Sunday, December 11, 2011

மூளை சுறுசுறுப்பாக இருக்க .

மூளை சுறுசுறுப்பாக இருக்க மீன் எண்ணெய் சாப்பிடுங்க !.
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு மூளையில் ஏற்படும் பாதிப்பே காரணம் . மூளை பாதிக்கப்படுவதால் உடல் உறுப்புகள் செயல் இழக்கின்றன . இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார் லூசியானா பலகலைக்கழக டாக்டர் நிக்கோலஸ் பசான் . மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு மீன் எண்ணெய் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நிக்கோலஸ் .
மீன் எண்ணெயில் இருக்கும் டோகோசாக் ஷாயினிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் மூளையை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறதாம் . பக்கவாதம் ஏற்பட்ட 5 மணி நேரத்துக்குள் மீன் எண்ணெய் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்றும், 5 மணி நேரம் கழித்து மீன் எண்ணெய் சாப்பிட்டால் தாமதமாகத்தான் நிவாரணம் கிடைக்கும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
மீன் எண்ணெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலமான ஒமேகா 3, என்ற பொருளும் இதயத்தையும் மூளையையும் பாதுகாக்க உதவுகிறதாம் . குறிப்பாக ஒமேகா 3 அதிகம் சாப்பிட்டால் இதயபாதிப்பு மிகவும் குறையும் என்றும் ஆய்வுத்தகவல் சொல்கிறது .
--- தினமலர் .. நவம்பர் 12 .2010 .

No comments: