Monday, December 5, 2011

இசையும் வழிபாடும் !

உற்சவங்களில் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இசையைத்தான் வாசிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன ....
* உதய காலம் : பூபாளம், பவுளி, கோபிகா வசந்தம் .
* காலை நேரம் : பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
* நடுப்பகல் : ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோஹனம் .
* சந்தியா காலம் : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, பூர்விக கல்யாணி .
* இரவு : காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி .
* தீபாராதனை வேளை : மிஸ்ர மல்லாரி, தேவாரம், திருப்புகழ், அஷ்டபதி, திருப்பாவை .
* யாகசாலை வரை : மல்லாரி .
* யாகசாலை முதல் கோபுர வாசல் வரை : திரிபுடை மல்லாரி .
* கோவிலுக்குள் : துரிதகால திரிபுடை மல்லாரி .
* நிவேதன வேளை : தாளிகை மல்லாரி .
* கும்பம் எழுந்தருளல் செய்யும் போது : தீர்த்த மல்லாரி .
* ஸ்வாமி வீதியுலா வேளை : ராகம், தானம், பல்லவியுடன் கீர்த்தனைகள் .
* பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை : ஆனந்த பைரவி, கேதாரகௌளை .
* பள்ளியறைக்கு சேர்த்தபின் : நீலாம்பரி .
---- தினமலர் . நவம்பர் 11 .2010 .

No comments: