Sunday, November 27, 2011

நீதி இருக்கிறது !

" ' தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா' ? "
" பல சமயங்களில் அது உண்மை . சில சமயங்களில் தாமதிக்கப்பட்டாலும், நீதி நியாயமாகவே அமைவதும் உண்டு . 1970 -ம் ஆண்டு ஆந்திராவில் போலீஸால் கொல்லப்பட்டவர் வர்கீஸ் என்ற நக்சலைட் . வர்கீஸைக் கொல்வது என்று போலீஸ் முடிவெடுத்தது . நடுக்காட்டில் வைத்து, ' யார் வர்கீஸைக் கொல்லப்போகிறீர்கள் ? ' என்று கேட்கப்பட்டது . அப்போது, அங்கே இருந்த ராமச்சந்திரன் நாயர் என்ற கான்ஸ்டபிள் மட்டும் கையை உயர்த்தவில்லை . ' சரி, வர்கீஸைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள் . நாளை செய்தித்தாளில் இப்படி செய்தி வர வேண்டும் . ' போலீஸ் -- தீவிரவாதி மோதல் . வர்கீஸ் சுட்டுக் கொலை . மோதலில் ஒரு போலீஸும் மரணமடைந்தார் .' இதைக் கேட்டு பதறிப்போன ராமச்சந்திரன் நாயரும் எங்கவுன் டருக்கு உடன்பட்டார் . பிறகு, தனது மனசாட்சி உறுத்த, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ராமச்சந்திரன் நாயர் எழுதிப் புகழ்பெற்ற புத்தகம், ' நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி '. இப்போது அந்த வழக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது . நடைபெற்றது போலி மோத்ல் என்றும், வர்கீஸின் மரணம் ஒரு கொலை என்றும் தீர்ப்பு அளித்துள்ள சி. பி. ஐ நீதிமன்றம் . என்கவுன்டருக்கு உததரவிட்ட போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது . இப்போது வர்கீஸும் இல்லை . ராமச்சந்திரன் நாயரும் இல்லை . ஆனால், நீதி இருக்கிறது .
வி.கி.சுந்தர், திருப்பூர். நானே கேள்வி... நானே பதில் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .

No comments: