கப்படாத மரணம்
ஆதலினால்
ஒரு கறுப்பு நிறக்
கோழிக்கு
வாய்த்தது அன்றைக்கு
நிச்சயிக்கப்பட்ட மரணம் !
-- வீ. விஷ்ணுகுமார் .ஆனந்தவிகடன் . 25 . 1 . 2012 .

Tuesday, May 1, 2012

குழந்தைகள் தண்ணீ ர்.


குழந்தைகள் தண்ணீர் என்றால், குதூகலத்தோடு விளையாட ஆரம்பிக்கிறார்கள் . கருக்பைக்குள் தண்ணீருக்குள் வளர்ந்து வெளிவரும் உணர்வினால்தான் அப்படித் தண்ணீரிலும் விளையாடுகிறார்களா ?
உண்மைதான் என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள் . ஆகவேதான் ரஷ்யாவில் சில மருத்துவமனைகளில் பிரசவ வலி ஏற்பட்ட உடனே அம்மாவை நீர்த் தொட்டிக்குள் அமர்த்தி... குழந்தை வெளியே வந்தவுடன் தண்ணீருக்குள்ளேயே வளையவிட்டு
( குழந்தையைப் பொருத்தமட்டில், சின்னதில் இருந்து பெரிய ஸ்விம்மிங் பூல் !) பிறகு வெளியே எடுப்பார்கள் . குழந்தைக்கு மூச்சுத் திணறாது . கருப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் அதற்குத் துளியும் அதிர்ச்சி இருக்காது . ' இதுதான் பெஸ்ட் ' என்கிறார்கள் சில ரஷ்ய மருத்துவர்கள் . இப்போது இந்த முறை பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது ( தாய் விரும்பினால் ) !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 1 . 2 . 2012 .

Monday, April 30, 2012

தெரியுமா ? தெரியுமே !


* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து
தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .
* வள்ளலார் 30 . 1 . 1874 ஸ்ரீமுக வருஷம் தை மாதம் வெள்ளிக்கிழமையுடனான தைப்பூச நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு
சித்தியடைந்தார் .

அறிந்து கொள்வோம் !


* போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் -- ஜோன்ஸ் சால்க் .
* நெயில் பாலிஷில் உள்ள ரசாயனம் -- அசிடோன் .
* மத்திய காபி ஆராய்ச்சி நிலையம் -- பலேஹன்னூர், கர்நாடகாவில் உள்ளது .
* பெயின்ட் தொழிலில் வெளிப்படும் மாசு -- அலுமினிய மாசு .
* டெசிமல் முறைக்கு இந்தியா -- 1957 ம் ஆண்டு மாறியது .
* சீக்கியர்களின் 10வது குரு கோவிந்த்சிங்கின் மனைவி பெயர் -- மாதா சுந்தரி .
* ராயல் பெங்கால் புலிக்கு முன், இந்தியாவின் தேசிய விலங்கு -- சிங்கம் .
* ஆசியாட்டிக் சொசைட்டியை நிறுவியவர் -- வில்லியம் ஜோன்ஸ் .
* எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் -- பக்ருதீன் அலி அகமது .
* பீடியில் சுற்றப்பட்டிருக்கும் இலையின் பெயர் -- டெண்டு இலை .
* கடந்த 1962 ம் ஆண்டு இந்தியா -- சீனா போர் நடந்தபோது, இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்தவர் --
கிருஷ்ண மேனன் .
* அதிக பிரிகுவன்சி கொண்டது -- மைக்ரோவேவ் .
---- தினமலர் .23 . 1 . 2012 .

Sunday, April 29, 2012

வலை பாயுதே !


** சமையல் நிகழ்ச்சிகளில் சொல்வதைப் போல் எதையும் நைசாக அரைக்க முடிவது இல்லை. மிக்ஸியில்
அரைக்கும்போது, யாருக்கேனும் தெரிந்துவிடும் !
** 'இறைவன் கதவை மூடினால் ஜன்னலைத் திறப்பார் ' என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, 10 மணிக்கு
மேல் டாஸ்மாக்குக்குப் பொருந்தும் !
** ' நீங்க ஏன் அரசியலுக்கு வரவில்லை? -- ' எனக்கு அவ்வளவு நடிப்பு வராது ' -- கமல்! # ரசித்த பதில் !
** அவசரத்துக்கு அடகு வைக்கத்தான் வாங்கறேன்னு சொல்லி வாங்கும் நகைகளை ஆற அமரத் தெரிவு செய்வதன் மர்மம்
பெண்களுக்கு மட்டுமே தெரியும் !
** நல்ல லாயர் -- புத்திசாலி லாயர் என்ன வித்தியாசம் ? நல்ல லாயருக்கு லா தெரியும் . ஆனா, புத்திசாலி
லாயருக்கு ஜட்ஜையே தெரியும் ! # படிச்சது .
** சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் அரக்கோணமும் இருப்பது ரியல் எஸ்டேட் ஆட்கள்
சொல்லித்தான் தெரிகிறது .
** கோபமா இருக்கோம்னு காட்ட நல்ல வழி... உப்புமா செஞ்சு வைக்கிறதுதான் . சீக்கிரமா சண்டை முடிவுக்கு
வந்துடுது !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்த விகடன் . 25 .1 . 12 / 1 . 2 . 12 .

Saturday, April 28, 2012

குப்புறப் படுத்தால்...


தூக்கம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது . மனிதன் ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கியாக வேண்டும் . அப்போதுதான் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் .
தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள் . மல்லாந்து படுப்பார்கள் சிலர் . ஒரு பக்கம் திரும்பிப் படுப்பார்கள் இன்னும் சிலர் . சிலருக்கு குப்புறப் படுத்தால்தான் தூக்கம் வரும் . குப்புறப் படுத்துத் தூங்குவதால் ஆபத்தாம் .
குப்புறப்படுத்து பல மணி நேரம் தூங்குவதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது . சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரகக் கற்கள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது .
குடலைக் குறைக்கலாமா ...?
உடல் பருமன், கொழுப்புக்கு காரணம் அதிகம் சாப்பிடுவது. அதற்கு காரணம் அடங்காத பசி . அப்படிப்பட்ட ' நோயாளி'க்கு பசியைக் குறைக்க ஆலோசனை சொல்வது உண்டு . அதுபற்றி குடல் நோய் சிகிச்சை நிபுண்ர் கூறியதாவது :-
அதிக குண்டாக இருப்பவர்கள் பசியை குறைக்க பெருங்குடலின் நீளத்தை குறைப்பது உண்டு . அதன் மூலம் அடிக்கடி பசி எடுப்பதும், சாப்பிடுவதும் குறையும் . ஆனால், பெருங்குடலின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல . அப்படிச் செய்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமலேயே போய்விடும் . அதனால் உடல் பலவீனம், சோர்வு, தளர்ச்சி ஏற்படலாம் . மேலும் அது விலை உயர்ந்த சிகிச்சை . அதனால் சுயமாக வாயை கட்டுவதும், உடற்பயிற்சியும் போதும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Friday, April 27, 2012

அறிந்து கொள்வோம் !


** ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்த வார்த்தைகளில் ஒன்று -- Assassination -- படுகொலை .
** ஒரு பசு தன் வாழ்நாளில் கொடுக்கும் பாலின் உத்தேச அளவு -- 2 லட்சம் டம்ளர் .
** பச்சோந்தியின் நாக்கு நீளம் -- உடல் அளவில் 2 மடங்கு .
** குதிக்க முடியாத ஒரே விலங்கு -- யானை .
** எகிப்தின் தேசிய மலர் -- தாமரை ( நிம்பாபியா லோட்டஸ் ) .
** உலகிலேயே அதிக தபால் அலுவலகங்கள் கொண்ட நாடு -- இந்தியா .
** பட்டர்பிளையின் ( வண்னத்துப்பூச்சி ) உண்மை பெயர் -- பட்டர்பை .
** எதிரியுடனும் உணவருந்தக்கூடிய ஒரே உயிரினம் -- மனிதன் .
** மனித உடலின் வலுவான தசை நாண் -- நாக்கு .
** கத்திரியை கண்டுபிடித்தவர் -- லியர்னாடோ டாவின்சி .
** லைட் இயர் என்பது தூரத்துடன் தொடர்புடையது .
** இந்திய நாடு அதிக அளவில் மைக்கா தயாரிக்கிறது .
** லால் பகதூர் சாஸ்திரியை 'மேன் ஆப் பீஸ் ' என்று அழைப்பர் .
** சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதை கண்டரிந்தவர் எய்ன்ஸ்டீன் .
--- தினமலர் , 30 .1 . 2012 .

Wednesday, April 25, 2012

ஆண்கள் மேதைகள் ஏன் ?


மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர்பரைடல்லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும் . இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலார்கள் .
இமை மூடி...
ரத்த அழுத்தம் திடீரென கூடுகிறதா ? சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் . என்ன ? புரியவில்லையா ? சற்றுநேரம் கண்களை மூடி எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தாலே இந்த திடீர் ரத்த அழுத்தம் குறைந்துவிடுமாம் . இங்கிலாந்து நாட்டு மருத்துவ நிபுணர்கள் " சும்மா இருப்பதே சுகம் " என்று கூறிய நமது சித்தர்களின் கூற்றுக்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்துள்ளனர் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Tuesday, April 24, 2012

கணபதி ஹோமம் .


வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , மயிலாடுதுறை .
--- தினமலர் இணைப்பு , 26 . 1 . 2012 .

Monday, April 23, 2012

இன்சுலின் !


ஊசி மூலம் இன்சுலின் இனி வேண்டவே வேண்டாம் ... !
உடலிலே ஊசியால் குத்தி இன்சுலின் ஏற்றிக் கொள்ளும் சித்ரவதையிலிருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது . ஸ்மார்ட் இன்சுலின் பம்ப் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது . அதன்மூலம் உடலில் இன்சுலினை தேவையான அளவுக்கு ஏற்றிக்கொள்ளலாம் . " பேஜர் " போல் வடிவமைக்கப்பட்டுள்ளது . சட்டைப் பைக்குள்ளோ அல்லது பெல்ட்டிலோ இதை இணைத்துக் கொள்ளலாம் . மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மூலம் இன்சுலின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது . செயற்கை கணையம் போல் செயல்படாமல் இந்தக் கருவியானது இயற்கையான கணையம் போல் செயல்பட்டு, தேவையான அளவு இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் . ஊசி மூலம் உடலுக்குள் இன்சுலினை செலுத்துவதைவிடவும் இந்தப் புதிய முறை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது .இந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்குப் பயிற்சி தேவை . டாக்டர்களே பயன்படுத்தும் முறையைக் கற்றுத் தருவார்கள் . ஆரோக்கியமான கணையம் இன்சுலினை எப்படி இடைவிடாமல் உடலின் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யுமோ, அதைப் போலவே இந்த " ஸ்மார்ட் பம்ப்" பும் தேவையான இன்சுலினை தொடர்ந்து சப்ளை செய்யும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Sunday, April 22, 2012

தாலியின் 9 நூலிழை .


தாலியின் 9 நூலிழை தத்துவம் .
மாங்கல்யச் சரடு 9 இழைகளைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது . தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல், இத்தனை குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்ய சரடு அணியப்படுகிறது.
--- தினமலர் , 26 . 1 . 2012 .

Saturday, April 21, 2012

லேட்டஸ்ட் எஸ் எம் எஸ் .


** பிறந்த குழந்தை : அறை ஏன் இருட்டாக இருக்கிறது ?
நர்ஸ் : பவர்கட் ...
பிறந்த குழந்தை: அடக்கடவுளே... திரும்பவும் தமிழகத்தில்தான் பிறந்து இருக்கேனா ?

** எனக்கு ஞாபகசக்தி அதிகம்னு மார்தட்ற ஆளா நீங்க ? சின்ன டெஸ்ட் ! கடந்த 8 மாத, அதிமுக ஆட்சியில நீக்கப்பட்ட அமைச்சர்கள் பெயர்களை சொல்லுங்க ? எந்தெந்ததுறைகள், எத்தனை தடவை மாறியிருக்குன்னு கணக்கு சொல்லுங்க, பார்ப்போம் ? என்ன தலை சுத்துதா ?
--- தினமலர் , 26 . 1 . 2012 .

Friday, April 20, 2012

அம்மி மிதித்தல் .


மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும் . மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான் .
அதன் பொருள் , ' இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு ' என்பதாகும் . தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும் . ஆனால், கல்லோ வளையாது . மாறாக பிளந்துபோகும் .
மணமகளே, கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு . அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்ததால் அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கவுதமர் . அதனாலேதான், நீ கல்லைப் போல் உறுதியாக இரு என்று கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப்பற்றி அந்த அம்மியின் மீது வைப்பான் .
அம்மி மிதித்தபின் அருந்ததியை வணங்குவார்கள் . ' அருந்ததி ' என்ற சொல்லுக்கு கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள் .
--- தினமலர் , 25 . 1 . 2012 .

Thursday, April 19, 2012

காற்றழுத்த தாழ்வுநிலை .

காற்றழுத்த தாழ்வுநிலை .
காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுவதை கண்டறிவது எப்படி ?
புயல் உருவாவதை, கம்ப்யூட்டர், செயற்கைகோள், ரேடார் கருவி கொண்டு கண்டறிகிறோம் . பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்படும் தகவல்களை கொண்டுதான் இறுதி முடிவெடுக்கப்படுகிறது .
கடல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தால் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் . காற்றின் வேகம் 36 கி.மீ.க்கு மேல் இருந்தால் புயல் எச்சரிக்கை விடப்படுகிறது . ஒவ்வொரு ஊரும் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிந்திருத்தல் அவசியம் . அத்தகைய வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பலகையில் எம்.எஸ்.எல். எழுத்துக்களோடு அந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் .
---எஸ்.ஆர். ரமணன் , இயக்குனர் .வானிலை ஆராய்ச்சி நிலையம் , சென்னை .
--- தினமலர் , 25 . 1 . 2012 .

Wednesday, April 18, 2012

தொலைநோக்கி !


உலகின் மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கியை இந்தியா, அமைக்கிறது . காஷ்மீர் லடாக் பகுதியில், இமயமலை அடிவாரமான மோராக்கில் உள்ள பேன்கோங் ஏரி அருகில் இது அமைக்கப்படுகிறது .
2 மீட்டர் பிரிவு சூரிய ஆய்வு தொலைநோக்கி :
சூரிய ஒளியை உள்வாங்கும் லென்ஸ் பரப்பு அதிகமாக இருந்தா;ல், ஒவ்வொரு நொடியிலும் சேகரிக்கப்படும் கதிர்களின் அளவும் அதிகமாக இருக்கும் .இதில் 2 மீட்டர் குறுக்களவு கொண்ட லென்ஸ் இருப்பதால், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் . இப்போது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கிகளின் லென்ஸ் குறுக்களவு 1.6 மீட்டர்தான் !
ரூ. 150 கோடி :
இந்த தொலநோக்கியை அமைக்கும் திட்டத்தின் மதிப்பீடு தொகை ரூ. 150 கோடி .
பேன்கோங்கில் ஏன் ?
* வருடாந்திர வெயில் அளவு அதிகமாக இருக்கும் பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் சூரிய ஆய்வுகளை
நடத்தினால்தான், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் .
* பேன்கோங் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 270 அடி உயரத்தில் உள்ளது ; இங்கு, வருடாந்திர வெயில் அளவும் அதிகம் .
* இது, வாகனப் போக்குவரத்தோ குடியிருப்புகளோ இல்லாத பகுதி . எனவே, நச்சு வாயுக்களால் சுற்றுப்புற வெப்பம்
அதிகரிக்காது . எனவே, சூரிய ஆய்வில் வெளி காரணிகளின் தலையீடு ஏற்பட வாய்ப்பில்லை .
சிறப்புகள் :
* ஜப்பானுக்கும் ஐரோப்பாவுக்கும் மத்தியில் சூரிய ஆய்வு தொலைநோக்கி எதுவும் இல்லை . அந்த குறைபாட்டை
இந்த தொலைநோக்கி போக்குகிறது
.* இந்த தொலைநோக்கி மூலம் பகலில் மட்டுமல்லாது இரவிலும் ஆய்வுகள் நடத்தலாம் . இப்படி இரட்டை பயன்பாடு கொண்ட தொலைநோக்கிகள், உலக அளவில் மிகவும் குறைவாகவே உள்ளன .
* சூரியனைச் சுற்றியுள்ள மிங்காந்தப் புலங்களின் தன்மை பற்றிய தகவல்களை இந்த தொலைநோக்கி மூலம் விரிவாக
அறியலாம் .
* அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கிட் பீக் தேசிய ஆய்வுமையத்தில் மெக்மேத் பியர்ஸ் சூரிய ஆய்வு தொலைநோக்கி
உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவு 1. 6 மீட்டர் .
* அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பிக் பியர் ஏரி அருகில் உள்ள சூரிய ஆய்வு மையத்தில் உள்ள சூரிய ஆய்வு
தொலைநோக்கி உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவும் 1.6 மீட்டர்தான் .
--- தினமலர் .22 . 1 . 2012 .

Tuesday, April 17, 2012

குறும்,புக் கேள்விகள் ! -- பதில்கள் !


* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்தக் கோருகிறது தமிழகம் ? -- 142 .
* திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? -- தை மாதம் பிறந்த இரண்டாவது தினம் . அதாவது, பொங்கலுக்கு மறு நாள் .
* தமிழில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை ? -- 12 -- 18 -- 216 .
* மது வகைகளில் ஒரு ஃபுல் என்பது எத்தனை மில்லி அளவு கொண்டது ? -- 750 மில்லி .
* இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் எத்தனை ? -- 24 .
* " எங்கள் மாநில மேம்பாட்டிற்கு சேட்டிலைட் ஒன்றைக் கொடுங்கள் ! " என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர் யார் ? -- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி .
--- ஆனந்தவிகடன் , 18 / 25 1 . 2012 .

Monday, April 16, 2012

அட்... இப்படியா சங்கதி ? !


' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே '
பெண்களை மதிச்சு வாழறதுதான் நம்ம நாட்டோட பாரம்பரியம் . அப்படியிருக்கிறப்ப ... நல்லது, கெட்டது நடக்குறதுக்கு பெண்கள்தான் காரணம்னு தப்பான அர்த்தத்துல நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க . நாமதான் அப்படி புரிஞ்சுகிட்டோம் . உண்மை என்னன்னா... ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான் .
மக்கா... இனியாச்சும் பழமொழிகள கொலை மொழியா மாத்தாம... நிசத்தைப் புரிஞ்சு பேசிப் பழகுங்கோ !
---- மெய்யழகன் , அவள் விகடன் 15 . 1 . 2010 .

Sunday, April 15, 2012

கரும்புக் கவிதைகள் !


உந்தன் மண்ணைத்
தொட
மாட்டேன்
எந்தன் மண்ணை
விட
மாட்டேன் !

தும்பிக்கும் வேண்டும்
விடுதலை
தமிழ்த்
தம்பிக்குத்
தெரியும்
அதன்
விலை !

ழகரம்
தமிழின்
சிறப்பாகும்
அதை
உரசிடப்
பிறக்கும்
நெருப்பாகும் !

தமிழை ஏன்
படிக்க
வேண்டும்
அதைத்
தாய்ப்பால்
போலே
குடிக்க
வேண்டும் !

தமிழைக் கல்வியில்
நிலைநாட்டு
பிற
மொழிகளும்
கற்றுத்
திறங்காட்டு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Saturday, April 14, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆளூமைப் பண்பை
வளர்த்துக்
கொள்
நீ
அடிநிலை
மனிதரை
அணைத்துக்
கொள் !

எத்தனை மொழியும்
கற்றுக்
கொள்
நம்
இனத்
தமிழ்
முதலாய்ப்
பெற்றுக்
கொள் !

அன்னை மானம்
இழக்காதே
உன்
அண்ணை வீரம்
மறக்காதே !

முற்றும் முடிந்ததாய்
நினையாதே
முத்து
மூட்டிய
நெருப்பு
அணையாதே !

தமிழைத் தாழ்வாய்ப்
பழிக்காதே
உலகத்
தாய்க்
கரு
தன்னை
அழிக்காதே !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012

Friday, April 13, 2012

கரும்புக் கவிதைகள் !


ஆண்பால் பெண்பால்
பார்க்காதே
நீ
ஆளுமைப் பண்பைத் தூர்க்காதே !

எதிர்க்கத் துணிந்தால்
தமிழ்
மீளும்
எதற்கும் துணிந்தால்
தமிழ்
ஆளும் !

தமிழைத் தேடி
நட்பாக்கு
அவர்
தாழ்வினைப்
போக்கித்
தெம்பாக்கு !

மதங்களைத் தாண்டி
தமிழரில்
இணைவோம்
மகிழ்வுடன் நெருங்கிக்
குறளினில்
நனைவோம் !

இசையும் ஆடலும்
இனத்தின்
மாட்சி
அவற்றை
இழந்ததால்தானே
இத்தனை
வீழ்ச்சி !

எல்லா மொழியும்
வாழட்டும்
எம்
தமிழே
எம்மை
ஆளட்டும் !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Thursday, April 12, 2012

கரும்புக் கவிதைகள் !


பழங்குடி அறிவைத்
தேடிப் போ
அவர்
வளங்களைத்
திருடுதால்
சாடிப் போ !

ஆதித் தமிழை
மறுக்காதே
நீ
ஆணி
வேரை
அறுக்காதே !

பொங்கல் விடுமுறை
நீட்டச்
சொல்
பிள்ளையைப்
பிறந்த
மண்ணுக்குக்
கூட்டிச்
செல் !

குழந்தையைக்
கொஞ்ச
நேரம்
எடு
நீ
குழந்தைமை
கொண்டு
வாழ்வு
நடு !
--- கவிஞர் அறிவுமதி !
--- ஆனந்தவிகடன் , 18 . 1 . 2012 .

Wednesday, April 11, 2012

திசை .


ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சம்பத்தை விரும்புகின்றவன் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும், சத்தியத்தை விரும்புகின்றவன் வடக்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் சாப்பிட வேண்டும் . சாப்பிடும் போது அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும்
நீலமேகச் சியாமளன் .
" தண்ணீருக்கு நிறம் கிடையாது . காற்றுக்கும் நிறம் கிடையாது . ஆனால், நீர் கடலாகவும், காற்று வானமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் போது பார்ப்பவர் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது . எல்லா இடத்திலும் பரந்து அகன்று நிற்கும் இந்த பொருள்கள் நீல நிறமாக இருப்பதைப் போலவே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான மகாவிஷ்ணுவும் நீல நிறமாகக் காட்சி தருகிறார் . அதனால்தான் அவரை நீலமேக சியாமளன் என்று அழைக்கின்றனர் .
--- இந்து தர்ம சாஸ்திரம் ."
--- தினமலர் , இணைப்பு . 19 . 1 . 2012 .

Tuesday, April 10, 2012

' தானே ' புயல் .


" பொதுவாக ஒரு புயலைக் கணிக்க காற்று வீசும் திசை; காற்றின் அழுத்தம் ; ' ரேடார் ' , கம்ப்யூட்டர் பதிவுகள் என நான்கு அம்சங்கள் முக்கியம் . காற்றின் திரட்டு மொத்தமாக மேலே எழும்பும் . அப்போது அதன் குமிழ்ப் பகுதி சிதைந்துவிட்டால் காற்று நாலா பக்கமும் வீசும் . மாறாக, சிதையாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் அதன் வேகம் உக்கிரமாக இருக்கும் . இதில் பத்து சதவிகிதம் முன்கூட்டி தெரிந்தாலே போதும், புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை விடப்படும் .
எழுபதுகளில்தான் புயலுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தார்கள் . முதலில் உலக நாடுகள் முழுமைக்கும் என்றிருந்த விதி, பின்னர் ஆசிய நாடுகள் என்கிற அளவில் சுருங்கிப் போனது . இதனை ' என்விரான்மெண்டல் கவுன்ஸில் ஃபார் ஆசியா -- பசிபிக் ' என்கிற அமைப்புதான் கட்டுப்படுத்துகிறது .
இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்காள தேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை, ஓமன் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகள் இதில் அடக்கம் . முதலில் புயலுக்குப் பெண் பெயர்தான் வைக்கப்பட்டது . அமெரிக்காவில் அதற்கு பலத்த எதிர்ப்பு . அதனால் பொதுவான பெயர் தேர்வு செய்யப்பட்டது .
புயலுக்கு கடந்த முறை மியான்மர் நாடு பெயர் வைத்தது . இந்த முறை வாய்ப்பு நமக்கு . இப்போது அடித்த ' தானே ' புயலுக்கு ' தேன் ' என்பதுதான் ஒரிஜினல் பெயர் . பெயர் பொருத்தம் சரியாக இருக்காது என்பதால் ' தானே ' என்று வைத்தோம் . "
--- ரமணன் , இயக்குனர் , சென்னை வானிலை ஆய்வு மையம் .
--- குமுதம் , 25 . 1 . 2012 .

Monday, April 9, 2012

மிக மெல்லிய லேப்டாப் .


மிக மெல்லிய லேப்டாப் ஏசர் நிறுவனம் அறிமுகம் .
தைவானை தலைமையகமாகக் கொண்ட ஏசர் நிறுவனம், கம்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இந்நிலையில் உலகிலேயே மிக மெல்லிய லேப்டாப் கம்யூட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . எஸ் 5 எனப்படும் இந்த லேப்டாப், 34 செ.மீ ( 13.3 இஞ்ச் ) அளவு திரையும், 15 மி.மீ, தடிமனும், 1.35 கிலோ எடையும் கொண்டது .
இதுபோன்ற மிக மெல்லிய லேப்டாப்புகளை ' அல்ட்ராபுக் ' என்றழைக்கின்றனர் . இந்த பிரிவில் பல நிறுவனங்கள், லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன . மைக்ரோ சாப்ட் நிறுவனம் அதன் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர், விண்டோஸ் 8ல் இயங்கும் அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்த ஏசர் நிறுவனம் திட்டமிடுள்ளதாக அதன் தலைமை செயலதிகாரி வாங் தெரிவித்தார் .
---- தினமலர் , 14 . 1 . 2012 .

Sunday, April 8, 2012

ஏடிஎம் -ல் மாற்றம்


பணத்தை உள்ளே இழுக்காது . ஏடிஎம் இயந்திரத்தில் மாற்றம் .
ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை நுழைத்து, தேவையான பணத்தை குறிப்பிட்டவுடன், சில நொடிகளில் வாடிக்கையாளர் கேட்ட பணம் வெளியே வரும் . இயந்திரத்தில் வரும் பணத்தை, வாடிக்கையாளர்கள் உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் . குறிப்பிட்ட சில நொடிகள் வரை பணத்தை எடுக்காமல் இருந்தால், வெளியே தள்ளிய பணத்தை இயந்திரமே மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்ளும் . இத்தகைய இயந்திரத்தில் பணம் எடுக்க தாமதிக்கும் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதற்குள், இயந்திரத்துக்குள் போய் விட்டதாக புகார் கூறுகின்றனர் . மேலும், பணம் பெறவில்லை என்பதற்கான ரசீதை கேட்கின்றனர் . இதனால் இந்த ரிட்டிராக் ஷன் முறையை நீக்க வேண்டும் என்று பணம் செலுத்துவதற்கான இந்திய தேசிய கழகம், ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்தது . இதை பரிசீலித்த ஆர்பிஐ விரைவில் இந்த முறையை நீக்க உள்ளது .
இது குறித்து, ஆர்பிஐ செயல் இயக்குனர் பத்மனாபன் கூறுகையில், " அனைத்து வாடிக்கையளர்களுக்கும் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் . இனி, உங்கள் பணத்தை எடுக்க மறந்து, ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்றால், அடுத்ததாக இயந்திரத்தை பயன்படுத்த வருபவர்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ." என்றார் .
--- தினமலர் , 14 . 1 . 2012 .

Saturday, April 7, 2012

வலை பாயுதே !


* குழந்தைகளின் குறும்புகள் எப்போதும் போலத்தான . அதை ரசிக்கவும் எரிச்சல் அடையவும் வைப்பது நம் மனநிலை மட்டுமே !
* ' கோ கிரீன் ' அப்பிடினு பெருசா பிளாஸ்டிக்ல பேனர் வெச்சிருக்கிறவங்களை என்ன செய்யலாம் ?
* நம் முட்டாள்தனத்தை, அதிகம் வெளிப்படுத்தாமல் இருப்பதில்தான் ... நம் ' புத்திசாலித்தனம் ' இருக்கிறது !
* ஆயிரம் டெக்னாலஜி வந்தாலும் ... இந்த கிழிக்கிற காலண்டருக்கு அடிச்சிக்கிற பழக்கம் வீட்ல போக மாட்டுது !
* பிறக்கையில் பெருமையுடன் பிறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை ஆனால், இறக்கையில் பெருமையுடன் இறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு !
* ' ஆனந்தத் தொல்லை'யுடன் மோதும் ' நண்பன் ' குழுவினருக்குத் தைரியம் அதிகம் . ' கான முயலெய்த அம்பினில்... ' குறள்தான் நினைவுக்கு வருது :) .
* இரவு நேரப் பேருந்துகளில், பின்னிருக்கும் நபரின் மீது ஒரு சந்தேகத்தோடே தூங்குகிறாள் முன் இருக்கையில் இருக்கும் பெண் !
* பிரதமரை வழையனுப்ப வந்த ஓ.பி.எஸ் --ஸிடம் , பிரதமர் ரகசியமாகச் கூறிய விஷயம்... ' சேம் பின்ச் ' !
* ஒருவன் தான் எவ்வளவு கெட்டவன் என்பதை மனைவியிடம் மட்டும் மறைக்காமல் காட்டிவிடுகிறான !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்தவிகடன் . 11 . 1 . 2012 .

Friday, April 6, 2012

உழைப்பில் உள்ளது சந்தோஷம் .


ஒரு ஜப்பானிய ஜென்குரு முதுமையடைந்த பின்னரும் தோட்டத்தில் வேலை செய்ய வந்து விடுவார் . எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லையே என்று வருந்திய சீடர்கள் மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை ஒளித்து வைத்து விட்டார்கள் . காலை தோட்ட வேலைக்கு வந்த குரு ஏமாற்றம் அடைந்தார் . மடாலயம் வந்த அவர் அன்று முழுவதும் உண்ணவே இல்லை . சீடர்கள் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார் . உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் . வேறு வழியின்றி மறுநாள் மண்வெட்டியும் கடப்பாரையும் அவர் வசம் தரப்பட்டது !.
---' எப்போதும் சந்தோஷம் ' என்ற நூலில் , சுகி . சிவம் .
--- நூல் உதவி : R. கந்தசாமிசத்யா , அம்பகரத்தூர் .

Thursday, April 5, 2012

"வாசிப்பு வாழ்க்கைக்கு உதவுமா ? "


" நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதில் தவறு இல்லை . அறிஞர் அண்ணா அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டபோது, ' இன்னும் ஒரு நாள் அதைத் தள்ளிப்போட முடியாதா ? ' என்று கேட்டார் அண்ணா . ' நீங்கள்தான் பகுத்தறிவுவாதி ஆயிற்றே , நீங்களூமா நல்ல நாள் எல்லாம் பார்க்கிறீர்கள் ? ' என்று சிரித்தபடியே கேட்டார் அமெரிக்க மருத்துவர் . ' ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு நாளில் முடித்துவிடுவேன் . அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது . அதனால்தான் அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட விரும்புகிறேன் ' என்றார் .
பகத்சிங்கைத் தூக்குத் தண்டனைக்காக அழைத்தபோதுகூட, ' இந்த புத்தகத்தின் இன்னும் சில பக்கங்களைப் படித்துவிட்டு வந்துவிடுகிறேன் ' என்றார் . அண்ணாவுக்கு மறுநாள் குறித்து நிச்சயம் கிடையாது . பக்த்சிங்குக்கோ மரணமே நிச்சயமாக இருந்தது . மரணம் குறித்தே கவலைப்படாமல் வாசித்தவர்கள் அவர்கள். வாசிக்கும்போது வாழ்க்கையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? "
--- நானே கேள்வி... நானே பதில் !
--- ஆனந்தவிகடன் . 7 . 12 . 2011 .

Wednesday, April 4, 2012

அட...இப்படியா சங்கதி ?!


' மெத்த படிச்ச மூஞ்சூறு , கழனி பானையிலே விழும் '
' மூஞ்சூறு எல்லாம் எப்ப படிக்க போச்சு ? ' னு உங்களுக்குச் சந்தேகம் வரும் . இதுகூட நம்ம ஆட்களோட கைங்கர்யம்தான் . சாதம் வடிக்கிறப்ப நல்லா வெந்த பதம் வந்திருச்சுன்னா, அந்தச் சோறெல்லாம் ... பானயோட மேல் பகுதிக்கு வந்துரும். அதை வடிக்கிறப்ப தட்டு மேல வந்து நிக்கும் . வடிசட்டியில பானையைக் கவுத்தினா... வடிதட்டை மீறின சோறுங்க... வடிசட்டியில விழும் . அதைத்தான், ' மெத்த வடிச்ச முன்சோறு, கழுநீர் பானையில விழும்' னு சொல்லியிருகாங்க .
--- மெய்யழகன் , அவள் விகடன் , 15 . 1 . 2010 .

Tuesday, April 3, 2012

ஜோக்ஸ் .


* " நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்ணா, நீதாண்டா பார்த்துக்கணும் !"
" போ பாட்டி... நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு ! "

* " பொதுக்கூட்டத்துக்குத் தலைவர் ஹெலிகாப்டரில வருவாரா ... கார்ல வருவாரா ? "
" ஜாமீனில வர்றாராம் ! "

* " நீங்க இனிமே காரத்தைக் குறைக்கணும், ஷுகரைக் குறைக்கணும், குறிப்பா உடம்பைக் குறைக்கணும் ! "
" நீங்க ஃபீசைக் குறைக்கணும் டாக்டர் ! "

Monday, April 2, 2012

குறிப்புகள் !


* உலகின் முதல் மெட்ரோ ரயில் லண்டனில் 1863ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தொடங்கப்பட்டது .
* இந்தியாவில் முதல் மெட்ரோ போக்குவரத்து கோல்கத்தாவில் ( 1984 ) தொடங்கியது .
* டில்லியில் ( 2003 ) , அதைத்தொடர்ந்து பெங்களூரில் ( 2011 ) ல் தொடங்கப்பட்டது .
* டில்லி மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப்பாதை அமைக்க பூமியை தோண்டிய போது பல அரிய பொருட்கள்
கிடைத்தன . அவற்றை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உதவியுடன் மெட்ரோ அருங்காட்சியகமாக உருவாக்கியுள்ளனர் .
--- தினமலர் இணைப்பு 6 . 1. 2012 .

Sunday, April 1, 2012

குறும்புக் கேள்வி -- பதில் !


* மரண தண்டனைக்கு எதிரான உங்கள் கருத்தைப் பதிவுசெய்ய எந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும் ? -- 92822 21212 .
* ' மன்மோகன் சிங் ரோபோபோல நடக்கிறார் ! ' என்று கமென்ட் அடித்த அரசியல்வாதி யார் ? -- தமிழக எதிர்க்
கட்சித் தலைவர் விஜயகாந்த் .
* தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் என்ன வித்தியாசம் ? -- பிரித்தால் பொருள் தராதது
இரட்டைக்கிளவி ( உதாரணம் : சலசல, தடதட ) .
பிரித்தால் பொருள் தருவது அடுக்குத்தொடர் ( உதாரணம் : மேலும் மேலும், கூட்டம் கூட்டமாக ) !
* ஜனவரியை வருடத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் கிரிகேரியன் காலண்டரை உருவாக்கியவர் யார் ? --
பதிமூன்றாம் போப் கிரிகோரி .
* லோக்பால் அமைப்பு எத்தனை பேர்கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட இருக்கிறது ? -- தலைவர் ஒருவர் உட்பட
ஒன்பது பேர் கொண்ட குழு .
* 2011 சாகித்ய அகாடமி விருதை எந்தத் தமிழ் எழுத்தாளர், எந்த நாவலுக்காக வென்றார் ? -- சு. வெங்கடேச ன் .
காவல் கோட்டம் .
* செல்போனுக்கு வரும் விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் -- களுக்குத் தடை போட எந்த எண்ணுக்கு
' START DND ' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் ? -- 1909 .
* உயர் ரக மதுபானங்களை விற்க தமிழக அரசு விரைவில் திறக்கவிருக்கும் கடைகளுக்கு என்ன பெயர்
சூட்டியிருக்கிறார்கள் ? -- எலைட் .
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ஆங்கிலப் படம் எது ? -- ' டேம் 999 .
* சமீபத்தில் இந்தியாவில் நூற்றாண்டு கொண்டாடிய பாடல் எது ? -- ஜன கண மன -- இந்தியாவின் தேசிய கீதம் !
--- ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்து .

Wednesday, March 28, 2012

தெரியுமா உங்களுக்கு ?


* ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன்.......
* 06 என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ( International Mobile Equipment Identity ) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும் . மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக்கண்டுபிடிக்கலாம் .
* உங்கள் நெட் வொர்க்கினைத் தண்டி விட்டீர்களா ? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது . இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும் .
---- தினமலர் , 3 . 1 . 2012 .

' தீவிர ' வாதிகளுக்கு செக் ...


வந்துடுச்சு நவீன ரேடார் .
தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது சமீபத்தில் நவீன ' ரேடார் ' பொருத்தப்பட்டது . இந்த 'ரேடார் ' 30 கி.மீ., தொலைவு கடல் எல்லையைக் கண்காணிக்க முடியும் . அது மட்டுமல்ல அதிக வெப்பம், கனமழை, புயல் காலங்ககளில் கூட 24 மணி நேரமும் தன் கடமையை செவ்வனே நிறைவேற்றும் வல்லமை படைத்தது .
இந்த ' ரேடார் ' கடல் போக்குவரத்தையும் கண்காணிக்கிறது என்பது எஸ்க்ட்ரா பணி . எனவே சரக்கு கப்பலில் ஆயில் கசிவு இருந்தாலோ, கண்டெயினர் கடலில் விழுந்தாலோ இது துல்லியமாக கண்டுபிடித்துவிடும் .
மேலும் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதிகள் ஊடுருவல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றையும் கண்டறிந்து உடனுக்குடன் கம்யூட்டரில் படங்களை தகவல் மையத்துக்கு அனுப்பிவிடும் . .அந்த வகையில் கடல் பகுதியில் 500 விதமான பொருட்களை கண்டுபிடிக்கும் திறமை கொண்டது இந்த ' ரேடார் '. இது தவிர கடலில் ஏற்படும் சில மாற்றங்களையும் ' மோப்பம் ' பிடித்து முன்னெச்சரிக்கை செய்யும் .
இந்தியாவில் பொருத்தப்படும் ' ரேடார் 'களை அரசுத்துறை நிறுவனமான ' பெல் ' தயாரித்துக் கொடுக்கிறது .
இந்தியாவில் 44 : ஆலப்புழை, கோவளம், கண்ணூர், கொச்சி, விசாகப்பட்டினம் உட்பட 44 கடற்கரை பகுதிகளில் ' ரேடார் ' வைக்கப்பட உள்ளன .
தமிழகத்தில் 8 : சென்னை, தவிர கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உட்பட 7 கடலோர பகுதிகளில் 'ரேடார் ' வைக்கப்படுகிறது .
--- தினமலர் . 8 . 1. 2012 .

Tuesday, March 27, 2012

மெட்ரோ ரயில் திட்டம் .

சென்னையை துளைக்கிறது மெட்ரோ ரயில் திட்டம் ..
பூமியை குடைந்து நம் காலுக்கு அடியில் ரயில் ஓடப்போகிறது . நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது . விரைவில் நம் தலைநகர் சென்னையில் இது நடக்கப் போகிறது . சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது . சரி....இதெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆகிறது ! வீடு, கட்டடம் என்று சென்னையில் நிறைந்திருக்க, அவற்றுக்கு கீழே பள்ளம் தோண்டி, ரயில் விடப்போவது எப்படி ?
மெட்ரோ ரயில் பாதை சென்னையில் 2 வழித்தடங்களில் அமைக்கப்படுகிறது . முதலாவது பாதை, வண்னாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை 14.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது . 2 வது பாதை சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 9.7 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது .
இந்த வழித்தடங்களில் சில இடங்களில் சுரங்கப் பாதை தோண்டப்படுகிறது . அந்த சுரங்கப் பாதையில் ஒரு ரயில் போக, ஒரு ரயில் வர என்று 2 தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன . ஆக அந்த அளவுக்கு பெரிய குகை அது .
தரை மட்டத்தில் இருந்து 51 அடி கீழே இந்த சுரங்கப் பாதை இருக்கும் . 6.2 மீட்டர் அகலத்தில் இந்த வட்டப் பாதை அமையும் . வீடுகளுக்கு கீழே போர் வெல் தோண்டி குழாய்கள் இறங்கி இருக்கும் ; சில இடங்களில் கிணறு இருக்கும் . அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி, மாற்று போர் வெல் போட நிவாரண பணம் தரப்பட்ட பிறகு, சுரங்கப் பாதை குடையும் வேலை ஆரம்பமாகும் .
இதற்காக 10 டனல் போரிங் மிஷின்கள் வருகின்றன . அந்த மிஷின்கள் பூமியை குடையும் போது மண் சரிவு இல்லாமல் எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது எல்லோரிடமும் இருக்கும் ஆச்சரியமான கேள்வி .
டனல் போரிங் மிஷின் : இது தான் பூமிக்கு அடியில் சுரங்கப் பாதை தோண்ட இருக்கும் மிஷின் . இதன் முகப்பு மட்டும் 170 டன் எடை கொண்டது . இதில் 62 கட்டிங் பிளேடுகள் உள்ளன . புள்ளி புள்ளியாகத் தெரியும் கட்டிங் பிளேடுகள் வெவ்வேறு திசையில் பொருத்தப்பட்டுள்ளன . இவை எவ்வளவு கடினமான பாறையையும் அறுத்தெடுக்கும் . பிரம்மாண்டமான இந்த மிஷினுக்கு கீழே வேலை ஆட்கள் நிறபார்கள் . அதை ஒப்பிட்டு மிஷினின் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம் .
நீளம் : இதன் நீளம் 120 மீட்டர் . இந்த மிஷினுக்கு உள்ளேயே கம்யூட்டர் அறை, ஜெனரேட்டர், கேண்டின், ஓய்வு அறை என்று எல்லா வசதிகளும் உள்ளன . இந்த மிஷினுக்குள் மொத்தம் 100 பேர் வேலை செய்கின்றனர் . உள்ளே இது ஒரு அலுவலகம் மாதிரிதான் இருக்கும் .
உள்கடமைப்பு : இந்த மிஷின் துளை போட்டுகொண்டு போகும் போது தூளான பாறை, மணல், சகதி எல்லாம் கன்வேயர் பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறது .இந்த மிஷினின் முகப்பு, துளை போட்டுச் செல்லும் போதே, 0.4 மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் உடனடியாக போடப்படுகிறது.
ஒரு நாள் வேலை : இந்த மிஷின் 24 மணி நேரத்தில் 8 மீட்டரில் இருந்து 10 மீட்டர் தூரம் வரை சுரங்கப் பாதை ஏற்படுத்தும் .
காற்று வசதி : மிஷின் ஒரு கிலோ மீட்டர் தூரம் துளை போட்டதும், சுரங்கத்தின் உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் . இதனால் சுரங்கத்தின் மேற்பரப்பில் பெரிய குழாய் மூலம் ஆக்ஸிஜன் உள்ளே அனுப்படுகிறது . உபகரணங்கள், வேலை செய்பவர்களுக்கு உணவு, அடுத்த ஷிப்டுக்கு வேலை ஆட்கள் எல்லாவற்றையும் கொண்டு செல்ல, தற்காலிக மினி ரயில் போக்குவரத்தும் உள்ளே நடக்கும் .
மினி ரயில் : சுரங்கம் தோண்டும் போது, உள்ளே மின்சாரம், மினி ரயில், குடி நீர் சப்ளை என்று எல்லா வாதிகளும் இருக்கும் .
துளையிடும் போது, அடுத்து என்ன எதிர்படும் என்பதை துல்லியமாகச் சொல்ல மண்ணியல் துறை நிபுணர்கள் அந்த மிஷின் அலுவலத்துக்குள் இருப்பார்கள் . கடினமான பாறை, இளகிய மண் என்று வந்தால், அதற்கேற்றாற் போல் பிளேடு மாற்றப்படும் . தண்ணீர் எதிர்ப்பட்டால் அப்படியே உறிஞ்சி பின்பக்கமாக வெளியேற்றப்படும் .
14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டம் 2012 ம் ஆண்டு துவங்கி 2015 ம் ஆண்டு முடைவடைகிறது ..
--- தினமலர் , 18 . 12 . 2011 .

Monday, March 26, 2012

விண்வெளியில் ..


விண்வெளியில் ஒரு வைரச் சுரங்கம் !
முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையத்தில் ரேடியோ டெலஸ்கோப் மூலம் நட்சத்திரக கூட்டங்களை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் . இதில், முழுவதும் வைரங்களால் ஆன ஒரு கிரகத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இது குறித்து ஆஸ்திரேலிய நிபுணர் டாக்டர் மைக்கேல் கீத் கூறியதாவது : ' செர்பென்ஸ் நட்சத்திர கூட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் பல்சார் எனப்படும் ஒரு குட்டி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது . மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த அது சுருங்கி, இப்போது குட்டி நட்சத்திரமாக உருமாறியுள்ளது . எனினும் அது சூரியனைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது ஆகும் .
அந்த குட்டி நட்சத்திரம் வெளியிடும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்ததில், அதை ஒரு கிரகம் சுற்றி வருகிறது என்றும் தெரிந்தது . ஒரு காலத்தில் நட்சத்திரமாக இருந்து, வாயுக்கள் வெளியேறியதால் சுருங்கி, கிரகமாக அது மாறியுள்ளது . எனினும், பூமியைப் போல் 5 மடங்கு பெரியது அந்த கிரகம் . அதன் குறுக்களவு 65 ஆயிரம் கி.மீ. ஆகும் . குட்டி நட்சத்திரத்தை 6 லட்சம் கி.மீ. தூரத்தில், 2 மணி 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கிரகம் சுற்றி வருகிறது .
அந்த கிரகத்தில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது . அதில் இருந்த ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் வெளியேறிவிட்டன . இதனால் கிரகம் முழுவதும் கார்பன் படிமங்களால் நிறைந்துள்ளன . எனவே, பூமியைப் போல் 5 மடங்கு பெரிதான கிரகம் முழுவதும் வைரச்சுரங்கமாக இருக்கிறது . பிஎஸ் ஆர்ஜே 1719 -- 1438 என பெயரிடப்பட்டுள்ள குட்டி நட்சத்திரமும், அதன் கிரகமும் 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றன . ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் 4 ஆயிரம் ஆண்டுகளில் வைர கிரகத்தை சென்றடைந்து விடலாம் . இவ்வாறு மைக்கேல் கீத் தெரிவித்தார் .
--- - தினமலர் 27 . 8 . 2011 .

Sunday, March 25, 2012

அட...இப்படியா சங்கதி ? !


' ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் '
' மத்த குழந்தைங்களை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் 'னு இதைச் சொல்லிக்கலாம் . இதுகூட ஒருவிதத்துல சரிதான் . ஆனா, பழமொழியோட உண்மையான அர்த்தத்தைத் தேடினா... ' ஊரான் 'கிற சொல்லு மனைவியைக் குறிக்கும் . மனைவியா வர்ற ஒவ்வொரு பொண்ணும் யாரோ பெத்த பிள்ளைதானே . அதான் ஊரான் பிள்ளை . அப்படிப்பட்ட பிள்ளை கர்ப்பமா இருக்கிற நேரத்துல, சாப்பாடெல்லாம் சரியா கொடுத்து, சவரட்டனை செய்து கவனிச்சுகிட்டா, அவ வயித்துல வளர்ற தன் ( கணவன் ) பிள்ளை தானே நல்லா வளரும்கிதுக்காக சொல்லி வெச்சது !
---மெய்யழகன் , அவள் விகடன் . 15 .1 . 2010 .

Friday, March 23, 2012

டிவிடி !

டிவிடி ( Digital Versatile Disc ) என்பது சிடிக்களின் அடுத்த நிலை . சி.டி. களில் ( Compact Disk ) 600 எம்.பி. அளவுள்ள டேட்டாக்களை மட்டுமே பதிந்து கொள்ள முடியும் . ஆனால், டிவிடிக்களில் 4 ஜி.பி. அளவுள்ள டேட்டாக்கள் பதிந்து கொள்ள முடியும் . இது சிடியை காட்டிலும் 5 மடங்கிற்கு மேல் ஆகும் .

சிம்கார்டு !
செல்போன்களில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சர்வீஸ் புரொவைடர்களால் வழங்கப்படும் ஒரு சிறிய அட்டைக்குப் பெயர் தான் சிம்கார்டு . சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module ( SIM ) . முதல் சிம்கார்டு 1991 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அந்த சிம் கார்டை முனிஸ் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர் கீய்செக்கே -- டெவ்ரியன்ட் உருவாக்கினார் .
--- தினமலர் 15 .12. 2011.

Thursday, March 22, 2012

மாட்டின் நிறம் !


மாட்டின் நிறத்தைப் பொறுத்தும் பாலின் பண்பு அமைகிறதாம் . சிவப்பு நிறம் உடைய பசுவின் பால் வாத ரோகத்தைப் போக்கும் . வெள்ளை நிறம் உடைய பசுவின் பால் பித்த ரோகத்தைப் போக்கும் . கபிலை நிறம் ( வெள்ளைப்புள்ளியும் கருஞ்சிவப்புபு நிறம் ) உள்ள பசுவின் பால் மூன்று ரோகங்களையும் நீக்குமாம் .
--- தினமலர் 15 .12. 2011.

Wednesday, March 21, 2012

பூஜைக்கு உரிய மலர்கள் !


பூஜைக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒரு சில மலர்கள் விசேஷம் என்பார்கள் . அதிகாலை பூஜைக்கு உரியவை -- புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .
காலை பூஜைக்கு உரியவை -- அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .
உச்சிகாலத்துக்கு உரியவை -- பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .
மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை -- மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து .
--- தினமலர் 15 .12. 2011.

Tuesday, March 20, 2012

தெரியுமா ? தெரியுமே !


* நாம் எப்படி தானாக மூச்சு விடுகிறோமோ அதுபோல்தான் கண் இமைக்கிறது . பொதுவாக எல்லாருக்கும் ஆறு வினாடிக்கு ஏழு முறை என்ற விகிதத்தில் கண் இமைத்தல் செயல் நடைபெறும் .
* சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 2,50,000 கொட்டாவிகள் விடுவதாகக் கண்டுபிடித்த்து இருக்கிறார்கள் . தாயின் வயிற்றில் கரு உருவான 70 -வது நாளில் இருந்து கொட்டாவி விட ஆரம்பிக்கிறோம் .
* இறந்தவர்களின் உடலோடு உறவுகொள்வதற்கு ' நெக்ரோஃபிலியா ' என்று பெயர் . மனோதத்துவ நிபுணர்கள் இதை நர மாமிசம் தின்பதைவிட ( Cannibalism ) மோசமான நிலையாகக் கருதுகிறார்கள்
* டிகிரிக்கு ஒன்று வீதம் 360 திசைகள் உள்ளன . டிகிரிக்குள் புகுந்து பார்த்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும் !
* ட்ராய் என்றால், டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிடி ஆஃப் இந்தியா என்று பொருள் .
* இந்தியாவின் தேசிய விளையாட்டு., ஹாக்கி .
* சந்தன கடத்தல் வீரப்பன் மகள்களின் பெயர்கள் : வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி .
* ஒரு கருவுக்கு உள்ளே இன்னொரு கரு வளராது . ஆனால், ஒரு வகை ஈ இருக்கிறது . அதில் ஆண் வர்க்கமே கிடையாது .பிறப்பது பெண் ஈதான் . பிறக்கும்போதே அதன் வயிற்றுக்குள் பெண் கரு இருக்கும் . அதாவது உடலுறவே இல்லாமல் அம்மா, மகள், பேத்தி... இப்படி !
* ' சாட்டிஸ்ட் ' என்றால் -- பிறருக்குத் துன்பத்தைத் தந்து அதில் மகிழ்கிறவர்கள் . அதற்கென்று வார்த்தைகூட எந்த மொழியிலும் இல்லை . ஜெர்மன் மொழியில் மட்டுமே அதற்கென்று வார்த்தை உண்டு -- ஷாடன்ஃப்ராய்டு ( Schadenfreude ) .
* முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய இன்ஜினீயர் -- பென்னி குய்க் .
* ஆதார் அட்டை என்றால் -- மத்திய அரசால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டை என்று பொருள் .

Monday, March 19, 2012

பறக்கும் கார் !


பறக்கும் கார் விரைவில் வருது !
பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கற்பனையாக உலா வந்த பறக்கும் கார், நனவாகப் போகிறது . அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ராபுயுஜியா டிரான்சிசன் என்ற நிறுவனம், பறக்கும் கார்களை இந்த ஆண்டில் உற்பத்தி செய்ய உள்ளன . அந்தக் காரில், வானத்தில் பறக்கலாம், தரையில் ஓட்டலாம் . வானத்தில் பறக்கும்போது, மணிக்கு 115 மைல் வேகத்தில் செல்லலாம் . காராக அதை மாற்றிக் கொண்டு தரையில் ஓட்டினால், மணிக்கு 65 மைல் வேகத்தில் செல்லும் .
வானத்தில் பறக்கும்போது அதன் சிறகுகள் நீண்டிருக்கும் . தரையில் ஓடும்போது, சிறகுகள் உள்மடங்கிக் கொள்ளும்; கொஞ்சம் பெரிய சைஸ் லாரி போல காட்சியளிக்கும் . இந்தக் காரை, பறக்கும் கார் என்று சுருக்க்மாக அழைக்கப்பட்டாலும், இந்தக் காரின் உண்மையான பெயர், டிரான்சிசன் ரோடபிள் லைட்ஸ்போட் ஏர்கிராப்ட் ( டி.ஆர்.எல்.எஸ்.ஏ ..)
இந்தக் காரின் விலை, ஒரு கோடி ரூபாயில் இருந்து 1.25 கோடி ரூபாய் வரை இருக்கும் . இந்தக் காரில் ஒருமுறை பெட்ரோல் நிரப்பி, 400 -- 450 மைல் தூரம் செல்லமுடியும் . கார்கள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விட்டன . இதுவரை, 28 முறை வெற்றிகரமாக பறந்து, தரையில் ஓடி சோதனையிடப்பட்டுள்ளது . இதில் எத்தனை பயணிகள் சீட் அமைக்கப்பட்டிருக்கும், ஒரு பைலட்டா, இரண்டு பைலட்டா என்பதெல்லாம் போகப்போகத்தான தெரியும் .பறந்துகொண்டிருக்கும்போது விமானம், தரையில் இறங்கியதும் 20 விநாடிகளில் காராக மாறிவிடும் .
--- தினமலர் 13 . 2. 2011.

Sunday, March 18, 2012

தெரியுமா உங்களுக்கு ?


* ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன்.......
* 06 என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் ( International Mobile Equipment Identity ) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும் . மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக்கண்டுபிடிக்கலாம் .
* உங்கள் நெட் வொர்க்கினைத் தண்டி விட்டீர்களா ? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது . இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும் .
---- தினமலர் , 3 . 1 . 2012 .