Monday, November 21, 2011

ராஜராஜன் காலத்தில்...


* ராஜராஜ சோழனின் ராஜகுருவாக விளங்கியவர் ஈசான சிவ பண்டிதர் .
* தஞ்சைப் பெரிய கோயிலின் தலைமை அர்ச்சகராகத் திகழ்ந்தவர் பவணபிடாரன் .
* தஞ்சைக் கோயிலில் இன்றும் நாம் காணும் கல்வெட்டுகளை வெட்டியவர் பாளூர் கிழவன் .
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி, வீர சோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன் . அவரது உதவியாளர்கள் : மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் .
* ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் .
* மற்ற மன்னர்கள்போல் தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதித்து பெருமை கொண்டாடாமல், தனக்கு உதவிய அத்தனை பேரின் பெயரையும் பொறித்தது தமிழ்மன்னன் ராஜராஜனின் பெருந்தன்மை .
--' மாண்புமிகு மகான்கள் ' தொடரில், ப்ரியா கல்யாணராமன் . குமுதம் 3 . 11 . 10 ..

No comments: