Friday, December 2, 2011

மன உளைச்சலா...

மன உளைச்சலா முக மசாஜ் போதும் !
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ நிபுணர்கள், மன உளைச்சல் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர் . மன உளைச்சலுக்கு மாத்திரை போடாமல் தீர்வு காணும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு " பேசியல் ரெப்ளக்சாலஜி " என்று பெயர் சூட்டி உள்ளனர் . இது வேறு ஒன்றும் இல்லை . முகத்தில் லேசாக மசாஜ் செய்வதுதான் .
மன உளைச்சலுக்கு ஆளானவர்களின் முகத்தில் கன்னம், தாடை, நெற்றியில் பட்டுத்துணியால் ஒற்றி எடுப்பது போல மெதுவாக குத்தியும் அழுத்தி தடவியும் மசாஜ் செய்வதுதான் பேசியல் ரெப்ளக்சாலஜி .
சீனாவின் அக்குபஞ்சர் முறையை பின்பற்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது . உடலின் அத்தனை உறுப்புகளின் நரம்புகளும் முகம் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன . எனவே இந்த நரம்புகளை தூண்டும் வகையில் இதமாக மசாஜ் செய்தால், மன உளைச்சல் போயே போய்விடும் . அழுத்தம் குறைந்து மனசு லேசாகிவிடும் . தூக்கம் கெட்டு அவதிப்படுபவர்கள் நன்றாக தூங்கமுடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .
--- தினமலர் 10 . 11 . 10 .

No comments: